பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் கோவை அதிரடி
Posted by Unknown on 9:00 AM with No comments
கோவை நகரில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 100 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.
கோவை மாநகராட்சியின் சாதாரணக் கூட்டத்தில் இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளது. மேயர் பொறுப்பு
வகிக்கும் லீலாவதி உன்னி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நகரை தூய்மையாக, சுத்தமாக வைத்திருக்கத் தேவையான பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி பொது இடத்தில் குப்பை கொட்டுதல்,
சிறுநீர் கழித்தல், எச்சில் துப்புதல், மலம் கழித்தல் போன்ற செயல்களில்
ஈடுபடுபவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.
பறவைகளின் தீனி கழிவுகளை ரோட்டில் கொட்டினால் ரூ.100, மாடுகளை நடுரோட்டில் குளிப்பாட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
வாகனங்களைக் கழுவினால் ரூ. 500 மோட்டார் சைக்கிள்களை கழுவினால் ரூ.500, வேன், கார்களை கழுவினால் ரூ.500, கனரக வாகனங்களை கழுவினால் ரூ.1000.
பாத்திரம் பண்டங்களைக் கழுவினாலும் அபராதம் சமையல் பாத்திரங்களை கழுவினால் ரூ.100, மருத்துவக் கழிவுகளை தரம் பிரிக்காமல் மாநகராட்சி
குப்பைதொட்டியில் போட்டால் ரூ.25 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும்.
குப்பைகளை உருவாக்குவோருக்கு ரூ.10 ஆயிரம், கட்டுமான இடிப்புகளை தரம் பிரிக்காமல்
ஒப்படைத்தால் ரூ.25 ஆயிரம்,
பொதுக்கூட்ட
நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை 24 மணி நேரத்தில் சுத்தம் செய்யாவிட்டால்
ரூ.25 ஆயிரம் என 24 இனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தீர்மானங்களுக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு
தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர் லதா, வருங்காலத்தில் கோவை சுகாதாரமான நகரமாக இருக்க வேண்டும் என்றால் இதுபோன்ற நடைமுறைகளை
பின்பற்ற வேண்டியது அவசியம். மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் இதுபோன்ற நடைமுறைகளை
பின்பற்ற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அவற்றை பின்பற்றினால் தான் மத்திய
அரசிடமிருந்து உரிய நிதியை பெறமுடியும் என்று விளக்கினார்.
Categories: தமிழகம்
0 comments:
Post a Comment