என்னை முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேர்முக உதவியாராக நரேந்திரமோடி நியமித்துள்ளார் டுபாகூர் ஐ.ஏ.ஏஸ் வாக்குமூலம்
Posted by Unknown on 7:30 AM with No comments
தமிழகத்தின்
முதல்வர் ஜெயலலிதா கையில் இருக்கிறது காவல்துறை. அதனால்தான் அவர் பலமுறை தமிழகம்
பாதுகாப்பாக இருக்கிறது சட்டம் ஒழுங்கு சூப்பராக இருக்கிறது என அடிக்கடி கூறிவருகின்றார். அந்த தைரியத்தால்
என்னவோ தமிழகத்தில் பல இடங்களில் போலி அதிகாரிகள் சிக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.
கடந்த
சில நாட்களுக்கு முன் திருச்சியில் போலி எஸ்.ஐ வினோத் குமார் சிக்கினார். இப்படி பல இடங்களில் போலி அதிகாரிகள்
சிக்கிவரும் நிலையில் முதலமைச்சர்
கையெழுத்து போட்ட அடையாள அட்டையுடனும், தன்னை ஜெயலலிதாவுக்கு நேர்முக உதவியாளராக
இந்திய பிரதமர் நரேந்திரமோடி நியமித்திருப்பதற்கான மோடி கையெழுத்துப்போட்ட பணி
ஆணையும் வைத்திருந்த போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி அருணாவை கைது செய்துள்ளது சேலம் மாவட்டம் எடப்பாடி காவல்துறை
முதலில்
போலி பெண் போலிஸ்
நெல்லை
மாவட்டத்தில் போலீஸ் அதிகாரிபோல சுற்றிவந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்...
திருப்புவனம்
கீழரத வீதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருபவர் முனியசாமி என்பவரின் மனைவி
ஜான்சிராணி . பிஎஸ்சி பட்டதாரியான இவர்
திருப்புவனத்தில் உள்ள சுதா ஜுவல்லர்ஸ் என்கிற நகைகடையில், தான் திண்டுக்கல்லில் பெண் இன்ஸ்பெக்டராக இருப்பதாக
கூறி அறிமுகப்படுத்திக்கொண்டார். னக்கு நகை வேண்டும் என கூறி கடந்த மே மாதம் ஒரு
பவுன் செயின், ஒரு ஜோடி கொலுசு, வெள்ளி
அரை ஞான் கயிறு, அரை பவுன் தோடு, அரை
பவுன் மோதிரம் வாங்கியுள்ளார்.
இவற்றின்
மொத்த மதிப்பு ரூ. 49,000. இதில் ரூ. 10,000 மட்டும் கொடுத்துவிட்டு மீதி அடுத்து
வரும்போது தருவதாக கூறியுள்ளார். ஆனால் சொன்னபடி தரவில்லை.நகை கடை உரிமையாளர்
கண்ணன் கேட்டதற்கு இன்ஸ்பெக்டரிடமே பணம் கேட்கிறாயா என மிரட்டியுள்ளார்.
ஜெயலலிதாவின்
நேர்முக உதவியாளர் அருனாதேவி
சேலம்
மாவட்டம் எடப்பாடி மேட்டுத் தெருவை சேர்ந்தவர் கதிரவன் .இவரும் இவரது வீட்டிற்கு
அருகில் வசித்து வரும் சுப்பிரமணியத்தின் மகனான சீனிவாசனுக்கும் இடையே நடைபாதை
குறித்து பிரச்சினை இருந்து வந்தது. நேற்று மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு
ஏற்படவே கதிரவன் எடப்பாடி போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில்,என்னை
சீனிவாசன் மிரட்டினார். அவரது மனைவி ஐ.ஏ.எஸ் படித்து விட்டு சென்னையில் கலெக்டராக
பணிபுரிவதாகவும், கலெக்டர் அதிகாரத்தை பயன்படுத்தி என் மீது கடுமையான
நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மிரட்டல் விடுத்து வருகிறார். இது குறித்து
விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என புகார் மனுவில் அவர் கூறி இருந்தார்.
அவரது
புகாரின் பேரில் சீனிவாசன் மற்றும் அவரது மனைவி அருணாதேவி ஆகியோர் குறித்து
எடப்பாடி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு சப்–இன்ஸ்பெக்டர்
பாலசுப்பிரமணியம் ஆகியோர் விசாரித்தனர். விசாரணையில் அருணாதேவி போலியாக அடையாள
அட்டை தயாரித்து கலெக்டராக நடித்து ஏமாற்றி வந்தது தெரியவந்தது.
