கல்வி உரிமை மாநாட்டிற்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு ? கவலையில் சிறுத்தைகள்

Posted by Unknown on 11:00 AM with No comments

கல்வி உரிமை மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் சேலத்தில் கல்வி உரிமை மாநாடு வருகிற 17–ந்தேதி நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.

இதற்காக சேலத்தை அடுத்த கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 60 ஏக்கர் இடத்தை தேர்வு செய்தனர்.

அந்த இடத்தில் மாநாடு நடத்த சேலம் மாவட்ட போலீஸ் எஸ்.பியிடம் சேலம் மாவட்ட விடுதலை சிறுத்தை தலைவர் நாவரசன் அனுமதி கேட்டார்.

அங்கு மாநாடு நடத்த போலீசார் அனுமதி வழங்கவில்லை. மாநில அளவில் மாநாடு நடத்த அனுமதி கிடையாது. மாநாட்டிற்கு வரும் வழியில் அசாம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.

எனவே இதற்கு அனுமதி தர இயலாது. மாவட்ட மாநாடு நடத்தினால் அனுமதி வழங்கப்படும் என்று போலீஸ் தரப்பில் காரணம் கூறப்பட்டது.

இதையடுத்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சேலம் மாவட்ட தலைவர் நாவரசன் கல்வி உரிமை மாநாடு நடத்த அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் இன்று ஒரு மனு தாக்கல் செய்தார். மற்றொரு ரிட் மனுவை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:–
சேலத்தை அடுத்த கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் கல்வி உரிமை மாநாடு விடுதலை சிறுத்தை கட்சியின் மாணவர் பிரிவு சார்பில் நடத்த திட்டமிட்டுள்ளோம். அங்கு மாநாடு நடத்த போலீஸ் அனுமதிக்கவில்லை. தடை விதித்து இருக்கிறது.
தடை விதிக்க போலீசுக்கு அதிகாரம் கிடையாது. அந்த இடத்தில் தே.மு.தி.க., அ.தி.மு.க. பொதுக் கூட்டம் நடத்தியுள்ளது. அதே இடத்தில்தான் நாங்கள் கல்வி உரிமை மாநாடு நடத்துகிறோம்.

பொது நோக்கத்திற்காக அடிப்படை உரிமைக்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. எனவே திட்டமிட்டப் படி 17–ந்தேதி மாநாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் அவர் கூறியுள்ளார்.

இந்த மனுவை அவசரமாக கருதி விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பு வக்கீல் பிரபாகரன் வலியுறுத்தினார். இந்த மனுக்கள் நாளை (புதன்கிழமை) நீதிபதி ராம சுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
Categories: