திருச்சியில் Post office ATM சென்டர்கள்.

Posted by Unknown on 9:10 AM with No comments
மத்திய மண்டலத்தில்
22 தபால் நிலையங்களில்
விரைவில் ஏடிஎம் மையம்

திருச்சியில் எனது அஞ்சல் தலை திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. 22 தலைமை தபால் நிலையங்களில் விரைவில் ஏடிஎம் மையம் திறக்கப்பட உள்ளதாக அதிகாரி தகவல் தெரிவித்தார்.

திருச்சி மத்திய மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் வெங்கடேஸ்வரலு நிருபர்களிடம் கூறுகையில்,

தமிழகத்தில் அஞ்சல் தலை சேகரிப்பு பிரிவு சென்னை, புதுச்சேரி, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 5 மையங்களில் உள்ளன. திருச்சி மத்திய மண்டலத்தில் நாகையில் சமீபத்தில் துவங்கப்பட்டது. அஞ்சல்தலை சேகரிப்பில் ரூ.200 செலுத்தி 2,300 பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். தலைமை தபால் நிலையத்தில் புதிதாக அஞ்சல் தலை விற்பனை வருவதற்கு முன் உறுப்பினர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் தபால் நிலையத்திற்கு வரவேண்டிய தேவையில்லை.

தபால் நிலையங்களில் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கிசான்விகாஸ் பத்திரம் மீண்டும் தொடங்கப்பட்டு இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. திருச்சி மத்திய மண்டலத்தில் 24 தலைமை தபால் நிலையங்கள் உள்ளன. இதில் விருத்தாசலம், ஸ்ரீரங்கம் தவிர 22 தலைமை தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் விரைவில் திறப்பதற்கான பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது.
சென்னையில் மட்டும் இருந்து வந்த எனது அஞ்சல் தலை வசதி திருச்சி தலைமை தபால் அலுவல கத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் எனது அஞ்சல் தலை தாள்கள் திருச்சியிலும் விண்ணப்பித்த உடனே அச்சிடப்பட்டு வழங்கப்படும். எனவே வாடிக்கையாளர்கள் பிறந்தநாள், திருமணம் மற்றும் திருமணநாள் விழா முதலியன சந்தர்ப்பங்களில் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக திருச்சி தலைமை தபால் நிலையத்தில் எனது அஞ்சல் தலை வசதி நேற்று துவங்கப் பட்டது. மத்திய மண்டல போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் வெங்கடேஸ்வரலு துவக்கி வைத்து வெளியிட்டார்.
மத்திய மண்டல அஞ்சல் பணிகள் இயக்குனர் நடராஜன், வருங்கால வைப்புநிதி ஆணையர் சிவக்குமார், திருச்சி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கணேசன், முதுநிலை அஞ்சலக அதிகாரி சந்தீஸ் மகாதேவப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.