பின்னர்
அருணாதேவி வீட்டுக்கு போலீசார் சென்றனர். அப்போது ஜன்னல் வழியாக ஒரு லெட்டர் பேடை
அருணாதேவி தூக்கி வீசினார். அதில் தமிழக முதல்– அமைச்சரின்
சிறப்பு நேர்முக உதவியாளராக அருணாதேவி ஐ.ஏ.எஸ்.சை கடந்த ஆகஸ்டு மாதம் முதல்
நியமிப்பதாக மத்திய அரசிடம் இருந்து உத்தரவு வந்தது போல உள்ள போலி கடிதம் இருந்தது.
அந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். பின்னர் அருணாதேவியை கைது செய்து
விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் அருணாதேவி,
நான்
உடுமலை பேட்டை பகுதியை சேர்ந்தவர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி பகுதியை
சேர்ந்த சீனிவாசனை ஒரு பஸ் பயணத்தில் சந்தித்தேன். அவர் மேல் காதல் ஏற்பட்டு அவரை
கல்யாணம் செய்து எடப்பாடி பகுதியில் உள்ள மேட்டு தெருவில் வசித்து வந்தோம்.
பி.எஸ்.சி
படித்துள்ள நானும் பி.சி.ஏ படித்துள்ள எனது கணவரும் சேர்ந்து எடப்பாடி – பூலாம்பட்டி
சாலையில் கம்யூட்டர் பிரவுசிங் சென்டர் வைத்து நடத்தி வந்தோம். அங்கு அடையாள
அட்டையை பலருக்கு தயாரித்து கொடுத்தோம். இந்த நிலையில் அந்த பிரவுசிங் சென்டரில்
நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வீட்டில் என்னை வேலையில்லாத பட்டதாரியாக யாரும் நினைத்து
விடக்கூடாது என்று நினைத்து நான் ஐ.ஏ.எஸ். படித்து கலெக்டராக சென்னையில்
பணிபுரிவதாக போலியாக அடையாள அட்டை தயாரித்தேன். அந்த அட்டையை காண்பித்து எனது
கணவரிடமும் மற்ற உறவினர்களிடமும் பொய் பேசியதுடன் வெளியில் பல லட்சம் கடன் வாங்கி
மாதா மாதம் சம்பளமாக வீட்டிற்கு கொடுத்து வந்தேன். வீட்டில் இருப்பவர்களுக்கு
சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அடிக்கடி சென்னை மற்றும் ஐதராபாத் செல்வதாக கூறி
வெளியில் சென்று தங்கி வந்தேன் என்று அருணாதேவி கூறினார்.
கைதான
அருணாதேவி வெளியில் ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கி அதை தனக்கு கிடைத்த சம்பளமாக
கணவர் மற்றும் மாமனார் சுப்பிரமணியம் ஆகியோரிடம் கொடுத்து வந்து உள்ளார். அவர்
யார்–யாரிடம்
கடன் வாங்கி உள்ளார் என்றும் விசாரணை நடந்து வருகிறது. அவரிடம் இருந்து சென்னை
கலெக்டர் என்று போலியாக அச்சிடப்பட்ட அடையாள அட்டையையும் போலீசார் கைப்பற்றி
உள்ளனர்.
சென்னை
கலெக்டர் என்று போலி ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக நடித்து தனது குடும்பத்தினரை ஏமாற்றிய
அருணாதேவி வேறு யாரையும் ஏமாற்றினாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவர் வைத்து இருந்த அடையாள அட்டையில் முதல் –அமைச்சர் ஜெயலலிதா
கையெழுத்து இருப்பது போல தயாரித்து உள்ளார்.
இதேபோல
போலீசார் அருணாதேவி வீட்டுக்கு விசாரணை நடத்த வந்த போது அவர் ஜன்னல் வழியாக ஒரு
லெட்டர் பேடை தூக்கி வீசினார். அதில் ஆகஸ்டு மாதம் 1–ந்
தேதி முதல் முதல் –அமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக
அருணாதேவி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்படுவதாக கூறப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தில்
பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டு இருப்பது போல போலியாக இவரே கையெழுத்து
போட்டு இருந்தார். இந்த லெட்டர்பேடு மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை போலீசார்
கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.
