8/20/14

பாட்டிகளுக்கும் பாதுகாப்பில்லை பாட்டிகளின் சங்கிலிகளை பறித்த பலே கும்பல்

பாட்டி படம் மாடலே
பாட்டிகளின் சங்கிலிகளை பறித்த பலே கும்பல் கைது.

பெண்கள் பாதுகாப்பாக வாழும் மாநிலம்னு முதல்வரம்மா சட்டசபையில சொன்னாங்க ஆனால் திருச்சி மாவட்டத்தில் பாட்டிங்களுக்கு கூட பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டிருக்குன்னு புலம்புறாங்க குளித்தலைக்காரங்க.

குளித்தலை, பணிக்கம்பட்டி, வலையப்பட்டி, நச்சலூர், சிவாயம், தோகைமலை, லாலாப்பேட்டை உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள 50-60 வயதுள்ள மூதாட்டிகளிடம் அவர்களது கவனத்தை திசை திருப்பி அவர்கள் அணிந்துள்ள சங்கிலிகளை பறித்து கொண்டு  கொள்ளையடிப்பதை தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து திருச்சி சரக டி.ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் உத்தரவின் போில் கரூர் மாவட்ட எஸ்.பி. ஜோஷி நிர்மல் குமார் அவர்களின் ஆலோசனைப்படி குளித்தலை காவல்துறை ஆய்வாளர் பிச்சைபாண்டியன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர்.

பாட்டி தொங்கட்டாணுக்கான மாதிரி படமே

     இந்நிலையில் நேற்று பெட்டவாய்த்தலை அண்ணாநகரை சேர்ந்த வாலன்டைம் என்பவரது மகன் ஜேம்ஸ்வின்சென்ட்(47) என்பவரை பெட்டவாய்த்தலை ரயில்நிலையம் அருகே இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் கைது செய்தார். அவாிடம் விசாரணை செய்தபோது ஜேம்ஸ்வின்சென்ட் தனது நண்பர் முருகானந்தம் என்பவருடன் சேர்ந்து தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும், அவர் இறந்த பின்பு அவரது தம்பி குளித்தலையை அடுத்த பொய்யாமணி திருச்சாப்பூரைச் சேர்ந்த கருப்பையா மகன் சிவா (எ) சிவக்குமார்(32) என்பவருடன் சேர்ந்து கிராமத்தில் தனியாக இருக்கும் மூதாட்டிகளிடம் வழி கேட்பது போல் அவர்களது கவனத்தை திசை திருப்பி சங்கிலிகளை பறித்து கொண்டு தப்பி ஓடி விடுவோம் என கூறினான். ஜேம்ஸ்வின்சென்ட் கொடுத்த தகவலின் படி சிவக்குமார் என்பவனும் கைது செய்யப்பட்டான். இவர்களது நெருங்கிய கூட்டாளி ஒருவன் தலைமறைவாகி விட்டான். அவனையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

            மேலும் இவர்களிடமிருந்து 5.50 லட்சம் மதிப்புள்ள 24 அரை பவுன் தங்க சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றவாளிகள் இருவரையும் குளித்தலை குற்றவியல் நடுவர் எண்.2 ல் ஆஜர்படுத்தப்ப்டனர். வழக்கை விசாாித்த நீதிபதி லதா இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவி்ட்டார்.

          தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடித்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

நன்றி: குளித்தலை செய்திகள்

விஜய்-முருகதாஸ் வீட்டை முற்றுகையிடுவோம்-புரட்சி பாரதம் அறிவிப்பு

கத்தி, புலிபார்வை ஆகிய சினிமா படங்களை தமிழகத்தில் திரையிடக்கூடாது என வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இலங்கை தூதரகம் அருகில் நடந்த போராட்டத்துக்கு கட்சி தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி தலைமை தாங்கினார். 

அப்போது கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தின் போது பூவை.ஜெகன்மூர்த்தி பேசியதாவது:– புலிபார்வை திரைப்படத்தில் தமிழர்களையும், தமிழ் போராளிகளையும் குறிப்பாக விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் துப்பாக்கி ஏந்தி வருவதாக காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. பாலசந்திரனை தீவிரவாதி போன்று சித்தரிக்கும் இந்த படத்தை தமிழகத்தில் திரையிடக்கூடாது.

 அது போல ராஜபக்சேவின் ஆதரவாளரின் நிறுவனம் தயாரிக்கும் கத்தி படத்தையும் வெளியிடக்கூடாது. இந்த படத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ட் செய்கிறார்.

