மோடியின் வேட்பாளர் சுப்ரமணியன் 1நம்பர் கேடியா ?

Posted by Unknown on 10:34 AM with No comments
ஊழலை ஒழிப்பதாக சொல்லும் மோடியின் வேட்பாளர் சுப்ரமணியன்  1நம்பர் கேடியா ?
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் சுப்பிரமணியம், கம்ப்யூட்டர் நிறுவனத்தை மோசடி செய்ததாக தொடரப்பட்டுள்ளது. இதனால், பாஜ வேட்பாளருக்கு தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் பாஜ சார்பில் வேட்பாளராக எம்.சுப்பிரமணியன் நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு ஜெயராம், ஆக்ஸ்போர்டு, அங்காளம்மன் ஆகிய பெயர்களில் 3 பொறியியல் கல்லூரிகள் திருச்சி மாவட்டத்தில் உள்ளன.

இந்நிலையில், இவர் மீது, கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனத்தை மோசடி செய்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகாரை திருச்சி தில்லை நகரில் செயல்பட்டு வரும் பிரிசிசன் இன்பர்மேடிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பொது மேலாளர் எஸ்.பாஸ்கர், கடந்த ஆண்டு செப்டம்பர் 17ல் கொடுத்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் சுப்பிரமணியம், ஜெயராம் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர்.என்.கண்ணன், ஆக்ஸ்போர்டு பொறியியல் பல்கலைக்கழக முதல்வர் டாக்டர்.ஜி.சீத்தாராமன், அங்காளம்மன் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் கிறிஸ்ட்ராஜ் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420 (மோசடி), 468 (மோசடி செய்யும் நோக்கில் ஏமாற்றுதல்), 471 (போலி ஆவணங்களைக் கொடுத்தல்), 506(1) மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார்வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முன்ஜாமீன் கோரி மனு தாக்கல்
புகாரின் அடிப்படையில் சுப்பிரமணியம், ஜெயராம் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர்.என்.கண்ணன், ஆக்ஸ்போர்டு பொறியியல் பல்கலைக்கழக முதல்வர் டாக்டர்.ஜி.சீத்தாராமன், அங்காளம்மன் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் கிறிஸ்ட்ராஜ் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420 (மோசடி), 468 (மோசடி செய்யும் நோக்கில் ஏமாற்றுதல்), 471 (போலி ஆவணங்களைக் கொடுத்தல்), 506(1) மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார்வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி, சுப்பிரமணியன் உள்ளிட்ட 4 பேரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, புகார் கொடுத்த பிரிசிசன் இன்பர்மேடிக் நிறுவனத்தின் பொது மேலாளர் பாஸ்கர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் 28ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.
பாஸ்கர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் நிறுவனம் சாப்ட்வேர் டெக்னாலஜி தொடர்பான பயிற்சிகளை வழங்கி வருகிறது. எங்கள் நிறுவனத்தை எம்.சுப்பிரமணியத்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பயிற்சி வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 2007ல் அந்த குழுமத்தைச் சேர்ந்த 3 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிகளைத் தொடங்கினோம்.
ஆனால், எங்களுடன் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட நாட்களுக்குள் பயிற்சிக்கான கட்டணத்தைத் தரவேண்டும். ஆனால், எங்களுக்கு பணத்தை தராமல் சுப்பிரமணியம் இழுத்தடித்தார். இதையடுத்து, 2011 டிசம்பரில் நாங்கள் அந்த 3 கல்லூரிகளுக்கும் கம்ப்யூட்டர் பயிற்சி வழங்குவதை நிறுத்திவிட்டோம்.
எங்களுக்கு அந்த கல்விக் குழுமத்தின் சார்பில் ரூ. 1 கோடியே 13 லட்சத்து 91,857 பாக்கி உள்ளது.
