சர்வதேச இலங்கை போர்க் குற்ற விசாரணை குழுவில் இந்தியரும் இடம்பிடித்தார்
Posted by Unknown on 10:00 PM with No comments
சர்வதேச இலங்கை போர்க் குற்ற விசாரணை குழுவில் இந்தியரும் இடம்பிடித்தார்
போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்க இலங்கை அதிபர் அமைத்துள்ள ஆணையத்துக்கு உதவுவதற்கான சர்வதேசக் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஒருவர் இடம்பெற்றுள்ளார்.
இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போர் நடைபெற்றது. அப்போது, ராணுவம், விடுதலைப்புலிகள் ஆகிய இரு தரப்பும் போர்க் குற்றங்களை இழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்தும், போரின்போது காணாமல் போனவர்கள் குறித்தும் விசாரணை நடத்துவதற்காக இலங்கை அதிபர் ராஜபட்ச ஓர் ஆணையத்தை அமைத்துள்ளார். இந்த ஆணையத்துக்கு உதவுவதற்காக சர்வதேச நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவை இலங்கை அமைத்துள்ளது.
இந்தக் குழுவின் உறுப்பினராக உத்தரகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பின் தலைவரான பேராசிரியர் அவ்தாஷ் கௌஷல் நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் நிபுணர்களும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
ஜப்பான் அரசின் ஆலோசனைப்படி இந்தக் குழுவை இலங்கை அரசு அமைத்துள்ளதாக அவ்தாஷ் கௌஷலின் தன்னார்வ அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவ்தாஷ் கௌஷல் கூறுகையில், மேற்கண்ட விசாரணைக் குழுவின் உறுப்பினராகும் வாய்ப்பு, இந்திய அரசின் ஒப்புதலைத் தொடர்ந்து எனக்குக் கிடைத்துள்ளது'' என்றார்.
0 comments:
Post a Comment