இயக்குனர் சிகரத்துக்கு அவமானம்...... இறுதிசடங்கு ...

Posted by Unknown on 8:38 PM with No comments
இயக்குனர் சிகரத்துக்கு அவமானம்...... இறுதிசடங்கு ... 

கே.பாலச்சந்தர் இறுதி சடங்குகள் எல்லாம் முடிந்து நடிகர்கள் எல்லாம் மயானத்தை விட்டு வெளியே வருகிறார்கள்.

அதுவரை ஒரு வகை சோகத்தில் இருந்த கூட்டம் ரஜினி வெளியே வரும்போது ஒரே ஆர்ப்பாட்டம். அந்த மானங்கெட்ட ரசிகர்கள் அவரை நகர விடவில்லை. அவரை தொட ஒவ்வொருவனும் முந்தி ரஜினியை சூழ்ந்து கத்தி கூச்சலிடுகின்றனர்.

அவரை காரை நெருங்க விடாமல் பயங்கர முட்டல்...மோதல்..கடைசியில் அவர் காரில் ஏறியதும் மொத்த சாக்கடையை தின்னும் ரசிகர்கள் அந்த காரை பின் தொடர்ந்து ஓடுகின்றனர். அந்த கார் டிரைவர் எப்படியாவது கூட்டத்தை விலகி சென்று விட வேண்டுமென்று லாவகமாக ஓட்டினாலும் அந்த இன்னோவா கார் ஒரு சிறு வளைவில் சுவற்றில் முட்டி விடுகிறது.

அப்போதும் பின்னால் வந்த அந்த அறிவிழந்த கூட்டம் ரஜினியின் காரை தொட்டு தொட்டு தனது ஆசையை தீர்த்து கத்தி கூச்சல் போடுகின்றனர்.

அனைவரும் 'தலைவா...தலைவா' என உரக்க கத்தி, தான் எங்கே வந்திருக்கிறோம் எந்த காரியத்தில் பங்கெடுத்திருக்கிறோம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல், 'நாங்கள் காலம் உள்ள வரை அறிவு இல்லாத காட்டுமிராண்டிகளாக தான் இருப்போம்' என மீண்டும் நிரூபித்து விட்டனர்.

ஒரு பொது விழாவில் உங்கள் தலைவனிடம் இந்த பைத்தியக்கார தனத்தை காட்டியிருந்தால் கூட, இது வழக்கமான ஒரு மூடத்தனமென விட்டுருக்கலாம்.




ஆனால், ஒருவரின் ஈமச்சடங்கு நிகழ்வுக்கு வந்த இடத்தில் இப்படி மானம், ரோஷம், சூடு, சுரனை இல்லாமல் நடந்துக்கொண்ட இந்த ரசிகர்கள் உண்மையிலேயே காட்டுமிராண்டிகள் தான்.

அப்போது வரை கே.பாலசந்தர் அவர்களுக்கு இவ்வளவு கூட்டம் மரியாதை செலுத்த வந்துள்ளனர் என பெருமிதம் கொண்டேன். ஆனா, ரஜினி வந்ததும் தான் தெரிந்தது இந்த வெங்காய ரசிக கூட்டமெல்லாம் நடிகர்களை தான் பார்க்க வந்துள்ளனர் என புரிந்துக்கொண்டேன்.

ரஜினி சென்றதும் மொத்த கூட்டமும் வெளியேறுவது காண முடிந்தது.

இது இயக்குனர் சிகரத்துக்கு அவமானம் தானே.
ஒவ்வொரு நாட்டிலும், வட மாநிலங்களிலும் தமிழனை கிள்ளு கீரையாக நினைக்க காரணம்,

இந்த மாதிரி மானங்கெட்ட ரசிகர்களின் முட்டாள் தனத்தால் தான். ச்சே...இந்த கூட்டம் ஒழிந்தால் தான் நாடும் முன்னேறும்..தமிழனை மதிப்பான் !!!

வெற்றிவேந்தன்.