திருச்சி மாநகர காவல்துறையின் நீண்ட நாள் முயற்சிக்கு பிறகு ....... .

Posted by Unknown on 9:05 AM with No comments
புதிய வலைதள சேவையைத் தொடங்கியது திருச்சி

மாநகரக் காவல்துறை 
பல்வேறு சேவைகளைக் கொண்டு இயங்கும் வகையிலான புதிய வலைதளச் சேவையை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது மாநகரக் காவல்துறை.

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில்wwww.trichycitypolice.com என்ற வலைதள சேவையைத் தொடக்கி வைத்த பின்னர், 

காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் அளித்த பேட்டி:
இணையதளம், வாட்ஸ் அப் வழியாக புகார் தெரிவித்தல் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டு வசதிகளுடன் அனைத்துத் தரப்பினரும் பயன் அடையும் வகையிலான சேவையை வழங்கும் 

நோக்கில் புதிய வலைதள சேவையை மாநகரக் காவல்துறை தொடக்கியிருக்கிறது.
காவல்நிலையங்களின் தொலைபேசி எண்கள், காவல் அதிகாரிகளின் செல்போன் எண்களும் இந்த சேவையில் அளிக்கப்பட்டுள்ளன.


காணாமல் போனவர்கள், அடையாளம் தெரியாத இறந்த நபர்களன் உடல்கைத் தேடி கண்டுபிடித்தல் போன்ற சேவையையும் இந்த வலைதளம் வழங்குகிறது.


 மேலும் பெண்கள் உதவி மையம், குழந்தைகள் உதவி மையம், தீயணைப்புத் துறை, அவரச ஊர்தி எண்கள் போன்றவற்றுடன், காவல்துறையின் பணிகள், இளைஞர், பெண்களுக்கான திட்டங்கள், சாலைப் பாதுகாப்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அணுக வேண்டிய அதிகாரிகள் யார் போன்ற வசதிகளும் இந்த வலைதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ்.


பேட்டியின் போது, காவல் துணை ஆணையர் சரோஜ் குமார் தாக்கூர், காவல் கூடுதல் துணை ஆணையர் (மதுவிலக்கு அமல் பிரிவு) கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.