பணத்தைக் கேட்டு சுப்பிரமணியத்தின் அலுவலகத்துக்கு பல முறை தகவல் அனுப்பினோம். ஆனால், எந்த பலனும் ஏற்படவில்லை. இந்நிலையில், 2010 டிசம்பர் 3ம் தேதி கணக்குகளை முடிப்பதாக சுப்பிரமணியம் கடிதம் அனுப்பினார்.
இதையடுத்து, கடந்த 2013 நவம்பர் 12ம் தேதி அவரது அலுவலகத்துக்கு சென்றேன். அங்கு அவர் என்னை மிரட்டினார். அவர், என்னை மிரட்டியதையடுத்து 2014 மார்ச் 25ம் தேதி, அவர் மீது திருச்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தேன்.
எனது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு 2014 ஜூலை 4ல் உத்தரவிட்டது. அதன் பின்னர் என்னையும், சுப்பிரமணியத்தையும் திருச்சி போலீசார் அழைத்து விசாரித்தனர். சம்பிரதாயமாக நடந்த இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. விசாரணைக்குப் பிறகு எந்த குற்றமும் நடக்கவில்லை என்று போலீசார் முடிவுக்கு வந்தனர்.
இதையடுத்து, என்னை மோசடி செய்ததாக 2014 செப்டம்பர் 17ம் தேதி மீண்டும் ஒரு புகார் கொடுத்தேன். புகாரின் அடிப்படையில் சுப்பிரமணியம் உள்ளிட்ட 4 பேர் மீதும் திருச்சி மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கு விசாரணை தீவிர கட்டத்தில் இருப்பதால் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக வக்கீல் சிவா கூறும்போது,  பாஸ்கர் கொடுத்த புகார் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் சுப்பிரமணியம் தலைமறைவு குற்றவாளியாக இருக்கிறார். அவர் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ளது. குற்றம் செய்த ஒருவரை எப்படி வேட்பாளராக அங்கீகரிக்கலாம். இது தொடர்பாக ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் அதிகாரி, பாஜ தேசியத் தலைவர் அமித்ஷா, மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோருக்கு கடிதம் எழுதவிருக்கிறோம் என்றார்.
இதே போல வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்க சிலமணிநேரத்திற்கு திருச்சியில் உள்ள சில முக்கியமான பத்திரிக்கையாளர்களின் செல்போன் களில் சுப்ரமணியன் தான் நடத்தும் கல்விநிருவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு மேல் சம்பளம் கொடுக்கவில்லை என்கிற தகவல் பரவியது.
அதே போல தமிழக பிரபல மன்மத சாமியார்களின் மூலவரான திருச்சி பாத்திமா நகர் பிரேமானந்த சாமியிடம் இவர் ஆரம்ப காலத்தில் கணக்கபிள்ளையாக வேலை பார்த்தார் என்றும் அவர் பாலியல் சர்ச்சையில் சிக்கி சிறை சென்ற நேரத்தில் அந்த மடத்திலிருந்து பலகோடி ரூபாய்களை அபேஸ் செய்து  தான் தற்போது இவ்வளவு பெரிய கல்விநிறுவனங்களை வாங்குவதற்கு அந்த பணம் தான் பயன்பட்டது என்றும் கூறுகிறார்கள்.
 கை நிறைய பணத்தை வைத்துக்கொண்டு கல்லூரியில் நிர்வாகிகளுக்குள் நடக்கும் பிரச்சனை பயன்படுத்தி சில கல்லூரிகளை வாங்கும் போது  தமிழகத்தின் பிரபல ரவுடியான ”அப்பு” திருச்சிக்கு வரவழைத்து  தங்க வைத்து மிரட்டி வாங்கினார் என்ற குற்றசாட்டும்  சொல்லப்படுகிறது. 
நீண்டநாட்களாக நடந்து வந்த இந்த பிரச்னையால் தற்போது ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் எம்.சுப்பிரமணியத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வழக்கு தொடர்பாக பாஜ மேலிடம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்றும் ஸ்ரீரங்கம் தேர்தல் அதிகாரி என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளார் என்று ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.