அகில இந்திய தலைவராக தேர்வு - வாழ்த்துக்கள்..
Posted by Unknown on 10:30 PM with No comments
அகில இந்திய தலைவராக தேர்வு - வாழ்த்துக்கள்..
தோழர் திருநாவுக்கரசு அவர்கள் திருச்சி லால்குடி அருகே சிறுவயலூர் கிராமத்தில் சாதாரண தலித் குடும்பத்தில் பிறந்தவர் . Mcom முதுகலை பட்டதாரியான தோழர் திருநாவுக்கரசு அரியலூர் அருகில் சிமெண்ட் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து வேலை செய்யும் பொது தொழிற்சங்கத்தில் ஈடுபட்டார் .
நிர்வாகத்தின் சார்பில் பழி வாங்கப்பட்டு வேலை இழந்த தோழர் அரசு அவர்கள் லால்குடி கிராம பகுதியில் விவசாய தொழிலார்களை திரட்டும் பணியில் திறமையாக செயல்பட்டார் .
இந்த கால கட்டத்தில் லால்குடியில் சிபிஎம் தாலுக்கா செயலாளராகவும் பணி செய்து கொண்டே தாலுக்கா முழுவதும் கூலி போராட்டங்களில் ஈடுபட்டு விவசாயதொழிலாளர்களுக்கு கூலி உயர்வும் மனித உரிமைகளையும் பெற்று கொடுக்கும் போராட்டங்களை ஏராளமாக நடத்தினார் .
புள்ளம்பாடி அருகில் செம்பியகுடி குலமாணிக்கம் , வழுதியூர் , புதூர்உத்தமனுர் , பெருவளநல்லூர் , அன்பில் , அரியூர் , நெயக்குப்பை , வெள்ளனுர் , நன்சைசன்கேந்தி , மாந்துறை , வாளடி , பூவாளூர் , பின்னவாசல் ; காட்டூர் , கொமாக்குடி , செம்பறை இன்னும் ஏராளமான கிராமங்களில் பண்ணையார்களின் அடாவடித்தனத்தை எதிர்த்து போராடி கூலி உயர்வு பெற்று தந்து நிராயுதபாணிகளாக இருந்த தலித் மக்களுக்கு செங்கொடியை பாதுகாப்பு கவசமாக கொடுத்தார் .....
வெள்ளனுர் கூலி போராட்டத்தில் ஆதிக்க சக்திகளும் போலீஸ் சும் கூட்டு சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தினர் .
துப்பாக்கி சூடு நடத்தி தொழிலார்களை விரட்டினர் . நெயக்குப்பை கிராமத்தில் கூலி போராட்டம் நடந்த போது அனைத்து வீடுகளுக்கும் தீ வைத்து ஆதிக்க சக்தியினர் கொளுத்தினர் .. தொடர் போராட்டங்கள் மூலம் ஆதிக்க சக்திகளை பணியவைத்ததொடு , 450 குடும்பங்களுக்கும் அரசு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கும் வரை போராடினார் .
1993 ல் அன்பில் கூலி போராட்டத்தின் பொது தோழர் அரசு அவர்களையும் மற்ற நமது சங்கத்தின் தலைவர்களையும் கொலைவெறி தாக்குதல் நடத்திய ஆதிக்க சக்திகள் தோழர் அரசு அவர்களை வைக்கோல் போரில் வைத்து கொலை செய்ய முயற்சி செய்ததை நமது தோழர்கள் முறியடித்தனர் .. தோழர் அரசு அவர்கள் பல வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியுள்ளார் .
வெள்ளனுர் கூலி போராட்டத்தில் எட்டு ஆண்டுகள் தோழர் அரசு அவர்களும் நமது சங்கத்தின் முன்னணி தோழர்களும் நீதிமன்ற படிக்கட்டுகளுக்கு அலைக்கழிக்கப்பட்டனர் .
தோழர் அரசு அவர்கள் திருச்சி மாவட்டத்தில் முசிறி , மன்னச்சநல்லூர் , துறையூர் , தொட்டியம் , ஸ்ரீரங்கம் ஆகிய தாலுக்காக்களிளும் ஏராளமான கூலி போராட்டங்களை நடத்தியுள்ளார் .
கரூர் மாவட்டத்தில் அரவக்குரிச்சி , கிருஷ்ணராயபுரம் , குளித்தலை ஆகிய தாலுக்காக்களில் கூலிஉயர்வுக்கான போராட்டங்களை நடத்தினார் .
திருச்சி மாவட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலார் சங்கத்தின் மாவட்டத்தலைவராகவும் , செயலாளராகவும் பொறுப்புக்களை வகித்த தோழர் அரசு அவர்கள் சங்கத்தின் மாநில தலைவராகவும் , மாநில செயலாளராகவும் , பின்னர் அகில இந்திய துணைத்தலைவராகவும் பொறுப்புக்களிலிருந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான கிராமங்களில் கூலிக்கான , நிலத்துக்கான போராட்டங்கள் , பிரச்சாரங்கள் என தோழர் அரசு அவர்கள் பணி செய்துள்ளார் .
கூலிக்காக நிலத்துக்காக மனித உரிமைகளுக்காக போராடிய ஒரு எளிய மனிதர் செங்கொடி இயக்கத்தின் தலைமை பொறுப்புக்கு செல்வது மகிழ்ச்சியே !
நியூதிருச்சியின் சார்பாக வாழ்த்துக்கள்
0 comments:
Post a Comment