ஆட்டோ தோழர்கள் என்கிற பெயரில் கொடுங்கோலர்கள் கையிலிருந்து ஆட்டோ தொழிலாளர்களுக்கு விடுதலை.....

Posted by Unknown on 9:06 AM with No comments


திருச்சி மாநகராட்சியில் ஒருங்கிணைந்த ஆட்டோ ஸ்டாண்ட் விரைவில் அமலுக்கு வருகிறது. இதில் ரூ.350 செலுத்தி ஆட்டோ டிரைவர்கள் இணைந்து கொள்ளலாம்.


மீட்டர் போடும் ஆட்டோகளை எதிர்க்கும் மீட்டர் போடாத ஆட்டோ டிரைவர்கள் 
திருச்சி மாநகராட்சியில் ஜங்சன் ரயில் நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், அண்ணா சிலை, ஏர்போர்ட் என மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகள் ஏராளமாக உள்ளது. இங்கு தினமும் பல்லாயிரக்கணக் கான பயணிகள் வந்து செல்கின்றனர். பொதுமக்களின் போக்குவரத்துக்காக கார், ஆட்டோ, குதிரை வண்டி போன்றவை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பயன்பாட்டில் இருந்தது.

ஆட்டோவில் மீட்டரே வேண்டாம் பேரணியாக போராட்டம்

இப்படி இயக்கப்படும் ஆட்டோக்கள், கார்கள், குதிரை வண்டிகள் நிறுத்துவதற்கு மாநகராட்சி சார் பில் 1999ம் ஆண்டு அப்போதைய மாநகராட்சி கமிஷனர் முத்துவீரன், வாகன நிறுத்த சட்டத்தின்படி 4 கோட்டத்திலும் 265 இடங்களை முதன்முறையாக ஒதுக்கீடு செய்தார். அது முழுமையாக நடை முறைப்படுத்தியதாக தெரியவில்லை. தற்போது ஆட்டோக்களின் எண்ணிக்கை உயர்ந்து 300க்கும் மேற்பட்ட ஸ்டாண்டுகள் உருவாகியுள்ளது. 8,000க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது.

ஆனால் ஆட்டோ டிரைவர்களை அமைப்புகள் என்ற பெயரில் பலர் கூட்டாக சேர்ந்து ஆட்டோ நிறுத்துமிடத்தை ஆக்கிரமித்துள்ளனர். மேலும் அங்கு மற்ற ஆட்டோக் களை நிறுத்த விடுவதில்லை. மேலும் ஆட்டோக்களை நிறுத்துவதற்கு லட்சக்கணக்கில் பணம் கேட்டு வருகின்றனர். மற்ற பகுதிகளிலிருந்து பயணிகளை ஏற்றி வரும் ஆட்டோக்கள் திரும்பி செல்லும்போது யாரையும் ஏற்றக்கூடாது என்று பிரச்னையில் ஈடுபடுகின்றனர்.
சிறைக்கு கூட தயார் ஆனா ..... ஆட்டோ தோழர்கள்

2013ம் ஆண்டு மாநகராட்சி கமிஷனருக்கு இந்த பிரச்னை கொண்டு செல்லப்பட்டது. அப்போதைய கமிஷனர் தண்டபாணி ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில் மாநகராட்சி இதுவரை யாருக்கும் ஆட்டோக்கள் நிறுத்தி கொள்ள தனிநபருக்கோ, சங்கத்துக்கோ அனுமதி தரவில்லை. போலியாக அனுமதி தந்தது என்று கூறி செயல்படுவது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்பின் இர வோடு இரவாக ஆட்டோ நிறுத்த பகுதிகளில் இருந்த மாநகராட்சி அனுமதி பெற்ற, அரசு அனுமதி பெற்ற போன்ற வாசகங்கள் அடங்கிய போர்டுகள் அகற்றப்பட்டு சங்கம் சார்ந்த போர்டுகளை ஆட்டோ சங்கத்தினர் அமைத்தனர்.
மீட்டர் மற்றும் மீட்டர் எதிர்ப்பு ஆட்டோ தோழர்கள் இடையே நடக்கும் பிரச்சனைகளை பஞ்சாயத்து பண்ணும் காவல்துறை அதிகாரிகள்

இந்நிலையில் மாநகர பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் ஆட்டோக்களை நிறுத்த மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு இடங்களிலும் எத்தனை ஆட்டோக்கள் நிறுத்த முடியும் என்று ஆய்வு செய்து அதன்படியே அங்கு நிரந்தரமாக நிறுத்தி ஆட்டோக்கள் ஓட்டி கொள்ள அனுமதி வழங்கப்படவுள்ளது. இதற்கு ஒவ்வொரு ஆட்டோவுக்கும் ஆண்டுக்கு ரூ.350 கட்டணமாக வசூலிக்க முடிவு செய்துள்ளது. இதனால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். விரைவில் அமலாக இருக்கும் இந்த திட்டத்தில் அனைத்து ஆட்டோ டிரைவர்களும் பயன்பெறலாம்.
வேலை நிறுத்தம் கூட நடத்தி பார்த்தார்கள்

இதற்கு முன்னர் அந்த பகுதியில் நிறுத்தும் ஆட்டோக்கள் மட்டுமே பயணிகளை ஏற்றி கொள்ள முடியும். மற்ற பகுதிகளி லிருந்து வரும் ஆட்டோக்களில் பயணிகளை இறக்கிவிட்டு மட்டுமே செல்ல வேண்டும். அங்கிருந்து பயணிகளை ஆட்டோவில் ஏற்றினால் வாடிக்கையாக நிறுத்தும் டிரைவர்கள் தகராறில் ஈடுபடுவர். அப்படியும் ஒரு ஆட்டோ நிறுத்த வேண்டுமானால் அந்த குறிப்பிட்ட அமைப்புக்கு ஏரியாவுக்கு ஏற்றார்போல் (ஜங்சன் ரூ.1.5 லட்சம், மத்திய பேருந்து நிலையம் ரூ.3 லட்சம்) ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்க வேண்டும். மாநகராட்சியின் ஒருங்கிணைந்த ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்கும்போது இந்த பிரச்னைக்கும் ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.