ஓடும் பஸ்சில் குதித்து தற்கொலை செய்வோம் ஸ்ரீரங்கத்தில் ஒட்டப்பட்டிருந்த பரபரப்பு போஸ்டர்.
Posted by Unknown on 3:19 PM with No comments
ஓடும் பஸ்சில் குதித்து தற்கொலை செய்வோம் ஸ்ரீரங்கத்தில் ஒட்டப்பட்டிருந்த பரபரப்பு போஸ்டர்.
ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியில் 3வது வார்டு இந்திராநகர் சுக்கிரவார்தோப்பு பகுதியில் சாலை யின் இருபுறமும் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 48 வீடுகள் ஆக்ரமிப்பு செய்துள்ளது. இவர்கள் 35ஆண்டுகளாக இப்பகுதியில் ஆக்ரமிப்பு செய்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் சொந்தவீடுகளில் குடியிருப்போருக்கு பாதையின்றி அவதிபட்டுவருகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் கடந்த 10ம் தேதி மதுரை ஐகோர்ட் கிளையில் புகார் மனு செய்தனர்.
மனுவை விசாரித்த ஐகோர்ட் 48 வீடுகளில் குடியிருப்போரையும் 3 நாட்களுக்குள் காலிசெய்யும்படி அப்போது உத்தரவிட்டது.
இதுதொடர்பாக 48 வீடுகளில் குடியிருந்தோர் கடந்த 23ம் தேதி காந்தி வேடமணிந்து சென்று கலெக்டரிடம் மாற்று இடம் கேட்டு மனு கொடுத்தனர். இதையடுத்து மாநகராட்சி சார்பில் கணக்கெடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை மாற்று இடம் வழங்கவில்லை.
இந்நிலையில் மாநகராட்சி, 48 குடும்பங்களை யும் வரும் 3 நாட்களுக்குள் வீட்டை காலிசெய்யும் தண்டோரா மூலம் அறிவித்தது.
இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மாற்று இடம் தராமல் திடீரென காலிசெய்யசொன்னால் எங்கு செல்வது எனக்கூறி, உடனடியாக மாற்று இடம் வழங்கக்கோரி இந்திராநகர் பகுதியில் 48 வீட்டினரும் கடந்த 2ம் தேதி ஒப்பாரி வைத்து போராட்டம் செய்தனர்.
இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மாற்று இடம் தராமல் திடீரென காலிசெய்யசொன்னால் எங்கு செல்வது எனக்கூறி, உடனடியாக மாற்று இடம் வழங்கக்கோரி இந்திராநகர் பகுதியில் 48 வீட்டினரும் கடந்த 2ம் தேதி ஒப்பாரி வைத்து போராட்டம் செய்தனர்.
இப்பிரச்னை தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அனைவரும் ஸ்ரீரங்கத்தில் உள்ள எம்எல்ஏ அலுவலகம் முன், கண்ணீர் அஞ்சலி என்று தலைப்பிட்டு முதல்வர் அம்மா விசுவாசிகள் என்ற பெயரில், 48 குடும்பங்களை சேர்ந்த 1500 பேர், ஸ்ரீரங்கத்தில் உள்ள முதல்வர் அலுவலகம் முன்பு இன்று ஓடும் பஸ்சில் விழுந்து தற்கொலை செய்து கொள்வோம் என அறிவித்து ஸ்ரீரங்கம் முழுவதும் பரபரப்பு போஸ்டர் ஒட்டியிருந்தனர்.
ஸ்ரீரங்கம் எம்எல்ஏ அலுவலகம் முன்பும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. உளவுத்துறை இன்ஸ்பெக்டர் பரத் அப்பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மற்றும் அப்பகுதி மக்களிடம் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில் ஆர்டிஓ மற்றும் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். உங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தால் வீடுகள் கொடுக்கப்படும். அங்கு வீடு கொடுக்கிற வரையில் நீங்கள் இங்கு இருக்கலாம். அதிகாரிகள் உங்களுக்கு தொந்தரவு கொடுக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார். இதையடுத்த அப்பகுதியில் அமைதி திரும்பியது.
0 comments:
Post a Comment