நீ...ண்...ட... இழுபறிக்குப்பின் போலீஸ் கமிஷனர் டிரான்ஸ்பர்

Posted by Unknown on 7:25 AM with No comments
இடைத்தேர்தல் எதிரொலியாக 3 ஆண்டுகள் பணிநிறைவு செய்த அதிகாரிகள் பட்டியலில் இருந்த மாவட்டக்கலெக்டர் ஜெயஸ்ரீ, மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ஆனால் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் மட்டும் மாற்றல் செய்யப்படாமல் இருந்தார். 
 நங்கூரமிட்ட கப்பல்போல் அவர் பதவியில் நீடித்தார். நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த டிராபிக் ராமசாமி திருச்சி மாநகரில் 3 வருடத்திற்கும் மேலாக பணிபுரிந்து வரும் போலீஸ் கமிஷனர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்ள வாய்ப்பு உண்டு எனவே அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என கேட்டு தேர்தல் கமிஷனில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் மதுரை மாநகரத்துக்கும் மதுரை கமிஷனர் சஞ்சய் மாத்தூர் திருச்சி மாநகரத்துக்கும் இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா உத்தரவிட்டுள்ளார்.