பொருட்களில்
மட்டுமல்ல அதிகாரிகளிடமும் போலிகள் வருகிறது எச்சரிக்கை மக்களே
தமிழகத்தின்
முதல்வர் ஜெயலலிதா கையில் இருக்கிறது காவல்துறை. அதனால்தான் அவர் பலமுறை தமிழகம்
பாதுகாப்பாக இருக்கிறது சட்டம் ஒழுங்கு சூப்பராக இருக்கிறது என அடிக்கடி கூறிவருகின்றார். அந்த தைரியத்தால்
என்னவோ தமிழகத்தில் பல இடங்களில் போலி அதிகாரிகள் சிக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.
கடந்த
சில நாட்களுக்கு முன் திருச்சியில் போலி எஸ்.ஐ வினோத் குமார் சிக்கினார். இப்படி பல இடங்களில் போலி அதிகாரிகள்
சிக்கிவரும் நிலையில் முதலமைச்சர்
கையெழுத்து போட்ட அடையாள அட்டையுடனும், தன்னை ஜெயலலிதாவுக்கு நேர்முக உதவியாளராக
இந்திய பிரதமர் நரேந்திரமோடி நியமித்திருப்பதற்கான மோடி கையெழுத்துப்போட்ட பணி
ஆணையும் வைத்திருந்த போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி அருணாவை கைது செய்துள்ளது சேலம் மாவட்டம் எடப்பாடி காவல்துறை
முதலில்
போலி பெண் போலிஸ்
நெல்லை
மாவட்டத்தில் போலீஸ் அதிகாரிபோல சுற்றிவந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்...
திருப்புவனம்
கீழரத வீதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருபவர் முனியசாமி என்பவரின் மனைவி
ஜான்சிராணி . பிஎஸ்சி பட்டதாரியான இவர்
திருப்புவனத்தில் உள்ள சுதா ஜுவல்லர்ஸ் என்கிற நகைகடையில், தான் திண்டுக்கல்லில் பெண் இன்ஸ்பெக்டராக இருப்பதாக
கூறி அறிமுகப்படுத்திக்கொண்டார். னக்கு நகை வேண்டும் என கூறி கடந்த மே மாதம் ஒரு
பவுன் செயின், ஒரு ஜோடி கொலுசு, வெள்ளி
அரை ஞான் கயிறு, அரை பவுன் தோடு, அரை
பவுன் மோதிரம் வாங்கியுள்ளார்.
இவற்றின்
மொத்த மதிப்பு ரூ. 49,000. இதில் ரூ. 10,000 மட்டும் கொடுத்துவிட்டு மீதி அடுத்து
வரும்போது தருவதாக கூறியுள்ளார். ஆனால் சொன்னபடி தரவில்லை.நகை கடை உரிமையாளர்
கண்ணன் கேட்டதற்கு இன்ஸ்பெக்டரிடமே பணம் கேட்கிறாயா என மிரட்டியுள்ளார்.
ஜெயலலிதாவின்
நேர்முக உதவியாளர் அருனாதேவி
சேலம்
மாவட்டம் எடப்பாடி மேட்டுத் தெருவை சேர்ந்தவர் கதிரவன் .இவரும் இவரது வீட்டிற்கு
அருகில் வசித்து வரும் சுப்பிரமணியத்தின் மகனான சீனிவாசனுக்கும் இடையே நடைபாதை
குறித்து பிரச்சினை இருந்து வந்தது. நேற்று மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு
ஏற்படவே கதிரவன் எடப்பாடி போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில்,என்னை
சீனிவாசன் மிரட்டினார். அவரது மனைவி ஐ.ஏ.எஸ் படித்து விட்டு சென்னையில் கலெக்டராக
பணிபுரிவதாகவும், கலெக்டர் அதிகாரத்தை பயன்படுத்தி என் மீது கடுமையான
நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மிரட்டல் விடுத்து வருகிறார். இது குறித்து
விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என புகார் மனுவில் அவர் கூறி இருந்தார்.
அவரது
புகாரின் பேரில் சீனிவாசன் மற்றும் அவரது மனைவி அருணாதேவி ஆகியோர் குறித்து
எடப்பாடி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு சப்–இன்ஸ்பெக்டர்
பாலசுப்பிரமணியம் ஆகியோர் விசாரித்தனர். விசாரணையில் அருணாதேவி போலியாக அடையாள
அட்டை தயாரித்து கலெக்டராக நடித்து ஏமாற்றி வந்தது தெரியவந்தது.
