திருச்சி கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி - மக்கள் வளர்ச்சி பணிக்கு முக்கியத்துவம்

Posted by Unknown on 6:16 PM with No comments
மக்கள் வளர்ச்சி பணிக்கு முக்கியத்துவம்
திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் கூட்டுறவு சங்கப் பதிவாளராக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து புதிய கலெக்டராக கே.எஸ்.பழனிச்சாமி இன்று காலை 9 மணிக்கு பொறுப்பேற்றார். டிஆர்ஓ தர்ப்பகராஜ் மாவட்ட பணிகளை ஒப்படைத்தார். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர்(கணக்குள்) இந்திராணி, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை )ராம சாமி, நேர்முக உதவியாளர் (பொது) ஜெயஸ்ரீ ஆகியோர் உடனிருந்தனர்.
அதன்பின்னர் கலெக்டர் அளித்த பேட்டி:
அரசு திட்டங்களை சிறப்பாக மக்களுக்கு கொண்டு சென்று அவர் களது குறைகளை தீர்க்க பாடுபாடுவேன். பொதுமக்கள் தங்களது குறைகளை எந்த நேரத்திலும் நேரில் சந்தித்து தெரிவிக்கலாம். மக்கள் வளர்ச்சி பணிகளு க்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் செம்மையாக நடைபெற்று வருவதால் அதன் வழியில் என் பணியும் தொடரும் என்றார்.
கலெக்டர் பழனிச்சாமி எம்விஎஸ்சி(கால்நடை மருத்துவம்) படித்துள்ளார். 1997ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருந்துள்ளார். பின்னர் பெரம்பலூர் மாவட்ட ஆர்டிஓ, சிவகங்கை மாவ ட்ட டிஆர்ஓ, சென்னை மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளராகவும், 2007ம் ஆண்டு வேலூர் மாநகராட்சியின் கமிஷனராகவும், 2011ம் ஆண்டு அதிமுக அரசு பதவி ஏற்றவுடன் தேனி மாவட்ட கலெக்டராக இருந்துவந்துள்ளார்.