 இவர்கள் தமிழர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தமிழர்கள் இல்லை என்றால் அதில் அவர்கள் தொடர்ந்து பணியாற்றலாம். இருவருக்கும் தமிழ் உணர்வு இருந்தால் அவர்கள் உடனடியாக அதில் இருந்து விலக வேண்டும். தொடர்ந்து பணியாற்றினால் புரட்சி பாரதம் மற்ற தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து போராடும். தமிழர்களுக்கு துரோகம் செய்யும் யாராக இருந்தாலும் நாங்கள் எதிர்ப்போம். இப்படத்தில் இருந்து விலகாவிட்டால் நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீடுகளை முற்றுகையிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நடிகைகளை வேட்டையாடும் ராஜபக்சேவின் மகன் நமல்

அது என்னமோ தெரியலங்க...

இலங்கை அதிபர் ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சேவுக்கு இந்திய நடிகைகள், குறிப்பா தமிழ் நடிகைகள் மேல ஒரு இது...

சென்னைக்கு சாதாரணமாக அந்த அதிபரோட மகனால்  வரமுடியாது என்பதால்... நினைச்சா டெல்லியோ அல்லது மும்பையிலோ ரூம்போட்டு கும்மாளம் அடிப்பதை வாடிக்கையாக வைச்சிருந்தாராம் ஆனால் இனி அதுபோல் நடக்காதாம்.
.
நமல் ராஜபக்சேவுக்காக சென்னை ஓஎம்ஆரில் ஆடம்பர ஓட்டலும் கோடம்பாக்கத்தில் அவருக்கான ஏஜென்டுகளும் தயாராக இருக்காங்களாம்!
சரி மேட்டருக்கு வருவோம்...

தமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த அவர், திடீரென மும்பையில் செட்டிலாகி, இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பதையும் தவிர்த்தார். ஒரு இந்திப் படத்தின் ஷூட்டிங்குக்காக இலங்கைக்குச் சென்றார். தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழ் திரைப்படத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கை போன அந்த நடிகைன், கிட்டத்தட்ட ராஜபக்சே அன்ட் கோவின் பிஆர்ஓவாகவே மாறி, அங்கே தமிழர்கள் சுகமாக வசிப்பதாகவும், விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களைப் பார்க்க ஆர்வமாக உள்ளதாகவும் பிரச்சாரம் செய்தார். ஆனால் போன இடத்தில் அவர் வேறு வேலைகளில் பிஸியாக இருந்ததாகவும், அதற்கான ஆதாரம் சிடியாக சிக்கியுள்ளதாகவும் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. 

கொழும்பிலுள்ள நட்சத்திர ஓட்டலில் அந்த நடிகை தங்கியிருந்தபோது அவரைச் சந்திக்க பல தொழில் அதிபர்கள் வந்திருந்ததாகவும், அப்படி வந்தவர்களில் ஒருவர் உல்லாசமாக இருக்கும் காட்சியை ரகசியமாக படம் பிடித்து சிடியாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சிடிதான் இப்போது சென்னையின் விவிஐபிகள் சிலரின் கஸ்டடியில் உள்ளதாம். அந்த சிடியில், ஓட்டலில் தங்கியிருக்கும் நடிகையை சந்திக்க வந்த தொழில் அதிபர்களில் ஒருவர் நடிகையை அணைத்து கொள்கிறார். பின்னர் நடிகையை அந்தரங்கமாக தொடும் காட்சிகளும் உள்ளனவாம். இதேபோல பல ஆயிரம் கோடி ரூபாவுடன் உலகம் சுற்றும் வாலிபனாகத் திரியும் ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சேயுடன் அந்த நடிகை உள்ள படங்களும் அவர்கள் கைவசம் சிக்கின. இது கடந்த நவம்பர் மாசம் நடந்தது.

நடிகை அசின் விவகாரம் இப்போது ஒய்ந்துள்ள நிலையில்.

இப்போது இன்னொரு பிரபல நடிகையுடன் நமல் ரொம்ப நெருக்கமாக, அணைத்தபடி உள்ள படம் ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கு.அந்த நடிகை சமீரா ரெட்டி. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகல்ல பிரபலம். தமிழில் வாரணம் ஆயிரம், வேட்டை, வெடி போன்ற படங்களில் நடித்தவர்.

மகளை கடத்தி 3 மாதங்கள் கற்பழித்த சித்தப்பா

குமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த பிளஸ்–2 மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார்.
 
கடந்த மார்ச் மாதம் தேர்வு எழுதி விட்டு விடுமுறையில் இருந்த மாணவி கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் இது குறித்து கீரிப்பாறை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
 
இதில், மாணவி அவரது சித்தப்பா (மாணவியின் தாயாரின் தங்கை கணவர்) முருகன் (28) என்பவருடன் சென்றிருப்பது தெரிய வந்தது.
 
இந்தநிலையில் நேற்று முன் தினம் மாணவியுடன் முருகன் ஊருக்கு திரும்பினார். உறவு முறையில் மகளை கடத்தி சென்ற முருகனை கண்டதும் அவரது குடும்பத்தினர் ஆவேசமடைந்தனர். அப்போது மாணவி மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். உறவினர்கள் அவரிடம் விசாரித்த போது, முருகன் மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி கேரளா அழைத்து சென்றதாக கூறினார்.
 
பால்வெட்டும் தொழிலாளியான முருகன் கேரளாவில் ஒரு ரப்பர் எஸ்டேட்டில் 3½ மாதம் அடைத்து வைத்து மாணவியை பலாத்காரம் செய்தாராம். இதனால் கர்ப்பமடைந்ததிருப்பதாக கூறி மாணவி கண்ணீர் விட்டு அழுதார்.
 
இதைக்கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். மாணவியை இந்த நிலைக்கு ஆளாக்கிய முருகனை ஏற்றுக் கொள்ள அவரது மனைவி மறுத்து விட்டார். மேலும், முருகன் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாணவியின் தாயார் கீரிப்பாறை காவல்துறையில் புகார் செய்தார்.
 
முருகன் மீது கீரிப்பாறை காவல்துறையினர் இந்திய தண்டனை சட்டம் 366(ஏ)–மைனர் பெண்ணை கடத்துதல், 376 கற்பழிப்பு ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஆய்வாளர் கஜேந்திரன், துணை ஆய்வாளர் தாமோதரன் ஆகியோர் விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.
 
பின்னர் முருகன் மற்றும் மாணவியை காவல்துறையினர் பூதப்பாண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின்னர் முருகன் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். மாணவி காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.
 
நீதிமன்ற உத்தரவுப்படி இன்று இருவரையும் ஆசாரி பள்ளம் மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

8/16/14

மனைவியிடம் பேசுங்கள் ! - திருச்சி சிவா M.P


பன்னிரெண்டாம் வகுப்புப் படிப்பை பாதியோடு விட்டுவிட்டு, பதினேழு வயதில் என்னை மணமுடித்து, 32 ஆண்டுகள் வாழ்ந்து, 49 வயது முடியும் நேரத்தில் என்னை தனி மனிதனாக தத்தளிக்க விட்டு என் மனைவி போய் விட்டாள்.
அவளுடைய முழு ஒத்துழைப்பு, வாழ விரும்பி நடத்திய போராட்டம், மருத்துவர்களின் முயற்சி, இத்தனையும் மீறி இன்னும் வளர்ந்து நிற்கும் மருத்துவத்திற்கு கட்டுபடாத நோய் ஒன்று, எல்லோரையும் தோற்கடித்து விட்டு அவளை கொண்டு போய் விட்டது.

இதுநாள் வரை என் வாழ்வில், கடந்த காலத்தில் நான் செய்த, அல்லது செய்யத் தவறிய எதையும் எண்ணி வருந்தியதேயில்லை. காரணம் எல்லாம் தெரிந்தே, தெளிந்தே செய்ததுதான்.

ஆனால் கடந்த ஒரு வார காலமாக ஒரு குற்ற உணர்ச்சி என்னை வாட்டி வதைக்கிறது. வாழ்வின் எல்லா நிலைகளிலும், வசந்தம் எட்டிப்பார்க்காத ஆரம்ப காலத்திலும், வளம் குறைந்திருந்த நாட்களிலும் மகிழ்ச்சியோடு என்னோடு வாழ்ந்தவள் அவள்.

பொன் நகைகளை கழட்டிக் கொடுத்து விட்டு, புன்னகையோடு மட்டும் வலம் வந்த நாட்கள் உண்டு. அரசியல் வெப்பம் தகித்தபோதும், தனிமனித வாழ்வின் துன்பங்கள் சூழ்ந்தபோதும், என் அருகே ஆறுதலாய், ஆதரவாய் இருந்தவள்.

எந்த நிலையிலும் தலை தாழ்ந்து வாழ்ந்திட கூடாது என்கின்ற என் குணத்திற்கு இயைந்து, இணைந்து நடந்தவள். சுயமரியாதையை காப்பதில் என்னையும் தாண்டி நின்றவள்.
மூன்று குழந்தைகளும் பிறக்கும் நேரத்தில், இடைதேர்தல் பனி, பிரச்சாரப்பணி, போராட்டங்கள் என்று அவள் அருகே இருக்காமல் சுற்றி கொண்டுஇருந்தபொது சிறிதும் முகம் சுளிகாதவள்.

1982 செப் 15 முரசொலியில் ' என் கண்கள் உன்னை தேடுகின்றன ' என்று கலைஞர் எழுதிய கடிதம் உங்களுக்காகவே என சொல்லி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் என்னை பெரியகுளம் இடைத்தேர்தலுக்கு அனுப்பிவிட்டு செப்17 குழந்தை பிறந்து, இரண்டு நாட்கள் கடந்து 19 ந்தேதி நான் பார்க்க வந்தபோது ஒரு சிறிதும் முகம் சுழிக்காமல் ஒருமணி நேரத்திலயே என்னை மீண்டும் தேர்தல் களம் அனுப்பி வைத்த கற்பனை செய்ய முடியாத குணம் கொண்ட குலமகள். இரண்டாவது குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து நேராக அப்போது ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு போலீஸ் நிலையத்தில் காவலில் இருந்த இடத்தி பிள்ளையை காட்டி விட்டு பத்திரமாக இருங்கள் என்று சொல்லி விட்டு போன இலட்சியவாதியின் சரியான துணை.

விருந்தோம்பல் , உபசரிப்பு, இன்முகம், எண்ணைக்கான வருவோர் அதனை பேருக்கும் அன்னபூரணி. இரவு இரண்டு மணிக்கு எழுந்து சுடச்சுட தோசையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பழைய துவையலை ஒதுக்கி புதிதாக அரைத்து பசியாற்றி பின்னர் சுருண்டு உறங்கும் அன்பு தெய்வம், தாய் போன துயரம் தெரியாமல், தாயின் இடத்தையும் நிரப்பி, ஒருபொழுதும், எதன் பொருட்டும் முகம் வாடுவது பொறுக்காமல் துடிக்கும் உள்ளம் கொண்ட உத்தமி;
பொது வாழ்க்கையில் நான் நெறி பிறழாமல் நடப்பதற்குப் பெரிதும் துணையாய், ஊக்கமாய், பக்கபலமாய், இருந்தவள்.

பண்டிகைகளும், திருநால்களும், கோலாகலமாய், கூட்டம் கூட்டமாய் கொண்டாடுவதற்கு அவள்எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும், காட்டும் ஆர்வமும் அளவிடற்கரியவை.

இத்தனை கருத்துக்களை அவள் மீது நான் கொண்டிருந்தன ஒருநாளும் வாய்விட்டு வார்த்தையில் சொல்லியதேயில்லை. ஆண்செருக்கு என்பார்கள், நிச்சயமாக அது இல்லை. இருந்திருந்தால் இந்த உறுத்தல் வந்துருக்காது. 

நேரம்இல்லை என்பார்கள், பொய் 32 ஆண்டுகளில் பத்து நிமிடம் கூடவா கிடைக்காமல் போயிருக்கும். தானாகவே புரிந்து கொள்வார்கள் என்பார்கள். என்றால் மொழி எதற்கு? மொழியின் வழியில் ஒரு பொருளுக்கு பல சொற்கள் எதற்கு? பேசுவதற்குதானே? உணர்துவதற்குதானே? ஒரு சொல் ஓராயிரம் புரியவைக்குமே.

காலம் கடந்து பயன்படுத்தினால் பயனத்துப்போவது பதார்த்தங்கள் மட்டுமா? வார்த்தைகளும் தானே. சரியான நேரத்தில் வெளிபடுதாவிட்டால், 'மன்னிப்பு', 'நன்றி' , ' காதல் ' என்ற எந்த சொல்லுக்கும் உயிர் இருக்காது.விளையும் இருக்காது.

இத்தனை கற்றும் கடமை தவரியதாகவே கருதுகிறேன். ஒருநாள் ஒரே ஒரு தடவை தனியாக அவளிடம், உன்னால் தான் உயர்வு பெற்றேன் என்று கூட அல்ல, உன்னால்தான் இந்த பிரச்சனை தீர்ந்தது, உன் துணைதான் இந்த துன்பமான நேரத்தை கடக்க வைத்தது. உன் ஆலோசனைதான் என் குழப்பத்திற்கு தீர்வு தந்தது. என் வேதனையை பகிர்ந்து கொண்டு என்னை இலேசகினாய் என்று ஒருமுறையாவது கூறியிருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பாய். கோடிரூபாய் கொட்டிகொடுத்தாலும் கிடைக்காத உற்சாகத்தை அடைந்திருபாயே.

ஊட்டிக்குப் பொதுக்கூட்டத்திற்கு சென்றிருந்த நேரத்தில் அவளின் உடல் நலம் மோசமடைததாக செய்தி கிடைத்தது வரும் வழியெல்லாம் இப்படியே யோசித்து இன்று அவளிடம் எப்படியும் உள்ளத்தை திறந்து இத்தனை நாள் சேர்த்து வைத்துஇருந்ததைஎல்லாம் கொட்டிவிட வேண்டும் என்று வந்து பார்த்தல் முற்றிலும் நினைவிழந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறாள்.

நினைவு திரும்ப வாய்ப்பேயில்லை என மருத்துவர்கள் உறுதியாக சொன்னபிறகு, மெல்ல அவள் காதருகே குனிந்து 'மும்தாஜை' ஷாஜகான் 'தாஜ்' என்று தனிமையில் அழைத்ததைபோல தேவிகாராணியை 'தேவி' என அழைத்தபோது , மூன்றாவது அழைப்பில் மருத்துவத்தை கடந்த அதிசயமாக புருவங்கள் இரண்டும் மருத்துவத்தை கடந்த அதிசயமாக புருவங்கள் 'என்ன' என்று கேட்பது போல மேல உயர்ந்து வலது விழியோரம் ஒரு துளி கண்ணீர் உருண்டோடியபோது நான் உடைந்துபோனேன்.

பேசியிருக்க வேண்டிய நாட்களில் மனதில் கொள்ளையாய் இருந்தும் பேசாமலே வீணாக்கி, உணர்வுகள் இழந்து கிடந்தவளிடம் அழுது, இன்று அவள் படத்திற்கு முன் உட்கார்ந்து கதறுகிறேன். வருகிரவரிடமெல்லாம் அவள் உயர்வுகளை நாளெல்லாம் உணர்கிறேன். ஒரே ஒருமுறை, அவள் கம்பீரமாய் உலவிய நாட்களில் உட்கார வைத்து பேசிஇருந்தால்...........

இவர் நம்மை முழுதாக புரிந்து கொண்டாரோ, இல்லையோ என்ற குழப்பத்திலேயே போய்இருப்பாளோ என்று நாளும் துடிக்கிறேன்.

எனக்கு ஆறுதல் கூறவந்த திரு.இவிகேஎஸ். இளங்கோவன், "வருதப்படதீர்கள் இதெல்லாம் அவர்களுக்கு சொல்லாமலே புரிந்திருக்கும் " என்று சமாதானப் படுத்தினார்.

நான் அவரிடம் கேட்டேன் , " நீங்களோ நானோ பொதுக்கூட்டத்தில் பேசுகிறபொழுதே, நம்முடைய பேச்சு சிறப்பாக இருந்ததோ இல்லையோ, என்பதை கூடத்தில் எழும் கரவொலி மூலம், முகக்குரிப்பின் மூலம், ஆதரவாளரின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது. 

ஆனாலும், நிகழ்ச்சி முடிந்து, காரில் ஏறியவுடன் உடன் பயனிபவர்கள் அந்த உரை குறித்து ஏதாவது சொல்லவேண்டும் என ஏன் எதிர் பார்க்கிறோம். பாராட்டினால் பரவசமடைகிறோம் . அதுபற்றி எதுவுமே பேசாமல் கூட வருபவர்கள் அமைதி காத்தால் கோபம் கொள்கிறோமே ஏன்? அது போலதான் வீட்டில் இருக்கிற பெண்களும் தங்கள் செயல்களுக்கும், சேவைகளுக்கும், பணிகளுக்கும், ஒரு வார்த்தை அன்பாக , கனிவாக, பாராட்டு சொல்லாக, கணவன் சொன்னால் மகிழ்வார்கள். இதில் நாம் இழப்பது எதுவுமேஇல்லையே என சொன்னேன்.

ஏழு நாட்களுக்கு மேலாகி விட்டது, அவள் படத்தை பார்க்கிறபோதெல்லாம் நெஞ்சிலே இருந்து எதோj ஒன்று கிளம்பி கண்களில் நீராய் முட்டுகிறது.காலங்கடந்து நான் உணர்கிறேன்.

