தமிழகத்தின் முக்கியமானவரின் தம்பியின் பாதுகாப்பில் ,இருந்த திருச்சியின் பிரபல ரவுடி குணாவை ..

Posted by Unknown on 3:54 PM with No comments
தமிழகத்தை உலுக்கிய  திருச்சி வழக்கறிஞர் மற்றும் போலிஸ் இடையே மோதலுக்கு காரணமான
 
திருச்சியின் பிரபல ரவுடி குணா

கம்பம் அருகே

தமிழகத்தின் முக்கியமானவரின் தம்பியின் பாதுகாப்பில் 

இருந்தவரை கைது செய்து இருக்கிறார்கள்.

யார் இந்த குணா !

திருச்சி குணா

திருச்சி குணாமண்ணச்சநல்லூர் குணாஉறையூர் குணா , குணா என்கிற குணசீலன்.

 டெல்டா மாவட்டங் களை சாதி ரீதியில் எதிரும் புதிருமாய் நின்று கதிகலங்க
வைத்த மணல்மேடு சங்கரும், முட்டை ரவியும் இப்போது இல்லை.


முதலில் போலீஸ் டீம், முட்டை ரவியை 2006-ல் என்கவுண்ட்டரில் போட்டுத்
தள்ளியது. இதைக்கண்டு தன்னையும் போலீஸ் சுடலாம் என பதறிய மணல்மேடு
சங்கர்... தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பலவகைகளிலும் முயன்றான்.


எனினும்... அவ னது உயிரையும் உருவியெடுத்தது காக்கிகளின் துப்பாக்கி.
இதற் கிடையே முட்டை ரவி இறந்தபிறகு... ரவியின் டீமுக்கு தலைமை
ஏற்றவன்தான் இந்தத் திருச்சி குணா.


 இவன் டெல்டா லிமிட்டையும் தாண்டி.. ஆத்தூர் சுமன்செங்கல்பட்டு
ரவிபிரகாஷ், சீர்காழி சத்யா, செல்லதுரை, சுந்தரபாண்டி, சின்ன ஆனந்த்,
பல்லு குமார், விக்டர், ஒத்தக்கை வினோத் , பாலக்கரை கண்ணாடிஆனந்த்,
பாலக்கரை ஸ்டீபன், லால்குடி மயில்வாகணன், ஆகிய தன் சிஷ்யகோடிகள் மூலம்...
தமிழகம் முழுக்க தன் ரவுடி சாம்ராஜ்யத்தை விஸ்தரித்திருக்கிறான். இந்த
குணாவின் ரவுடி ஜாதகத்தை மேலும் துருவியபோது மேலும்பல அதிரடித் தகவல்கள்
கிடைத்தன.


திருச்சி குணாவுக்குப் பூர்வீகம் இலங்கை. சின்ன வயதில் குடும்பத்தோடு
அகதியாய் தமிழகம் வந்தான் குணா. திருச்சி பெரிய கடைவீதி சந்துக்கடை
மார்க்கெட் பகுதியில் அவன்குடும்பம் அடைக்கலமானது.


அம்மா நர்ஸாக இருக்க... குணாவோ... சேர்வார் தோஷத்தால் ரவுடியாக வளர ஆரம்பித்தான்.


 இவனது க்ரைம் அதிரடிகளைக்கண்ட அப்போதைய திருச்சியின் பிரபல தாதாவான
பிச்சைமுத்து... ’"நீ என்னோடு இருக்கவேண்டியவன்டா... வாடா'’என இவனைத் தன்
சிஷ்யனாக சேர்த்துக்கொண்டான். அவனால் மனித ரத்த வாசனையை அறிந்துகொண்ட
குணா... பிச்சை முத்துவின் என்கவுண்ட்டருக்குப் பின்தான் முட்டை ரவி
டீமில் ஐக்கியமானான்.



முட்டை ரவிக்காக... தலித் சமூகத்தைச் சேர்ந்த சேட்டு, டிங்கி, சுரேஷ்
ஆகிய மூவரையும் மணிகண்டம் பைபாஸ் பகுதியில்.. பட்டப்பகலில் படு
பயங்கரமாகக் கொன்று... குணா திருச்சியையே பரபரக்க வைத்தான். அதேபோல்
செங்கல்பட்டு தாதாவான குரங்கு குமாரை... அவனது எதிரிகளுக்காகத்
தீர்த்துக்கட்டியும் பதட்டத் தகிப்பை ஏற்படுத்தினான்.


இதன் பிறகு இவனுடைய மார்கெட் வேல்யூ அதிகமாகிபோனதால் திருச்சியில் உள்ள
முக்கியமான வியாபர பிரமுகர்களை எல்லாம் பணம் கேட்டு மிரட்ட ஆரம்பித்தான்.


இதற்கு இடையில் முட்டைரவியின் குரூப்பில் உள்ள சாமிரவி என்கிறவர்
வாண்டையர் குரூபில் சேர்ந்து பெரிய இடத்து பஞ்சாயத்துகளை மட்டும் அவர் இனத்தை சேர்ந்த போலிஸ் துணையோடு செய்து வருகின்றார். இந்த நிலையில் குணாவுக்கும், சாமிரவிக்கு
தொழில்முனை போட்டி ஏற்படுகிறது.


சாமிரவி வெளியே தெரியாத ரவுடி தாதாவாகவும்,அரசியல்வாதியாவும்,  குணா வெளிஉலகிற்கு அறிமுகமான தன் வாயாலேயே தன்னை கெடுத்து கொண்ட தாதாவாகும் வளர்கிறார்கள்.
இப்போது குணாவின் செல்பாடுகளில்  உடல்நிலை

சரியில்லை, மஞ்சள் காமாலை, கண்கள் இருட்டாகி கொண்டே செல்கிறது என்று
போலிசுக்கு தன்  இன்பார் வழக்கறிஞர்கள் மூலம் தகவல் சொல்லிக்கொண்டே இருக்கே இருக்கிறார்.
போலிஸ்சோ குணா செல்வது உண்மையா என்பதை கண்டறிய ஆவல் கொண்டு அவனை பிடித்தே ஆக வேண்டும் என்கிற முயற்சியில் தான் மார்ச் மாதம் தேர்தல் சமயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று பிடித்து சிறையில் தள்ளினார்கள்.
ஆனால்   குணா முன்பை விட இப்போது மிகவும் பலமானவனாகவும் அறிவாளியாகவும்

இருப்பதை கண்டு வெகுண்ட போலிஸ் குணாவை நையபுடைத்து குண்டர் சட்டத்தில் அடைத்தது. இதை அனைத்தையும் உடைத்தது. குணாவின் வக்கீல் படை.