தீவிபத்தில் உறவுகளை இழந்த குழந்தைக்கு உதவிய கே.என். நேரு
Posted by Unknown on 1:48 PM with No comments
திருச்சி அருகே எடமலைப் பட்டிபுதூர் ராஜீவ் காந்தி நகரில் நேற்று முன்தினம்
அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பந்தல் அமைக்கும் தொழிலாளி முருகன், அவரது மனைவி சித்ரா, குழந்தைகள் காவியப்பிரியா, கவிப்பிரியா ஆகிய 4 பேர் உடல் கருகி இறந்தனர்.
இந்த சம்பத்தில் முருகனின் மூத்த மகள் 3–வது வகுப்பு
படிக்கும் மாணவி ஜனப்பிரியா (வயது 7) மற்றும் அவரது பாட்டி கலையரசி வீட்டில் தங்கி
இருந்ததால் உயிர் பிழைத்தார்.
பெற்றோர் மற்றும் சகோதரிகளை இழந்ததோடு வறுமையில் சிக்கி தவிக்கும் அவர்கள்
ஜனபிரியாவுக்கு பல்வேறு அமைப்பினர் ஆறுதல் கூறி, நிதியுதவியும்
அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட
தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு தீ விபத்து ஏற்பட்ட ராஜீவ்காந்தி நகருக்கு
நேரில் சென்ற சென்று தீ விபத்து இடத்தை பார்வையிட்டார்.
பெற்றோர் மற்றும் குடும்பத்தை இழந்த மாணவி ஜனப்பிரியா மற்றும் உறவி னர்களுக்கு
ஆறுதல் கூறினார். ஜனபிரியாவுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். அத்துடன்
உறவினர் கலையரசிக்கு ஆறுதல் கூறிய கே.என்.நேரு வருங்காலத்தில் மாணவி
ஜனப்பிரியாவுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.
நிகழ்ச்சியில் கே.என்.நேருவுடன் திருச்சி மாநகர தி.மு.க. செயலாளர் அன்பழகன், கவுன்சிலர் முத்துசெல்வம் மற்றும் கட்சியினர் சென்றனர்.
Categories: திருச்சி
0 comments:
Post a Comment