பின்னர்
அருணாதேவி வீட்டுக்கு போலீசார் சென்றனர். அப்போது ஜன்னல் வழியாக ஒரு லெட்டர் பேடை
அருணாதேவி தூக்கி வீசினார். அதில் தமிழக முதல்– அமைச்சரின்
சிறப்பு நேர்முக உதவியாளராக அருணாதேவி ஐ.ஏ.எஸ்.சை கடந்த ஆகஸ்டு மாதம் முதல்
நியமிப்பதாக மத்திய அரசிடம் இருந்து உத்தரவு வந்தது போல உள்ள போலி கடிதம் இருந்தது.
அந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். பின்னர் அருணாதேவியை கைது செய்து
விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் அருணாதேவி,
நான்
உடுமலை பேட்டை பகுதியை சேர்ந்தவர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி பகுதியை
சேர்ந்த சீனிவாசனை ஒரு பஸ் பயணத்தில் சந்தித்தேன். அவர் மேல் காதல் ஏற்பட்டு அவரை
கல்யாணம் செய்து எடப்பாடி பகுதியில் உள்ள மேட்டு தெருவில் வசித்து வந்தோம்.
பி.எஸ்.சி
படித்துள்ள நானும் பி.சி.ஏ படித்துள்ள எனது கணவரும் சேர்ந்து எடப்பாடி – பூலாம்பட்டி
சாலையில் கம்யூட்டர் பிரவுசிங் சென்டர் வைத்து நடத்தி வந்தோம். அங்கு அடையாள
அட்டையை பலருக்கு தயாரித்து கொடுத்தோம். இந்த நிலையில் அந்த பிரவுசிங் சென்டரில்
நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வீட்டில் என்னை வேலையில்லாத பட்டதாரியாக யாரும் நினைத்து
விடக்கூடாது என்று நினைத்து நான் ஐ.ஏ.எஸ். படித்து கலெக்டராக சென்னையில்
பணிபுரிவதாக போலியாக அடையாள அட்டை தயாரித்தேன். அந்த அட்டையை காண்பித்து எனது
கணவரிடமும் மற்ற உறவினர்களிடமும் பொய் பேசியதுடன் வெளியில் பல லட்சம் கடன் வாங்கி
மாதா மாதம் சம்பளமாக வீட்டிற்கு கொடுத்து வந்தேன். வீட்டில் இருப்பவர்களுக்கு
சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அடிக்கடி சென்னை மற்றும் ஐதராபாத் செல்வதாக கூறி
வெளியில் சென்று தங்கி வந்தேன் என்று அருணாதேவி கூறினார்.
கைதான
அருணாதேவி வெளியில் ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கி அதை தனக்கு கிடைத்த சம்பளமாக
கணவர் மற்றும் மாமனார் சுப்பிரமணியம் ஆகியோரிடம் கொடுத்து வந்து உள்ளார். அவர்
யார்–யாரிடம்
கடன் வாங்கி உள்ளார் என்றும் விசாரணை நடந்து வருகிறது. அவரிடம் இருந்து சென்னை
கலெக்டர் என்று போலியாக அச்சிடப்பட்ட அடையாள அட்டையையும் போலீசார் கைப்பற்றி
உள்ளனர்.
சென்னை
கலெக்டர் என்று போலி ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக நடித்து தனது குடும்பத்தினரை ஏமாற்றிய
அருணாதேவி வேறு யாரையும் ஏமாற்றினாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவர் வைத்து இருந்த அடையாள அட்டையில் முதல் –அமைச்சர் ஜெயலலிதா
கையெழுத்து இருப்பது போல தயாரித்து உள்ளார்.
இதேபோல
போலீசார் அருணாதேவி வீட்டுக்கு விசாரணை நடத்த வந்த போது அவர் ஜன்னல் வழியாக ஒரு
லெட்டர் பேடை தூக்கி வீசினார். அதில் ஆகஸ்டு மாதம் 1–ந்
தேதி முதல் முதல் –அமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக
அருணாதேவி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்படுவதாக கூறப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தில்
பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டு இருப்பது போல போலியாக இவரே கையெழுத்து
போட்டு இருந்தார். இந்த லெட்டர்பேடு மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை போலீசார்
கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.
பொருட்களில்
மட்டுமல்ல அதிகாரிகளிடமும் போலிகள் வருகிறது எச்சரிக்கை மக்களே
Categories: தமிழகம்
0 comments:
Post a Comment