ச்சீப்பா போன சி.பா. பேரன் எதுடா எக்ஸ்குளுயுசிவ்..?

Posted by Unknown on 7:53 PM with No comments
ச்சீப்பா போன சி.பா. பேரன்

எதுடா எக்ஸ்குளுயுசிவ்..?

இன்னைக்கு ராத்திரி 8.00 மணிக்கு – தந்திடிவியில் ராஜபக்சேவின் நேரடி பேட்டி ஒளிபரப்புராங்களாம். இந்த பேட்டி ஊடகபுரட்சினு 5நிமிடத்திற்கு ஒரு முறை விளம்பர வேற. இதை பார்த்து கொதித்து போய் கண்டனம் தெரிவித்த தமிழர் அமைப்புகளும் தலைவர்களும் ஊடக சுதந்திரத்தில் தலையிடுவதா ஊதி பெரிசாக்குறாங்க.


எங்க கேள்வி இது தான்.

யாருக்குமே தெரியாத யாராளுமே நெருங்கமுடியாத ஒரு செய்தியை தனிப்பட்ட ஊடகம் வெளிப்படுத்தினால் அது எக்ஸ்குளுயுசிவ்..

திருடனே வரசொல்லி, வாகனமும் ஏற்பாடு பண்ணி, வசதியா வேற வேற ஏற்பாடுகளையும் பண்ணிக்கொடுத்து திருடன் கிட்ட, அவன பாராட்டி அவனுடைய பராக்கிரமத்தை சொல்லி இவுங்களே கதை, திரைக்கதை வசனமும் எழுதிக்கொடுத்து கேமரா முன்னாடி நடிக்க வச்சு அதை எக்ஸ்குளுயுசிவ்.. 8.00 மணிக்கு ஊடகபுரட்சி என்று விளம்பரபடுத்திக்கொள்வதற்கு பதில் வேற நல்ல தொழிலை பார்க்கலாம்.

சி.பா. ஆதித்தனார் தமிழர்களை படிக்க வைத்தார். அவர் பேரனோ தமிழர்களை கொன்றவனை நடிக்க வைத்து உண்மையான தமிழர்களை துடிக்க வைக்கிறார்.

பண கட்டுக்களாலேயே பங்களா கட்டும் அளவிற்கு வசதி வந்தும் கூட பாழாப்போன இந்த பாலுவுக்கு ஏன் இந்த பணவெறி….

தமிழர்களின் புத்தியை மழுங்கடிக்க நடக்கும் சர்வேதேச சதியில் தந்திடீவியும் விழுந்துவிட்டது.