திருச்சி அதிமுக நிர்வாகி வெல்லமண்டி சண்முகம் மீது அதிமுக மாஜி நிர்வாகி புகார்
Posted by Unknown on 10:00 AM with No comments
திருச்சி அதிமுக நிர்வாகி வெல்லமண்டி சண்முகம் மீது அதிமுக மாஜி நிர்வாகி புகார்
திருச்சி அதிமுகவில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம்வந்துகொண்டிருப்பவர் வெல்லமண்டி சண்முகம். இவர் எம்பி குமாருக்கு ஆதாரவாளராக தன்னை காட்டிக்கொள்கிறார். இவர் மீது இன்று காலை திருச்சி பிரஸ் கிளப்பில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தன்னுடைய வீட்டு பத்திரத்தை வங்கியில் அடகு வைத்து மோசடி செய்து விட்டதாக அதிமுக பிரமுகர் பரபரப்பு புகார் தெரிவித்த குற்றச்சாட்டி உள்ளது அதிமுக வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருச்சி மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற முன்னாள் இணை செயலாளர் ஹரிகிருஷ்ணன் கூறியதாவது:
கடந்த 1998ம் ஆண்டு திருச்சி ஏர்போர்ட் பகுதி அதிமுக செயலாளர் வெல்லமண்டி சண்முகம் தொழில் துவங்குவதற்காக எனது வீட்டு பத்திரத்தை வாங்கி வங்கியில் அடகு வைத்து ரூ.55 லட்சம் கடன் வாங்கினார்.
வங்கி நிர்வாகம் எனது வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுகுறித்து போலீசார் உள்பட பலரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெல்ல மண்டி சண்முகத்திடம் இருந்து எனது வீட்டு பத்திரத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்னை போலவே இந்த பிரச்சனையில் அவருடைய பிஸினஸ் பாட்னர் ஒருவரையும் ஏமாற்றி அவரும் குடும்பத்தோடு தற்கொலை செய்த கொண்டார்.
இந்த விவகாரம் குறித்து கட்சியின் மனுக்கள் விசாரணை குழுவிலும் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றார்.
இல்லாவிட்டால் நானும், எனது மனைவி அம்சவள்ளியும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை.
அதிமுக பகுதி செய லாளர் மீது அக்கட்சி பிரமுகரே மோசடி புகார் கூறுவது திருச்சி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 comments:
Post a Comment