அலரும் திருச்சி தொழில் அதிபர்கள் …. மிரட்டும் .வீடியோ தேவகி…

Posted by Unknown on 12:18 AM with No comments
 நம்மை சந்தித்த அந்த  தொழில் அதிபர் தனக்கு நேர்ந்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அப்படியே நம்முடைய நியூதிருச்சி வாசகர்களுக்காக புத்தாண்டு பரிசா இதை அப்படியே தருகிறோம். சினிமாவில் மட்டுமே சாத்தியமான அந்த சம்பவம் அவருடைய வாழ்க்கையில் மட்டும் இல்லை திருச்சியில் சபல தொழில் அதிபர்களுக்கு நேர்ந்துயிருக்கிறது என்பது கால கொடுமை…  இனி  அவர் நம்மிடம் பேசியதிலிருந்து அப்படியே …….


திருச்சி பெருவளநல்லூரை சேர்ந்த பார்ப்பவர்களை கவனிக்க வைக்கும் உடற்கட்டுகொண்ட இளங்கலை பட்டதாரி தேவகி (பெயர் மாற்றப்பட்டுள்ளது.). அவருடைய சுமாரான ஆங்கிலமே கேட்பவர்களை சுண்டியிழுக்கும். திருச்சிக்கு நகைவாங்க வரும்பொழுது எல்லாம் பெரியகடைவீதியில் நகை வேலை செய்யும் நந்தகோபாலை சந்திக்கிறார். வேறுவேறு ஜாதியாக இருந்தாலும் இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகி இரண்டு குடும்பங்ளையும் எதிர்த்துக்கொண்டு திருமணம் செய்து கொள்கிறார்கள்.

அப்போது ஆட்சியில் இருந்த  மத்திய மாண்புமிகுவின் சகோதரர் நெருங்கிய ரத்தசொந்தத்தை கருத்தில் கொண்டு எதிர்ப்பையும் மீறி கல்யாண பரிசாக தேவகி-நந்தகோபால் தம்பதியினருக்கு கனமான தொகையை கொடுத்து திருச்சி ஏர்போர்ட் அருகில் வயர்லஸ் ரோட்டில் வாடகைக்கு ஒரு பங்களாவில் குடி வைக்கிறார். கணவன் வழக்கம் போல் பட்டரைக்கு செல்ல கிராமத்திலிருந்த தேவகிக்கு சில நாட்களில் பகல்பொழுது எல்லாம் போரடித்து போகிறது.

மதிப்புமிக்கவர்களாக வலம் வந்த ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் அநேகர் இவருக்கு உறவுமுறையாக இருக்க, அவர்களோடு வந்தவர்களும் இவருக்கு அறிமுகம் ஆகிறார்கள். ஆளும்கட்சியில் ஆகவேண்டிய எந்த காரியமாக இருந்தாலும் உயரமான அமைச்சரின் உதவியோடு எல்லா துறையிலும் புகுந்து விளையாட ஆரம்பித்தார் தேவகி.  அப்படியே தான் திருச்சி வியாபாரிகளின் தலைவனும் பழக்கம் ஆகிறது.

பங்களாக்கள் நிறைந்த அந்த பகுதியில் பகல் 10மணிக்கு மேல் ஆள் நடமாட்டமே இருக்காதுஆனால் பக்கத்து வீட்டில் மட்டும் தினுசு தினுசாக உயா்ரக புதிய கார்களில் அடிக்கடி ஒரு மனிதர் காலை 10மேல் வந்து 12மணிக்குள் வெளியேறுவதை பார்க்கிறார். அந்த வீட்டில் ஏதோ நடக்கிறது என்பதை தேவகி அறிந்து கொள்கிறார்.


அரசியல்வாதிகளுக்கே உரித்தான தேடல்களுக்கு தன் ஒருத்தியால் மட்டும் தீனிபோடமுடியாமல் துணைக்கு ஆட்கள் இருந்தால் தோதாக இருக்குமே என்கிற எண்ணம் தேவகிக்கு ஏற்படுகிறது. கிளிஜோசியகாரனுக்கு அடங்கி நடக்கும் கிளியை போல உடன் ஒருபட்டாளத்தை வைத்துக்கொள்ள திட்டம் தீட்டுகிறார் தேவகி. ஆளுவோருக்கும் போலிசுக்கும் உறவுப்பாலமாக இருந்த வியாபார பிரமுகர்களின் தலைவன் தேவகியின் யோசனைக்கு முழுவடிவம் கொடுக்கிறார்.

வீடியோ எடுப்பதில் வித்தகரான வியாபார தலைவர் புத்தம்புதிய காமிராவை வாங்கி கொடுத்து தேவகிக்கு வீடியோபடம் எடுக்க பாடம் கற்றுக்கொடுக்கிறார்.

