ஆடாம ஜெயிக்கும் கே.என் நேரு

Posted by Unknown on 6:50 PM with No comments
ஆடாம ஜெயிக்கும் கே.என் நேரு
கடைசியா ஸ்டாலின் திருச்சியில கலந்துக்கிட்ட செயல்வீரர்கள் கூட்டத்துல பழையவங்க புதியவர்களுக்கு வழிவிடனும்னு சொன்னார். நேருவும் உருகினார். திருச்சி நாடாளுமன்ற தேர்தல்ல திமுகவுல நின்னு தோற்றுப்போன திருச்சி மாநகர செயலாளர் அன்பழகன் தான் அடுத்த மாவட்ட செயலாளர்னு கிளப்பி விட்டாங்க.
இந்த மீசைக்காரர் 20வருசமா தன்னிடம் இருக்கும் இந்த பதவியை தாரைவார்த்துகொடுத்துடுவார்ன்னு நினைச்சு அவரை சுற்றி இருந்த எல்லோரும் கனவுல மிதக்க நேரு, எல்லாத்துக்கும் அல்வா கொடுத்திட்டாரு.
வனத்துறை செல்வராஜ், மாவட்டம் பிரிச்சாக்க, தாந்தான் மாவட்டம்னு சொல்லிக்கிட்டு இருந்தார். இப்போ ஏற்கனவே ஒன்றிய செயலாளராக இருந்த எல்லாருக்கும் டிமிக்கி கொடுத்துட்டார் நேரு, சரி நமக்காவது கிடைக்கும்னு நினைச்சிருக்க, நேரு வெயிட்டான பொறுப்புக்கு போறார்னு நக்கீரன், ஜூனியர் விகடன், ரிப்போர்ட்டர், தமிழ் இந்துன்னு எல்லா புலனாய்வு புலிகளும் எழுதி கிழிச்சாங்க. இது எதுவும் உண்மை இல்லையாம்.
ஆனால் நேரு, எல்லாரையும் தூக்கி சாப்பிடுவதில் கில்லாடின்னு நிருபிச்சிட்டார். வனத்துறை செல்வராஜுக்கு எதிராக முத்திரையர் சங்க தலைவர் தியாகராஜுனு ஒருத்தரை கொண்டாந்து இவருக்கு கொடுங்கன்னு சொல்லிட்டராம். இந்த தியாகராஜன் வம்பு தும்பு செய்வதில் கில்லாடியாம்.
அடுத்து மேட்டருக்கு வருவோம் நேரு துணை பொது செயலாளர்னு நக்கீரன்ல எழுதினாங்க. அதுவும் இல்லையாம். திருச்சி தெற்குமாவட்ட செயலாளர் கனவுல எல்லாரும் மிதக்குறாங்கன்னு சொன்னோம்ல. இந்த ஜூனியர் விகடன் சீன்லயே இல்லாத முத்து செல்வத்துக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு கிடைக்கும்னு எழுதினாங்க. அடுத்தநாள் முத்து செல்வத்துக்கு மாவட்ட துணை செயலாளர், அடுத்து அன்பில் பெரியசாமி, அவருக்கு பொறுப்புன்னு பரணிக்குமார் என எல்லொருக்கும் போட்டாச்சாம்.
இன்னும் அன்பழகனுக்கு மட்டும்தான் பாக்கி. மாநகர செயலாளர் இன்னும் வேக்கண்ட் இருக்க, ஆனால் அன்பழகன் மாவட்ட செயலாளர் இல்லைன்னா மாநகர செயலாளர் என இருந்துச்சாம்.
இப்படி இருக்க நேருவுக்கு அறிவாலயத்துல வெயிட்டான போஸ்டிங் கொடுக்குறதா சொன்னாங்களாம். யாரும் வேணாம்டா தக்காலி எனக்கே மாவட்ட செயலாளர் பதவி கொடுங்கன்னு வேட்புமனு தாக்கல் பண்ணிட்டாராம். இவரை எதிர்த்து யாரும் போட்டியில்லையாம்.
நேரு ஆடாம ஜெயிக்க போறாராம்