திருச்சி தீவிபத்து 4பேர் பலி
Posted by Unknown on 10:42 AM with No comments
இன்று அதிகாலை 3 குடிசைகள் எரிந்து சாம்பலானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன்,மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேர் உடல் கருகி பலியானார்கள்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள இந்திராகாந்தி நகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் அதிகாலை 3.30 மணிக்கு மின்கம்பத்தில் இருந்து வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்பில் கசிவு ஏற்பட்டுள்ளது. இற்த மின்கசிவால் குடிசை பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

காற்று பலமாக வீசியதால் தீ மற்ற குடிசைக்ளுக்கும் பரவியுள்ளது. இதில் தொடர்ச்சியாக உள்ள 3 குடிசைகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்த்து. முதல் வீட்டில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் பக்கத்து அறையில் பதுங்கியுள்ளனர்.
அப்பகுதி மக்கள் தீயை அணைக்கு போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அவர்களை காப்பாற்ற முடியாமல திணறியுள்ளனர்.
ஆனால் குடிசை முழுவதும் எரிந்து வீட்டின் உள்ளே விழுந்ததால் வீட்டில் பதுங்கி இருந்த கூலி தொழிலாளி முருகன்(42), மனைவி சித்ரா(33), குழந்தைகள் காவியா(8),தேவி(5) நான்கு பேரும் வெளியே வரமுடியாமல் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அச்சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.
மேலும் இந்த தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த எடமலைப்பட்டி பதூர் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் நேரில் ஆய்வு செய்தார்
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள இந்திராகாந்தி நகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் அதிகாலை 3.30 மணிக்கு மின்கம்பத்தில் இருந்து வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்பில் கசிவு ஏற்பட்டுள்ளது. இற்த மின்கசிவால் குடிசை பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

காற்று பலமாக வீசியதால் தீ மற்ற குடிசைக்ளுக்கும் பரவியுள்ளது. இதில் தொடர்ச்சியாக உள்ள 3 குடிசைகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்த்து. முதல் வீட்டில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் பக்கத்து அறையில் பதுங்கியுள்ளனர்.
அப்பகுதி மக்கள் தீயை அணைக்கு போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அவர்களை காப்பாற்ற முடியாமல திணறியுள்ளனர்.
ஆனால் குடிசை முழுவதும் எரிந்து வீட்டின் உள்ளே விழுந்ததால் வீட்டில் பதுங்கி இருந்த கூலி தொழிலாளி முருகன்(42), மனைவி சித்ரா(33), குழந்தைகள் காவியா(8),தேவி(5) நான்கு பேரும் வெளியே வரமுடியாமல் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அச்சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.
மேலும் இந்த தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த எடமலைப்பட்டி பதூர் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் நேரில் ஆய்வு செய்தார்
Categories: திருச்சி
0 comments:
Post a Comment