ஒரு நாள் பகல் பொழுது பகட்டான காரில் மிடுக்காக வந்து இறங்கி பக்கத்து பங்களாவுக்குள் நுழைகிறார் அந்த ஜவுளிகடை அதிபர். பங்களாகதவு திறக்கிறது . அவர் உள்ளே நுழைந்த 1மணிநேரத்தில் தேவகி கையில் வீடியோகாமிராவோடு அந்த பங்களாவுக்கு சென்று கதவை படபடவென தட்டுகிறார். என்னமோஏதோவென்று பதைபதைப்போடு கதவை திறக்கிறார் அந்த வீட்டு எஜமானி.

 தேவகி எதிர்பார்த்ததை விட கின்னென்ற தோற்றத்தில் நைட்டியோடு நின்ற அந்த பெண்ணை தள்ளிவிட்டு நேராக திறந்திருந்த படுக்கை அறையை நோக்கி போகிறார் தேவகி. அரைகுறை நிலையில் அமர்ந்திருந்த அந்த தொழில்அதிபர் வீடியோகாமிரவோடு வரும் லேடியை பார்த்துவிட்டு பெண்போலிஸ்சோ என்ற பயத்தில் தலையையும் முகத்தையும் கையால் பொத்திக்கொள்கிறார். எதிராளியின் பயம் தேவகிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கிறது.

யார்? பொண்டாட்டியை, யார் களவாடுறது?  ஏன்டி நீ பத்தினி மாதிரி இருந்துக்கிட்டு புருஷனுக்கு துரோகம் பண்னுறியா? எல்லாத்தையும் வீடியோ எடுத்துட்டேன். எல்லா டிவியிலேயும் போட்டு நாறடிச்சுபுடுவேன். உன் வீட்டுகாரனுக்கு போன் போட்டு வரசொல்லு என சகட்டுமேனிக்கு போலிஸ் அதிகாரியை போலவே மிரட்டி இருவரையும் படுக்கை அறையிலே அமர வைக்கிறார்.

தேவகி தன் கூட்டாளியான வியாபார தலைவருக்கு போனை போட்டு பட்சி….சிக்கிடுச்சு.. சீக்கிரம் வண்டி எடுத்துகிட்டு வாங்க என்று உயர் அதிகாரி உத்தரவு போடுவதை போலவே பேச… தொழில்அதிபருக்கு வேர்த்து விறுவிறுத்து போனது. 10நிமிடம் கழிந்தது. தேவகி டீல்பேச ஆரம்பித்தார் நீங்க என்ன சார் பண்றீங்க என்று ஆரம்பித்து அவருடைய அந்தம் முதல் ஆதி வரை விசாரித்துவிட்டு சரி..சரி..நீங்க கிளம்புங்க என்று அவரை விரட்டாத குறையாக மிரட்டி விரட்டினார்.

தப்பித்தால் போதும் என்று பின்னங்கால் பிடறியில்பட ஒட்டம் எடுத்தார் அந்த தொழில்அதிபரான மன்மதராசா..

15நாள் கழித்து தொழில்அதிபருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. மங்கள் அன்டு மங்கள் நகைகடையில் இருக்கிறேன் 90,000 பணத்தோடு வா! என்ற உத்தரவிட்டார் தேவகி.. ஊமையன் கனவு கண்டால் வெளியில் சொல்லமுடியுமா? வெட்ககேடான செயலுக்கு விலை 90,000 ரூபாய் நொந்து போய் தேவகியின் கழுத்து நெக்லசுக்கு தேய்மானமாகி போனது இவர் பணம்.

இரண்டு மாதம் கழித்து தொழில் விசயமாக வெளியூர் செல்ல திருச்சி விமானநிலைத்திற்கு வருகிறார் தொழில்அதிபர். அங்கே வளர்ந்த அமைச்சரின் அண்ணனோடு வியாபார பிரமுகரும் துணையிருக்க  இருவருக்கும் அருகில் இரண்டு மங்களகரமான பெண்கள். ஒருத்தி தேவகி மற்றறொருத்தி இவருடைய பழைய ஆசைநாயகி.


என்று தலையில் அடித்துக்கொண்டு நம்மிடம் புலம்பினார் அந்த தொழில் அதிபர்

இது குறித்து நாம் விசாரிக்கையில் தேவகியின் வேலையே வீடியோ எடுக்காமலே வீடியோ எடுத்தாக சொல்லி பல சபல தொழில்அதிபர்களிடம் பணம் பறிப்பதும், பெண்களை பயமுறுத்தி வெங்கடேஷபெருமான் பெயர் கொண்ட வர்த்தகபுலி சொல்லும் வயோதிகவல்லூறுகளுக்கு விருந்தாக்குவதும் தொடர்ந்து நடக்கிறதாம்.

 தனக்கு ஒத்துவராத பணபலம் மிக்க தொழில்அதிபர்களை தேவகி அன்கோ மூலம் செட்-அப் நாடகம் நடத்தி அவர்களை பணியவைத்து பயமுறுத்தி போட்டிக்கு ஆளே இல்லாம் இன்று வரை கோலோச்சுகிறார். இவரை எதிர்க்காதவர்கள் தலைதப்பியது தம்பிரான் புண்ணியம் என்று தங்களுக்குள்ளேயே சொல்லிக்கொள்கிறார்கள்.