தாய்ப்பால் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
Posted by Unknown on 9:49 AM with No comments
தாய்ப்பால் அவசியயம் குறித்த
விழிப்புணர்வு ஊர்வலம்
இந்தியாவில் தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட்
ஒன்று முதல் 7 வரை
அனைத்து நகரங்களிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. தாய்ப்பாலை வலியுறுத்தி
கொண்டாடும் இந்த கொண்டாட்டங்களுக்கு தற்போது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு தாய்ப்பாலின் அவசியம் குறித்து
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன்
வாயிலில் இருந்து மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தை பாரதிதாசன் பல்கலையின்
முன்னாள் துணை வேந்தர் டாக்டர் மீனா,
இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் தலைவர் டாக்டர் அஸ்ரப் உள்ளிட்டோர் துவக்கி
வைத்தனர். இந்த ஊர்வலத்தில் இன்னர்வீல் கிளப்பை சேர்ந்த பெண்களும், மருத்துவர்கள்
தேவநாதன், ஜஸ்டின், சேதுராமன், பிரபு இளங்கோ
மற்றும் திருச்சி விஸ்வநாதன் மருத்துவமனையின் மாணவிகளும், ஸ்ரீமதி இந்திரா
காந்தி கல்லூரியின் மாணவிகளும் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்
பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி இன்னர்
வீல் கிளப் ஏற்பாடு செய்திருந்தது. தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை
கையில் ஏந்தியபடி மாணவிகள் பங்கேற்றனர். ஊர்வலத்தின் முடிவில் திருச்சி
கி.ஆ.பெ.விஸ்வநாதன் பள்ளி சுந்தரம் அம்மாள் கலையரங்கத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு
கூட்டத்தில் சிறந்த தாய்ப்பால் விழிப்புணர்வு குறித்த வாசகங்களை எழுதிய
மாணவிகளுக்கு டாக்டர் மீனா பரிசுகள் வழங்கினார். பிறக்கும்போது தொப்புள்கொடி உறவு, பிறந்த பின்பு
தாய்ப்பால் உறவு என்ற வாசகத்திற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசை
திருச்சி விஸ்வநாதன் மருத்துவமனை மாணவியும்,
இரண்டாவது பரிசினை திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி மாணவியும்
தட்டிச்சென்றனர்.
விழிப்புணவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட
மருத்துவர்கள் தாய்ப்பால் உலகிலேயே கலப்படம் செய்ய முடியாத ஓர் உணவு என்றும் ஒரு
குழந்தைக்கு உலகிலேயே சிறந்த உணவும் அதுதான் என்றும், குழந்தை
பிறப்புக்குப் பிறகு, சில
நாட்கள் மார்பகங்கள் பாலைச் சுரப்பதில்லை. சீம்பாலைத்தான் சுரக்கின்றன. மஞ்சள்
நிறத்தில் இருக்கும் இதைக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது எனச் சில
முதியவர்கள் கூறுவார்கள். அதனால் முதல் மூன்று நாட்களுக்குத் தாய்ப்பால்
புகட்டக்கூடாது என்றும் கூறுபடுவது உண்டு. ஆனால், இது பெரும் தவறு. குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தும், நோய்த் தொற்றுகளை
எதிர்க்கும் நோய் எதிர்ப்பு ஊக்கிகளும் சீம்பாலில் அதிகம் இருப்பதால் அதைக்
கட்டாயம் புகட்ட வேண்டும் என்றனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக
அனைத்து மகளீர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜம்பகா ராமகிருஷ்ணன், டாக்டர் கவிதா, டாக்டர் சித்ரா, டாக்ட ரமணிதேவி
உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாரதிதாசன் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மீனா
பேசும்போது, தாய்ப்பால்
அருந்திய குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி மிகுதியாக இருக்கும். வரலாற்று சிறப்பு
மிக்க இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த இன்னர்வீல் சங்க நிர்வாகிகளை
பாராட்டுகின்றேன். இந்தியாவில் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம், காலம் காலமாக
இந்தியாவில் இருக்கிறது. இருப்பினும் தற்போதைய காலமாற்றத்தில் தாய்ப்பால் வழங்க
வேண்டும் என்பதை தாய் மார்களுக்கு சொல்லி செய்ய வேண்டியுள்ளது என்றார்.
தாய்ப்பால் விழிப்புணர்வு
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இன்னர்வீல் கிளப் செயலாளர் பார்கவிராஜாவும், தலைவர் அன்னம்
அண்ணாமலையும் சிறப்பாக செய்திருந்தனர்.
Categories: திருச்சி
0 comments:
Post a Comment