நாடு முழுவதும் மத்திய அரசு திட்டம் 2500 நகரங்களில் இலவச wifi வசதி மத்திய அரசு திட்டம்
Posted by Unknown on 7:03 PM with No comments
இணையதள வசதியை மேம்படுத்த நாடு முழுவதும் 2500 சிறு, பெரிய நகரங்களில் இலவச வை&பை வசதியை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 3 ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இணையதள பிரசாரத்தின் மூலம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களை கவர்ந்தது பாஜ. இணையதள சேவையை பெரிதும் விரும்பும் பிரதமர் மோடி, தனது கருத்துக்களை உடனுக்குடன் டுவிட்டர் மூலம் நாட்டு மக்களுக்கு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், இணையதள சேவையை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 2500 சிறு, பெரிய நகரங்களில் இலவச வை&பை வசதியை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் மூலம் 3 ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தை மேம்படுத்தும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வை&பை சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம், 2015&16ம் நிதியாண்டில் இருந்து செயல்பட தொடங்கும்.
0 comments:
Post a Comment