திமுகவில் முக.ஸ்டாலின் இடத்தை கைப்பற்றப்போகும் அன்பில் மகேஷ்

Posted by Unknown on 9:11 PM with No comments
திராவிட முன்னேற்ற கழகத்தின் எல்லாமுமாக இன்றைக்கு விளங்கும் மு.க.ஸ்டாலினுக்கு சற்றேரக்குறைய 40 ஆண்டு காலம் கண்ணாக, இமையாக, துணையாக, நண்பனாக, ஆலோசகனாக, எல்லாமுமாக விளங்கியவர் மறைந்த அன்பில் பொய்யாமொழி.
அண்ணா, கலைஞருக்கு அன்பில் தர்மலிங்கம் எப்படி துணையாக இருந்தாரோ அதை போலவே இன்றைக்கு மூன்றாம் தலைமுறை முன்னேற்ற கழகத்தின் முன்னோடி பதவியை அலங்கரிக்க போகிறது.
ஆம் எந்த நிகழ்ச்சிகளிலும் அது தன் சொந்தகுடும்பத்து நிகழ்ச்சியாக இருந்தாலும் பட்டாடை உடுத்தாத கலைஞரின் குடும்பம் ஒரே ஒரு நிகழ்ச்சியில் மட்டும் குடும்பத்தின் ஆண் வாரிசுகள் அவ்வளவு பேரும் பட்டுவேட்டி, பட்டுசட்டை, பட்டுதுண்டு என, யாழ்பாண தமிழர்களின் திருமணம் போலவே கலந்து கொண்ட ஒரே நிகழ்ச்சி அன்பில் தர்மலிங்கத்தின் பேரன் அன்பில் பொய்யாமொழியின் ஒரே மகன் மகேஷ் பொய்யாமொழியின் திருமணத்தில் மட்டும் தான்.
இன்றைக்கு தி.மு.க. தமிழக அரசியல்வானில் திக்கற்றநிலையில் இருப்பதை போன்ற ஒரு பிம்பம் ஏற்பட்டுள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. எந்த ஒரு இயக்கமும் இயங்குவதை வெளிப்படுத்த அந்த இயக்கத்தின் இளைஞர் படை வலுவாக இருந்தால் மட்டுமே முடியும்.
கருணாநிதியை வனவாசம் செய்யவைத்த எம்.ஜி.ஆர் காலத்து அரசியல் தி.மு.க. உயிர்பிடிப்போடு இருந்ததற்கு ஆணிவேறாக இருந்தது ஸ்டாலின் தலைமையில் பொய்யாமொழி கண்ணசைவில் இருந்த தி.மு.க. இளைஞர் அணி. ஸ்டாலினுக்கு பிறகு அந்த பதவியை அலங்கரிக்க தகுதியான ஆட்கள் எவருமே தயார் ஆகாத காரணத்தால் தான் பிறர் எள்ளிநகையாடிய போதும் கூட சஷ்டியப்தபூர்த்தி முடிந்தும் கூட இளைஞர் அணி பதவியை எவருக்கும் விட்டுக்கொடுக்க ஸ்டாலின் தயாராக இல்லை.
ஆனால் இன்றைக்கு நிலைமையே வேறு. ஸ்டாலின் திராவிடமுன்னேற்ற கழகத்தின் அசைக்கமுடியாத நான்காம் தலைமுறை தலைவராக அறியப்பட்டுவிட்டார். இனி தி.மு.க.வில் எல்லாம் அவர் தான். சட்டமன்ற தேர்தல் முடிந்தபிறகு தனக்கு தான் நினைப்பதை செய்வதற்கு தான் நினைப்பதை மட்டுமே செய்வதற்கு தன்னுடைய நண்பன் பொய்யாமொழியின் மகன் மகேஷ் மிகச்சரியாக இருப்பார் என தேர்ந்தெடுத்து எடுத்த எடுப்பில் கட்சிக்குள் விடாமல் மிகச்சரியாக தன் மகன் உதயநிதியின் ரசிகர் மன்ற பொறுப்பாளாராக அரிதாரம்பூசி தமிழகம் முழுக்க உள்ள திராவிட எண்ணம் கொண்ட புதிய இளைஞர்களை மன்றத்தில் இணைத்து அதன் மூலம் எல்லா மாவட்டங்களிலும் உள்ள இளைஞர்களை மிகச்சரியாக ஒன்று திரட்டி இன்றைக்கு தி.மு.க.வின் இளைஞர் அணியோடு அவர்களை இணைத்து வழிநடத்த ஒரு புது வெள்ளோட்டமாக தன்னிடம் இருக்கும் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் பொறுப்பை மகேஷ்க்கு கொடுத்து தி.மு.க.விற்குள் புது வெள்ளத்தை பாய்ச்சும் நல்லயுக்தியை பயன்படுத்த காத்திருக்கிறார் ஸ்டாலின்.
பொய்யாமொழியின் தம்பி அன்பில் பெரியசாமி  அமைச்சர் நேருவிடம் தனக்கு நல்லபதவி (திருச்சி மாநகர்செயலாளர்) தரும்படி கேட்டார்.
  நேருவோ எனக்கே உங்க அப்பா தான் அரசியல் ஆசான் உங்களுக்கு எல்லா நா எப்படிபா பதவி தரது. தளபதியும் தலைவரும் முடிவு செய்யட்டும் என்று கழன்று கொள்ள தளபதியிடம் முறையிட்ட பெரியசாமிக்கு மா.பொ.கு கொடுக்கப்பட்டது.
எது எப்படியோ மகேஷ் நாம் பார்த்த அளவில் நல்ல உழைப்பாளி. சமூகவலைதளங்களில் தனக்காக ஒரு பட்டாளத்தை உருவாக்கி வைத்தியிருக்கிறார்.
காயா? பழமா ? காத்திருப்போம் நாமும் … ;