திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர் குறைந்துகொண்டே போகிறது அதிர்ச்சி தகவல்

Posted by Unknown on 7:00 AM with No comments
திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர் குறைந்துகொண்டே போகிறது அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் திருச்சி, திருவண்ணாமலை, கோவை, தேனி, திருப்பூர் உட்பட 20 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதாக, நீர்வள ஆதார விவர குறிப்பு மையத்தின் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறித்து, மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்படுகிறது. தமிழகத்தில் அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்படும் நீர் அளவு, மொத்தமாக ஒவ்வொரு மாதமும் நீர்வள ஆதாரத்துறை மூலம்  கணக்கிடப்படுகிறது.

கடந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததும், அதிகப்படியான நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்து போய் உள்ளது. குறிப்பாக, வணிக நோக்கில் அதிகளவு நீர் எடுக்கப்படுவதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதனால், ஆண்டுக்கு ஆண்டு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. மேலும், ஏரிகள் மற்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு மற்றும் அவற்றை தூர்வராமல் இருப்பது போன்ற காரணங்களால் நிலத்தடி நீர் குறைந்துபோனதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.


கடந்த ஜூலை மாதம் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த 2013 ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர்திருவண்ணாமலை, விழுப்புரம்திருச்சி, திருவாரூர், புதுக் கோட்டை, தஞ்சாவூர், கோவைதிருப்பூர், நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல்திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 20 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. ஆனால், கிருஷ்ணகிரி, கடலூர், ஈரோடு, கரூர், பெரம்பலூர், தர்மபுரி, கன்னியாகுமரி, நாகை., ராமநாதபுரம், நாமக்கல், சேலம், அரியலூர் ஆகிய 12 மாவட்டங்களில் கடந்த ஆண்டு 2013 ஜூலை மாதத்தை ஒப்பிடுகையில் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Categories: