ஆகஸ்ட் 15-ல் தீக்குளிப்பேன் எச்சரிக்கும் எம்.எல்.ஏ.

Posted by Unknown on 8:30 AM with No comments

பீகாரை வறட்சி மாநிலமாக அறிவிக்கவில்லை என்றால் ஆகஸ்ட் 15-ல் தீக்குளிப்பேன் என்று உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள அம்மாநில எம்.எல்.ஏ. தினேஷ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பீகார் மாநிலம் ஜெகதிஷ்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தினேஷ் குமார் பீகாரை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். தினேஷ் குமார் சிங் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ. ஆவார். அவர் பீகாரை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி, அம்மாநில முதல் மந்திரியின் அலுவலகத்திற்கு வெளியே கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார். அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததை அடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் தினேஷ் குமார் அதனை நிராகரித்து விட்டார். இதனையடுத்து போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அங்கும் தினேஷ் குமார் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். "பீகார் மாநில பொருளாதாரம் விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ளது. மழை பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறேன். மழை இல்லாததால் விவசாயிகள் மிகுந்த வறுமையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், அரசு அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை." என்று தினேஷ் குமார் கூறியுள்ளார். மேலும், வரும் வியாழன் கிழமை (இன்று) பீகார் மாநிலத்தை வறட்சி மிகுந்த மாநிலமாக அறிவிக்காவிட்டால், அதற்கு அடுத்த நாளான சுதந்திரத் தினத்தன்று தீக்குளிப்பேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாட்னா, பீகாரை வறட்சி மாநிலமாக அறிவிக்கவில்லை என்றால் ஆகஸ்ட் 15-ல் தீக்குளிப்பேன் என்று உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள அம்மாநில எம்.எல்.ஏ. தினேஷ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பீகார் மாநிலம் ஜெகதிஷ்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தினேஷ் குமார் பீகாரை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். தினேஷ் குமார் சிங் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ. ஆவார். அவர் பீகாரை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி, அம்மாநில முதல் மந்திரியின் அலுவலகத்திற்கு வெளியே கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார். அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததை அடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் தினேஷ் குமார் அதனை நிராகரித்து விட்டார். இதனையடுத்து போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அங்கும் தினேஷ் குமார் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். "பீகார் மாநில பொருளாதாரம் விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ளது. மழை பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறேன். மழை இல்லாததால் விவசாயிகள் மிகுந்த வறுமையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், அரசு அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை." என்று தினேஷ் குமார் கூறியுள்ளார். மேலும், வரும் வியாழன் கிழமை (இன்று) பீகார் மாநிலத்தை வறட்சி மிகுந்த மாநிலமாக அறிவிக்காவிட்டால், அதற்கு அடுத்த நாளான சுதந்திரத் தினத்தன்று தீக்குளிப்பேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Categories: