திருச்சி, கரூர், தஞ்சை பகுதிகளில் 22ந்தேதிக்கு பிறகு மணல் அள்ள தடை உயர்நீதிமன்றம் அதிரடி
Posted by Unknown on 9:40 AM with No comments
திருச்சி, கரூர், தஞ்சை ஆறுகளில் 22ந்தேதிக்கு
பிறகு மணல் அள்ள தடை உயர்நீதிமன்றம் அதிரடி
திருச்சி, தஞ்சாவூர், கரூர் மாவட்டங்களிலுள்ள 18 மணல்குவாரிகளில் வரும் 23ஆம் தேதி வரை மட்டுமே மணல்
அள்ள முடியும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
இந்த குவாரிகளில் மணல் அள்ளுவதை எதிர்த்து விவசாயிகள் சிலர் தொடர்ந்த வழக்கை
விசாரித்த நீதிமன்றம், இதை தெரிவித்துள்ளது.18 மணல் குவாரிகளுக்கும்
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய 6 மாத கால அனுமதி, வரும் 23ஆம் தேதியுடன் முடிவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதன்பின் மணல் அள்ள முடியாது என தெரிவித்தனர். எனவே, விவசாயிகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
நீதிபதிகள் கூறினர்.
Categories: திருச்சி
0 comments:
Post a Comment