செல்போனில் வீடியோ விளையாடிய போது வெடித்து சிதறி சிறுவன்

Posted by Unknown on 4:30 PM with No comments
குழந்தைகளிடம் செல்போன் கொடுத்து வீடியோ கேம் விளையாட சொல்லி கொடுக்கும் பெற்றோர்களா நீங்கள்
அப்படி என்னறால் இதை கவனமாக படியுங்கள். 
பெரம்பலூர் அருகே சார்ஜ் செய்யப்பட்டிருந்த நிலையிலிருந்த செல்போனில் கேம் விளையாடிய போது அது வெடித்து கை விரல்கள் சிதறி காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெரம்பலூர் அருகே ஆத்தூர் சாலையில் உள்ள எசனை கிராமத்தை சேர்ந்த பூங்காவனம்&அருள்நாயகி தம்பதியினரின் மகன் ஆதிகேசவன்(11). இவர் எசனை கிராமத்திலுள்ள அரசுப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அரையாண்டு தேர்வு விடு முறை என்பதால் பெரம்பலூர் அருகே திருச்சி& சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எறையூர் கிராமத்திலுள்ள பெரிய ம்மா லட்சுமி வீட்டி ற்கு ஆதிகேசவன் தனது தாயார் அருள்நாயகியுடன் நேற்று முன்தினம் சென்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து வீட்டில் சார்ஜ் செய்யப்பட்டிருந்த நிலையிலிருந்த சைனா செல்போனில் சிறுவன் ஆதிகேசவன் கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென செல்பொன் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இந்த விபத்தில் ஆதிகேசவனின் முகத்தில் தாவாய் பகுதியிலும் வலது உள்ளங்கை மற்றும் விரல்கள் சிதறியும் காயமுற்றார். செல்போன்வெடித்ததில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட, சொட்ட கதறிய சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது தாயார் மற்றும் உறவினர்கள் அவரை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.