பருவநிலைக்கேற்ப விவசாயம் செய்தால் நல்லது- க்ளைமா அடாப்ட் ஆய்வுக்குழு தகவல்
Posted by Unknown on 1:19 PM with No comments
பருவநிலைக்கேற்ப விவசாயம் செய்தால் நல்லது- க்ளைமா அடாப்ட் ஆய்வுக்குழு தகவல்

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் முனைவர்
வெ.கீதாலட்சுமி, முனைவர்
அ.லட்சுமணன், பொதுப்பணித்துறையின்
நீர்வள ஆதாரத்துறை சார்பில் திருச்சி அ.மீனாட்சி சுந்தர அரசு உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
க்ளைமா அடாப்ட் அமைப்பை சேர்ந்த இவர்கள் தமிழகத்தில் பருவநிலை
மாற்றங்களுக்கேட்ப விவசாயத்தில் புதிய கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்வது, விவசாயிகள் பயன்படுத்தும் நீரின் பயன்பாட்டு
திறனை அதிகப்படுத்தவும், பருவ நிலை மாற்றத்தால்
விவசாயத்தில் உண்டாகும் பாதிப்பை குறைப்பது தொடர்பாகவும், மகசூலை அதிகரிக்கக்கூடிய வழிமுறைகள் குறித்தும்
ஆய்வு செய்துகொண்டிருப்பதாக தெரிவித்தனர்.
தற்போது பூமி வெப்பமடைந்து வருகின்றது. கால நிலை மாறுதல், தொழிற்சாலைகளில் இருந்து எழும் புகை, வாகனப்பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால்
அவை வெளிப்படுத்தும் புகை இதனால் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு சராசரி மழை
பெய்யாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பூமி வெப்பமடைந்து வருகின்றது. கடந்த
காலகட்டங்களை காட்டிலும் தற்போது கூடுதல் மழை பொழிகின்றது. கடந்த காலங்களில் மழை
சராசரியாக பருவ நிலையில் அதாவது சுமார் 55, 60 நாட்கள் என்று தவறாது பெய்து வந்த மழை மாறி
தற்போது 60 நாட்கள்
பெய்யும் மழை 10 நாட்களில்
அடித்து ஓய்ந்து விடுகின்றது. இதனால் பூமி சராசரி குளுமையில் இருந்து மாறுபட
வெப்பமயமாகின்றது பூமியின் மேற்பரப்பு. இதனால் விவசாயத்தில் பல்வேறு மாறுதல்கள்
நடக்கின்றன. முறையாக தண்ணீர் கிடைக்காததால் எங்கும் வறட்சி நிலவுகின்றது.
இந்தக் காலக்கட்டத்தில் விவசாயம் செழிக்க பூமி குளிரவேண்டும். அதற்கு தற்போது
சாத்தியமில்லை, இருக்கும் நீரை
வைத்து விவசாயத்தை பெருக்கவும், காலநிலைக்கேற்ப
மகசூலை பெருக்கவும், வரும் காலங்களில்
காலநிலை மாற்றத்திற்கேற்ப தகவமைப்பு முறைகளுக்கான புதிய கொள்கைகளை உருவாக்கி அதில்
விவசாயிகள் மற்றும் பெண்கள் உள்ளடக்கிய பயனீட்டாளர்களுக்கு திறன் மேம்பாட்டு
பயிற்சியளித்து அவற்றை பின்பற்ற செய்ய க்ளைமா அடாப்ட் திட்டம் வகுத்திருப்பதாகவும்
தெரிவித்தனர்.
காலநிலைக்கேற்ப தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் காளிங்கராயன் பாசனப் பகுதியை
சார்ந்த விவசாயிகளுக்கும், திருச்சி
பகுதியில் பொன்னனையார் பாசனப்பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கும் முதல் கட்டமாக
பயிற்சியும், ஆராய்ச்சி
குறித்த திறன் மேம்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களை வேளாண்
மற்றும் நீர்ப்பாசனத்துறைகளில் நடைபெறும் ஆராய்ச்சியில் இணைப்பதற்கான முயற்சியில்
ஈடுபடுவதாகவும், மேலும் தற்போதைய
பூமி வெப்பமயமானதன் விளவாக பருவத்திற்கேற்ப திணை, சாமை, குதிரைவாலி போன்ற சிறுதானிய வகைகளையும், கோ-41, எம்.டி.யூ.5, அஞ்சலி, பிரசன்னா போன்ற நெல் வகைகளையும் பயிரிடச்செய்து
விவசாயிகளின் மகசூலை பெருக்கவும் திட்டம் வகுத்துள்ளதாக குறிப்பிட்டனர்.
மேலும் பருவநிலை மாற்றத்தால் விவசாயிகள் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை எளிமையாக
அடைவது, அவற்றை தடுப்பது
மற்றும் இயற்கை சார்ந்த நுண்ணுயிர்களை உரமாக பயன்படுத்த வைப்பது நீரின் அளவைக்
குறைத்து மகசூலை பெருக்குவது போன்ற எதிர்கால திட்டங்கள் குறித்தும் விளக்கினர்.
விவசாயம் குறித்த அறிவியல் ஆராய்ச்சிகள் ஒருபுறம் நடக்க, பெரும்பாலும் கல்வியறிவில்லாத விவசாயிகள்
ஒருபுறம் கஷ்ட்டப்பட்டுக் கொண்டிருக்க, என்பது போல் இல்லாமல் அறிவியலாளர்கள் விவசாயிகளிடமே போய் தங்களின்
ஆராய்ச்சிகளையும் அவற்றின் பலன்களையும் விளக்கமளிப்பது நல்ல முயற்சியே!
Categories: திருச்சி
0 comments:
Post a Comment