பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பாவிகள் 5பேர் கைது

Posted by Unknown on 4:30 AM with No comments
பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக  5பேரை கடலூர் மாவட்ட போலீசார் கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 5 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திட்டக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 மற்றும் 9ஆம் வகுப்பு படித்த, 13 மற்றும் 14 வயது நிரம்பிய 2 மாணவிகள் கடந்த 2 மாதங்களாக பள்ளிக்குச் செல்லாமல் தலைமறைவாகினர்.

இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திட்டக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், இந்த மாணவிகளை சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து போலீஸார், தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், வடலூரில் இந்த இரண்டு மாணவிகள் மற்றும் அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 7 பேரை பிடித்த திட்டக்குடி போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மீட்கப்பட்ட மாணவிகள் 2 பேரும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு கட்டுப்பாட்டில் உள்ள அரசு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட இரண்டு மாணவிகளில் ஒருவருக்கு தாய் இறந்துவிட்டார். தந்தை இரண்டாம் திருமணம் செய்துகொண்டதால் தன்னுடைய பாட்டி பராமரிப்பில் வசித்து வந்துள்ளார். மற்றொரு மாணவிக்கு பெற்றோர் இருக்கின்றனர்.

இந்த மாணவிகள் 2 பேரும் தோழிகள் என்றும், இதில் ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் காதலிப்பதாக கூறி, அழைத்துச் சென்று பாலியல் கும்பல் உதவியுடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும், அந்த மாணவி தன்னுடைய தோழியையும் இந்தத் தொழிலில் ஈடுபடுத்தியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


 பிடிபட்டுள்ள 7 பேரில் பாதிரியார் ஒருவரும் உள்ளார் எனக் கூறப்படுகிறது. பாலியல் தொழிலுக்கு பாதுகாப்பான இடம் தேவை என கருதியதால், பாதிரியார் உதவியை பாலியல் கும்பல் நாடியதாக கூறப்படுகிறது.

இரண்டு நாளாக தொடரும் விசாரணை: மீட்கப்பட்ட 2 மாணவிகளும் செவ்வாய்க்கிழமை அதிகாலை அரசு இல்லத்துக்கு போலீஸாரால் அழைத்து வரப்பட்டனர். இதன் மூலம் திங்கள்கிழமை பகலில் மாணவிகள் மீட்கப்பட்டிருக்கூடும் என்பது தெரியவருகிறது. இந்த மாணவிகளோடு கும்பலையும் பிடித்ததாக கூறும் போலீஸார் கடந்த 2 நாள்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். யாரையும் கைது செய்யவோ, விசாரணை விவரத்தையோ தெரிவிக்க மறுத்து வருகின்றனர்.


Categories: