உங்க குழந்தை ஜாக்ரதை எச்சரிக்கை ரிப்போர்ட்
Posted by Unknown on 7:27 PM with No comments
இந்தியாவில்
வருடத்திற்கு ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றனர். மத்திய அரசு அதிர்ச்சி தகவல்
குழந்தைகள்
காணாமல் போனால் பெற்றோருக்கு ஏற்படும் பதைபதைப்பு அதனை உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். இந்நிலையில்
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சுமார்
ஒரு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் காணாமல்
போவதாகவும், இதில் அதிகமானோர் பெண்
குழந்தைகள் என்றும் கூறி அதிரவைக்கிறது
மத்திய உள்துறை அமைச்சகத்தின்
புள்ளிவிவர ஆவணங்கள்.
இந்தியாவில்
குழந்தைகள் காணாமல்போவது தொடர்பான வழக்கு, கடந்த ஆண்டு
பிப்ரவரி 5 ஆம் தேதியன்று உச்ச
நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆண்டுக்கு 1.70 லட்சம் குழந்தைகள் காணாமல்
போவதாக மத்திய அரசு தரப்பில்
தெரிவிக்கப்பட்டது.
இதனைக்கேட்ட
உச்ச நீதிமன்றம் கடும் கோபமடைந்து, இப்பிரச்னையில்
அரசு அக்கறையற்று இருப்பதாக கடுமையாக சாடியதோடு, காணாமல் போகும் குழந்தைகள்
குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை
என்றும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில்
உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, தற்போது
ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட
நிலையில் இப்பொழுதும் ஆண்டுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் காணாமல்
போவதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின்
புள்ளிவிவர ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்த
தகவலை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல்
செய்துள்ளது. அதில், 2011 முதல் 2014 ஆம் ஆண்டு ஜூன்
வரை 3.25 லட்சம் குழந்தைகள் காணாமல்
போயுள்ளதாகவும், சராசரியாக
ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 1 லட்சம் குழந்தைகள் காணாமல்
போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது
தொடர்பாக தேசிய குற்ற ஆவணங்கள்
கூறும் தகவல் அதிர வைப்பதாக
உள்ளது. அதாவது இந்தியாவில் ஒவ்வொரு
எட்டு நிமிடத்திற்கு ஒரு குழந்தை காணாமல்
போவதாக தெரிவிக்கிறது. இதுமட்டுமல்லாது காணாமல் போகும் குழந்தைகளில்
55 சதவீதம் பேர் பெண் குழந்தைகள்
என்றும், காணாமல் போகும் குழந்தைகளில்
45 சதவீதம் பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை
என்றும், இதனால் அவர்கள் ஒன்று
கொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது பிச்சை எடுக்க
தள்ளப்பட்டிருக்க வேண்டும் அல்லது விபச்சாரத்தில் தள்ளப்பட்டிருக்க
வேண்டும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளதால்
இது மிகவும் கவலை அளிக்கும்
விஷயமாக உள்ளதாக குழந்தைகள் நல
ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதில்
குறிப்பிடத்தக்க ஒரு விஷயம், குழந்தைகள்
அதிகம் காணாமல் போகும் மிக
மோசமான மாநிலமாக மகாராஷ்ட்ரா திகழ்கிறது. இங்கு கடந்த மூன்றரை
ஆண்டுகளில் மட்டும் 50,000 க்கும் அதிகமான குழந்தைகள்
காணாமல் போயுள்ளனர். மத்தியபிரதேசம், டெல்லி மற்றும் ஆந்திராவில்
25,000 க்கும் குறைவான குழந்தைகள் காணாமல்
போயுள்ளனர்.
இதில்
கவலையளிக்கக் கூடிய விஷயம் இந்த
மாநிலங்கள் அனைத்திலுமே சிறுவர்களை விட பெண் குழந்தைகளே
அதிக அளவில் காணாமல் போயுள்ளனர்.
மகாராஷ்ட்ராவை எடுத்துக்கொண்டால், இங்கு
ஆண்டொன்றுக்கு 10,000 க்கும் அதிகமான பெண்
குழந்தைகள் காணாமல் போகின்றனர். இது
சிறுவர்களை காட்டிலும் மிக அதிகமாகும். ஆந்திராவில்
11,625 பெண் குழந்தைகளும், 6,915 சிறுவர்களும், அதேப்போன்று மத்தியபிரதேசத்தில் 15,000க்கும் அதிகமான பெண்
குழந்தைகளும், 9,000 சிறுவர்களும், டெல்லியில் 10,581 பெண் குழந்தைகளும், 9,367 சிறுவர்களும்
காணாமல் போயுள்ளதாக அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில்
இந்த நிலை என்றால், அண்டை
நாடான பாகிஸ்தானில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 3,000 குழந்தைகள் காணாமல் போவதாக அந்நாட்டு
அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள்
தொகை நெருக்கம் அதிகம்தான் இந்த பிரச்னைக்கு முக்கிய
காரணம் என்று கூறப்பட்டாலும், இந்தியாவை
விட அதிக மக்கள் தொகை
கொண்ட சீனாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 10,000 குழந்தைகள் மட்டுமே காணாமல் போகிறது
என்பது குறிப்பிடத்தக்கது.
Categories: இந்தியா
0 comments:
Post a Comment