நித்தியானந்தா ஆசிரமத்தில் இறந்த திருச்சி சங்கீதாவின் உடல் மறு பரிசோதனை... திக் திக்...
Posted by Unknown on 5:30 AM with No comments
நித்யானந்தா ஆசிரமத்தில் மர்மானமுறையில் இறந்த திருச்சி சங்கீதாவின் உடலை மறு பரிசோதனை செய்ய முடிவு
பெங்களூருவில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இறந்து, திருச்சியில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை தோண்டியெடுத்து மறுபிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கு ஆர்டிஓ அனுமதி மறுத்ததால், கலெக்டர் உதவியை போலீசார் நாடி உள்ளனர்.
திருச்சி நவலூர் குட்டப்பட்டு மேலத்தெருவை சேர்ந்தவர் அர்ஜூணன் உடையார் பார்க்கவ சங்க பிரமுகர். இவரது மனைவி ஜான்சிராணி . இவர்களது மகள் சங்கீதா (24). இவர் திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் பி.சி.ஏ. படித்த பட்டதாரி. கல்லூரி நாட்களிலே திருச்சியில் நடைபெற்ற நித்தியானந்தா தியான வகுப்புகளில் கலந்து கொண்டதில் நித்தியானந்த போதனைகளால் ஈர்க்கப்பட்டு அவர்கள் பணி செய்ய பிடறி சென்று பிறகு சன்னியாசாக மாறி காவி உடை அணிந்து கடந்த 4 வருடமாக பெங்களூரு பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கி பணியாற்றி வந்தார்.
நித்தியானந்தா - ரஞ்சிதா வீடியோ வெளியான போது நிறைய சன்னியாசிகள் மடத்தை விட்டு வெளியேறிய போதும் சங்கீதா உள்ளிட்ட சிலர் நித்தியானந்தாவின் முக்கிய பொறுப்பாளர்களான இருந்தால் வெளியேறாமல் இருந்தனர்.
ரஞ்சிதா - நித்தியானந்தா சம்மந்தப்பட்ட வீடியோ சில சங்கீதாவின் கையில் கிடைத்ததால் அதை தெரிந்து கொண்ட மடத்தின் முக்கிய பிரமுகர்கள் சங்கீதாவை தாக்கி அவரை மிரட்டி மடத்திலே தங்க வைத்தனர்.
இதை தெரிந்த தாய் ஜான்சி தன் மகளை மீட்க முடியாமல் கடந்த 1 வருடமாக இருந்த நிலையில் தானட
கடந்த 2014 டிசம்பர் 28ம் தேதி ஆசிரமத்தில் இருந்து சங்கீதாவின் தந்தைக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது சங்கீதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் உடனே புறப்பட்டு பெங்களூரு வரவும் என்று கூறினர்.
3அடியில் புதைக்கப்பட்ட சங்கீதாவின் உடல் |
![]() |
விசன் டெக்னாலஜி சங்கீதா |
இதையடுத்து சங்கீதாவின் பெற்றோர் பெங்களூரு புறப்பட்டு சென்றனர். அங்கு சென்று விசாரித்தபோது, சங்கீதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, வழியிலேயே இறந்துவிட்டார் என்று கூறினர். அதன்பின் அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு சங்கீதா உடலை ஆசிரம நிர்வாகிகள் திருச்சிக்கு கடந்த 29ம் தேதி திருச்சி கொண்டு வரப்பட்டு 30ம் தேதி இருந்து அவர்களே நவலூர் குட்டப்பட்டில் சங்கீதா உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்னர் சென்றனர்.
மருத்துமனையில் சிகிச்சை அளித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்ன நேரமும், சங்கீதா இறந்த நேரமும் மாறி மாறி இருப்பதாலும், சங்கீதாவின் உடல் வெளிர் ஊதாநிறத்திற்கு மாறி இருப்பதும், சங்கீதாவின் உதட்டில் இரத்தம், தாடையில் கருப்பு நிறந்து நீர் வருவதையும் பார்த்து சந்தேகப்பட்ட சங்கீதாவின் பெற்றோர்.
கடந்த 1ம் தேதி சங்கீதாவின் பெற்றோர் ராம்ஜிநகர் போலீஸ் ஸ்டேஷனில் சங்கீதாவின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்தனர். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்து திருப்பி அனுப்பினர். பின்னர் தனது உறவினர் இளையராஜாவுடன் சென்ற அவரது தாய் ஜான்சிராணி தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் பிடதி ஆசிரமம் அமைந்துள்ள ராம்நகர் எஸ்ஐ தினேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று திருச்சி ராம்ஜிநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.
சிறுவயதில் சங்கீதா தன் பெற்றோருடன் |
பின்னர் சங்கீதாவின் உடலை தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை செய்ய ஆர்டிஓ மனோகரனிடம் அனுமதி கேட்டனர். அவர் அனுமதி தர மறுத்ததை அடுத்து, திருச்சி கலெக்டர் பழனிச்சாமியிடம் அனுமதி கோரி சென்றனர். அனுமதி கிடைத்ததும் இன்று காலை சங்கீதாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மறு பிரேத பரிசோதனை செய்யப்படும்.
ராம்ஜிநகர் காவல்நிலையத்தில் பிடரி காவல்துறையினர் |
இதுகுறித்து போலீசார் கூறுகையில், நல்ல வசதியான குடும்பம். நித்யானந்தா மீது கொண்ட பற்றின் காரணமாக அனைவரும் அடிக்கடி ஆசிரமம் சென்று வந்தனர். வீடு முழுவதும் நித்யானந்தா படம் தான் இருக்கும். நித்யானந்தா&ரஞ்சிதா ரகசிய படம் விவகாரம் வெளியான பிறகு சங்கீதாவை தவிர அனைவரும் அங்கு செல்வதை நிறுத்திக்கொண்டனர். சங்கீதா அங்கேயே இருந்து வந்தார். தற்போது அவரை அடித்து கொலை செய்திருப்பார்கள் என்று பெற்றோர் கூறுகின்றனர் என்றனர்.
நித்யானந்தா ஆசிரமத்தில் இறந்த திருச்சியை சேர்ந்த சங்கீதாவின் உடலை தோண்டியெடுத்து மறுபிரேத பரிசோதனை செய்வதற்காக நேற்று ராம்ஜிநகர் போலீஸ் நிலையம் வந்த பெங்களூரு இன்று காலை சங்கீதா உடலை திருச்சி மருத்துவமனை மருத்துவர்களை வைத்து போஸ்மார்டம் செய்த பின்பு இன்னும் பல திடுக்கிடும் விசங்கள் வெளியே வரலாம் என்கிறார்கள் விவரம் அறிந்த போலிஸ் உயர் அதிகாாிகள்.
0 comments:
Post a Comment