திருச்சி பத்திரிக்கையாளரின் சதுரங்க வேட்டை

Posted by Unknown on 1:02 PM with No comments
திருச்சி  பத்திரிக்கையாளரின் சதுரங்க வேட்டை
பாரம்பரியமிக்க ஆங்கில பத்திரிக்கையின் புதிய தமிழ்பத்திரிக்கையின் திருச்சி பதிப்பின் பத்திரிக்கையின் உதவி ஆசிரியராக இருப்பவர் முருக கடவுளின் பெயரை கொண்டவர்.

இவர் தினபூமியில் புகைப்பட கலைஞராக அறிமுகமாகி இன்று உதவி ஆசிரியராக வளர்ந்தும் இருக்கிறார்.

தான் வளர்வதற்கு யாரையும் பலி கொடுக்கலாம் என்கிற தத்துவார்த்த சிந்தனையோடு வளர்ந்தவர் என்கிறார்கள் அவரைப்பற்றி நன்கு அறிந்தவர்கள்.

இவருடைய காய் நகர்த்தல்களால் வாய்ப்பு இருந்தும் மறுதலிக்கப்பட்டவர்கள் பலபேர்.
இவரின்  பதவி உதவி ஆசிரியராக இருந்தாலும், வாரந்தோறும் நிருபர்களை போலவே திங்கள் கிழமை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்ப்பு நாள் கூட்டங்களுக்கு தவறாமல்  ஆஜர் ஆகி என்ன மனுவந்திருக்கு, யார் கொடுக்கிறார்கள், இது தான் முக்கியமான மனு.... என்னா நடவடிக்கை என்று அங்குலம் அங்குலமாக ஆராய்ந்துவிட்டு தான் செல்வார்.

எதற்கு இந்த படையெடுப்பு , யாரை வீழ்த்த இந்த அபிலாசம் என்பது அவருக்கே வெளிச்சம்.

தன்னோட நண்பன் , அந்த பத்திரிக்கையின் உயர் பதவியில் இருப்பதால் தன்னுடைய வேட்கைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் இப்போது பல நாள் ஆக்டிங் செய்தி ஆசியராகவே செயல்படுகிறார்.
எப்படியோ வாழ்த்துகள் . வருங்கால செய்தி ஆசிரியருக்கு....
சதுரங்க வேட்டை ஆரம்பம் சரவணா.