டியூஷனுக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை
Posted by Unknown on 9:22 AM with No comments
அதிகாலையில் டியூஷனுக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவி வீட்டின் அருகிலேயே எரிந்த நிலையில் இறந்து கிடந்த சம்பவம்
குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம், அழகன் விளையைச் சேர்ந்தவர் வைகுண்டமணி 50, விவசாயி. இவரது மனைவி திரவியக்கனி. இவர்களுக்கு
சுனில்குமார்20, என்ற மகனும்,
சுகந்தி 18, சுபிதா 15 என்ற மகள்களும் உள்ளனர். சுனில் குமார்
டிப்ளமோ படித்து வருகிறார். சுகந்தி பள்ளிக்கு செல்லவில்லை. சுபிதா 10-ம் வகுப்பு படித்து வந்தார்.இவர் தினமும்
அதிகாலை 5 மணிக்கு அருகில்
உள்ள டியூசன் சென்டருக்கு படிக்க செல்வார். நேற்று அதிகாலையிலும் டியூசனுக்கு
சென்றார். வழக்கமாக காலை 7 மணிக்கு வீடு
திரும்பும் சுபிதா நேற்று திரும்பவில்லை. அவரை தேடும் பணியில் பெற்றோரும், அப்பகுதி மக்களும் ஈடுபட்டனர். அப்போது
சுபிதாவின் வீடு எதிரே உள்ள வாழைத் தோப்பில் இளம்பெண் ஒருவர் எரிந்த நிலையில்
இறந்து கிடப்பதை கண்டனர். அங்கு சென்ற திரவியக்கனி இறந்து கிடப்பது தனது மகள்தான்
என்பதை உறுதி செய்தார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எஸ்.பி. மணிவண்ணன் சம்பவ இடத்துக்கு
வந்தார். மோப்ப நாய் ஓரா சுபிதா இறந்து கிடந்த தோட்டத்தில் இருந்து மோப்பம்
பிடித்தப்படி சுபிதா வீட்டுக்குள் ஓடி விட்டு மீண்டும் தோட்டத்திற்கே வந்து
படுத்துக் கொண்டது. இதனால் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது சுபிதா டியூசனுக்கு சென்றபோது அவரை
யாராவது வழி மறித்து தோட்டத்திற்குள் தூக்கிச் சென்று எரித்து கொன்றார்களா?
என்பது பற்றி
ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Categories: சம்பவம்
0 comments:
Post a Comment