டாக்டர்கள் பற்றிய வருகை பதிவேடு காணவில்லை - திருச்சிஅரசு மருத்துமனை டீன் அதிர்ச்சி

Posted by Unknown on 10:30 AM with No comments
 டாக்டர்கள் பற்றிய வருகை பதிவேடு  காணவில்லை -  திருச்சி டீன் அதிர்ச்சி


திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனை பணிக்கு வரும் டாக்டர்கள் பற்றிய வருகை பதிவேடு வேண்டும் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்ட நிலையில் பதிவேடு காணாமல் போய்விட்டதாக போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கன்டோன்மென்ட் ஸ்டேட் பேங்க் ஆபீசர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வக்கீல் அமல் அந்தோணி. இவர் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதியன்று திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீனுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அனுப்பியிருந்த மனுவில், திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ அலுவலர்களின் பணி ஒதுக்கீடு ஆவணங்கள், வருகைப்பதிவேடு மற்றும் 24 மணி நேர முக்கியத்துறைகள் சம்மந்தமான வருகை பதிவேடுகள் என 1.1.2005 முதல் 20.11.2013 வரையிலான ஆவணங்களை கேட்டிருந்தார்.



ஆனால் மருத்துவமனை நிர்வாகம் மனுதாரர் கேட்பவை அனைத்தும் முக்கியமான ஆவணங்கள் என்பதால் தர இயலாது என கூறிவிட்டது. இதனைத் தொடர்ந்து வக்கீல் அமல் மீண்டும் செப்டம்பர் 30ம் தேதி மாநில தகவல் ஆணையருக்கு மனு செய்ததோடு, டீனுக்கு மீண்டும் மனு செய்திருந்தார். இந்த மனுக்கள் மீது திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த டிசம்பர் 22ம் தேதி அனுப்பியுள்ள பதில் மனுவில் மனுதாரர் கேட்டுள்ளபடி வருகை பதிவேடு ஆவணங்களை அளிக்க முடியவில்லை. காரணம் இந்த ஆவணங்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டன.

இது குறித்து திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு மனு ரசீது பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வருகை பதிவேடு விபரங்கள் கேட்டது தொடர்பாக மனு மீது ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாக திருச்சி மருத்துவக்கல்லூரி டீன் அளித்துள்ள விளக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறியும் சட்டத்தில் கேட்ட டாக்டர்கள் வருகை பதிவேடு மாயம்

திருச்சி டீன் அதிர்ச்சி தகவல்

இது குறித்து திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு மனு ரசீது பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வருகை பதிவேடு விபரங்கள் கேட்டது தொடர்பாக மனு மீது ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாக திருச்சி மருத்துவக்கல்லூரி டீன் அளித்துள்ள விளக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


https://www.facebook.com/amal.antony.589?fref=photo