கே.என் நேருவுக்கும் திருச்சி சிவாவுக்கும் என்ன பிரச்சனை

Posted by Unknown on 10:31 AM with No comments
திருச்சி திமுகவில் நடக்கிற கோஷ்டி பூசல்களால் இன்னும் கேவலமாக போகபோகிறது திருச்சி திமுக என தொண்டர்கள் புலம்புகிறாங்க. இந்த நேரு அண்ணாச்சி, திருச்சி சிவா எம்பி வீட்டு துக்கத்துக்கு கூட போகலண்னு பேஸ்புக்ல இருந்து துக்க வீட்டுக்கு வர்றவங்க போறவங்கன்னு எல்லார்க்கிட்டயும் சொல்லிக்கிட்டே இருக்கிறது ஒரு கும்பல்.

இவ்வளவு மோசமா இவர் இருப்பா இருப்பார்ன்னு நான் நினைச்சிக்கூட பார்க்கல என்கிறார்கள் சிவா ஆதரவாளர்கள். அவர்தான் வரலைன்னா இந்த நேரு ஆதரவாளர்கள் யாரும் வரலையேன்னு சிவா சமூகத்தைச் சேர்ந்த சாதிய இயக்க தலைவர்கள் பிரச்சனை எழுப்பிக்கிட்டு வர்றாங்க. போதாத குறைக்கு குமுதம் ரிப்பொர்டர் வார இதழ்ல கருணாநிதியே நேருவை திட்டியதாக செய்தி வேற போட்டிருக்காங்க.

சிவா மனைவியின் மரணத்தில் ஸ்டாலினுடன் நேரு
குமுதம் ரிப்போர்டரில் வந்த செய்தி
சிவாவின் மனைவியின் இறப்புக்கு துக்கம் விசாரிக்க வரவே இல்லைன்னு இவர்கள் சொல்கிறார்கள் ஆனால் நேரு தனது முகநூல் பக்கத்தில் நண்பர் சிவாவின் மனைவி மரணத்திற்கு தளபதியுடன் நானும் சென்றேன். நலம் விசாரிக்கச் சென்றேன் என புகைப்படங்களை போட்டிருக்கிறாரே இதற்கு பாசத்திற்குறிய சிவா அவர்களின் விளக்கம் என்னவென்றால் தளபதி வரும்போது ஓரமாக நின்றுவிட்டு சென்றதாக சொல்கிறார்கள்.

நேருவோ எப்பொதும் ஸ்டாலின் திருச்சி வந்தா அவர் கூடவே சென்னை போய் விட்டு திரும்பி வருவது வழக்கம் அதனால நான் தளபதியோட சென்னை போயிட்டு அந்தம்மா இறந்த அன்னைக்கு இராத்திரிதான் வந்து சேர்ந்தேன் என்கிறார். நான் யாரையும் சிவா வீட்டுக்கு போக வேண்டாம்னு சொல்லலைன்னு  சொல்லுறாரு.

நேருவின் பதிவுகள் : 
https://www.facebook.com/KnNehru/photos/a.406602089454114.1073741829.398594170254906/600875770026744/?type=1 
https://www.facebook.com/KnNehru/photos/a.406602089454114.1073741829.398594170254906/601389473308707/?type=1

நேருவுக்கு எதிரணியாக கருதப்படுபவர்கள்
சரிங்க நமக்கு ஒரு சந்தேகம்.  திருச்சி சிவாவின் மனைவி இறந்த அன்றும் அடுத்த நாளும் முக.ஸ்டாலின், கனிமொழி எம்பி. விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட முன்னணி பிரமுகர்கள் வந்தும் சிவா அவர்களின் மனைவி தேவிகா ராணியின் புகைப்படத்துடன் செய்திதாள்களில் செய்தி போட்டவர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திய புகைப்படத்தோட எந்த பத்திரிக்கையும் செய்திபோடல. வார்த்தை சூரரான சிவா அப்படி என்ன இந்த பத்திரிக்கைகாரர்களுக்கு துரோகம் செய்துவிட்டார்.  அதற்கும் நேருதான் காரணம் என கிளப்பி விடுறாங்க.


ஒன்று மட்டும் திமுக தலைமையில் நடக்கும் கோஷ்டி சண்டையும் திருச்சி திமுகவின் கே.என்.நேரு அணி. வனத்துறை செல்வராஜ்-திருச்சி சிவா கூட்டணி ஆகியன அக்கட்சியின் நரம்பும் சதையுமான திமுக தொண்டர்களுக்குள் அடித்துக்கொள்ளவே வழிவகுக்கும்.  காங்கிரசை விட மோசமாக நிலைக்கு தள்ளப்படும் திமுக எச்சரிக்கை