போராடும் அதிமுகவினரிடம் சில கேள்விகள்

Posted by Unknown on 7:15 AM with No comments
இன்றைய “தினமலர்” நாளேட்டில், “இது உங்கள் இடம்” பகுதியில், “அ.தி.மு.க. வினரிடம் சில கேள்விகள்” என்ற தலைப்பில் சாரதா வைத்யநாதன் எழுதியிருப்பதின் சுருக்கமாவது :- 

“அ.தி.மு.க. தொண்டர்கள் என்கிற போர்வையில் தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்ய முயன்றவர்களைப் பற்றி நினைத்தாலே அருவருப்பாய் இருக்கிறது.இந்த வரைமுறை இல்லா வன்முறையில், ஆளுங்கட்சியிடமே சில சந்தேகக் கேள்விகள் -

1.ஜெயலலிதா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால் உங்களுக்கு யார் மீது கோபம்? தீர்ப்பைக் கொடுத்த நீதிபதி மீதா?அல்லது வழக்கைத் தொடுத்தவர் மீதா?

2. உங்கள் தலைவர் குற்றம் புரிந்தது நிரூபிக்கப்பட்டதால், தலைகால் புரியாமல் கோபத்தைக் காட்ட வேண்டுமென உங்களுக்கு யார் உத்தரவிட்டது?

3. பொய் வழக்கு என ஒப்பாரி வைக்கிறீர்கள். இதை பொய் வழக்கு என்று பேச்சுக்கு வைத்துக் கொள்வோம், அப்படிப்பட்ட பொய் வழக்கை உடைத்தெறிந்து, தகுந்த ஆவணங்களைக் கொடுத்து வழக்கை வெற்றி கொள்ள உங்களுக்குத் துப்பு இல்லாமல் போனது எதனால்? 



4. வழக்கு செல்லும் பாதையை சரிவர நோக்காமல், ஜெ. விடுதலையாகி விடுவார் என மனக்கோட்டை கட்டி, லட்டு மற்றும் பட்டாசுகளை எடுத்துச்சென்ற உங்கள் அறியாமையைக் கண்டு பாவமாகத்தான் இருக்கிறது. நீங்கள் ஏமாற்றம் அடைந்ததற்குத் தமிழகத்தை வதைப்பது எவ்விதத்தில் நியாயம்?