தோழர்களே! தயவு செய்து மனைவியிடம் பேசுங்கள். அவர்களின் துணையினை, அன்பினை, பொறுப்பினை, பொறுமையினை, பெருமையினை, வாய்விட்டு வார்த்தைகளால் சொல்லுங்கள்.

என் மனைவிக்கு என்னை உணர்தாமலே, என் உள்ளதை திறக்காமலே, பேச்சையே தொழிலாக கொண்டவன் பேசி மகிழவைகாமலேயே அனுப்பி வாய்த்த கொடுமை இனி வேறெங்கும் நிகழவேண்டாம்.. வேண்டி கேட்கிறேன் 

உங்களுக்காகவே
உங்கள் பிள்ளைகளை,
உங்கள் பிரச்சனைகளை,
உங்கள் உறவுகளை, சுமந்து உங்கள் தேவைகளைப் புரிந்து தீர்த்து, எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு, பொருள் தேடி, புகழ்தேடி நாம் வெளியே சுற்றுகிரபோதேல்லாம், காவல் தெய்வமாய் குடும்பத்தைக் காக்கும் அந்த பெண்களை புரிந்து கொண்டோம் என்பதன் அடையாளமாய், அங்கிகரமாய் நாலு வார்த்தைகள் தயவு செய்து பேசுங்கள்!

நான் சந்தித்து கேட்டவர்களில் 95 விழுக்காட்டினர் என்னைப் போலவே பேசுவதில்லை என்றே சொன்னார்கள். இது மாறட்டும்... என் மனைவியின் பிரிவு தரும் வேதனையை விட இந்த உறுத்தல் தரும் வேதனை மிக அதிகமாக இருக்கிறது. என் அனுபவம் சிலருக்காவது உதவட்டும் என்றே இதை எழுத முனைகிறேன். சில வீடுகளாவது நிம்மதியில், மகிழ்ச்சியில் நிலைக்கட்டும்.

என் வேதனை,
நான்படும் துயரம்
வேறெவர்க்கும் எதிர்காலத்தில் வேண்டாம்
அவளோடு வாழ்ந்த நாட்களின் இனிமையான தருணங்களின்
நினைவுகளே துணையாக அந்த நினைவுகளே சுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.............

இதனை இப்போது சொல்லும் நான் வாழ்ந்த நாட்களில் ஒரு நாள் கூட வாய்விட்டு வார்த்தைகளில் ஒருமுறை கூட சொன்னதில்லை என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று.

8/14/14

ஆகஸ்ட் 15-ல் தீக்குளிப்பேன் எச்சரிக்கும் எம்.எல்.ஏ.


பீகாரை வறட்சி மாநிலமாக அறிவிக்கவில்லை என்றால் ஆகஸ்ட் 15-ல் தீக்குளிப்பேன் என்று உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள அம்மாநில எம்.எல்.ஏ. தினேஷ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பீகார் மாநிலம் ஜெகதிஷ்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தினேஷ் குமார் பீகாரை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். தினேஷ் குமார் சிங் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ. ஆவார். அவர் பீகாரை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி, அம்மாநில முதல் மந்திரியின் அலுவலகத்திற்கு வெளியே கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார். அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததை அடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் தினேஷ் குமார் அதனை நிராகரித்து விட்டார். இதனையடுத்து போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அங்கும் தினேஷ் குமார் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். "பீகார் மாநில பொருளாதாரம் விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ளது. மழை பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறேன். மழை இல்லாததால் விவசாயிகள் மிகுந்த வறுமையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், அரசு அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை." என்று தினேஷ் குமார் கூறியுள்ளார். மேலும், வரும் வியாழன் கிழமை (இன்று) பீகார் மாநிலத்தை வறட்சி மிகுந்த மாநிலமாக அறிவிக்காவிட்டால், அதற்கு அடுத்த நாளான சுதந்திரத் தினத்தன்று தீக்குளிப்பேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாட்னா, பீகாரை வறட்சி மாநிலமாக அறிவிக்கவில்லை என்றால் ஆகஸ்ட் 15-ல் தீக்குளிப்பேன் என்று உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள அம்மாநில எம்.எல்.ஏ. தினேஷ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பீகார் மாநிலம் ஜெகதிஷ்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தினேஷ் குமார் பீகாரை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். தினேஷ் குமார் சிங் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ. ஆவார். அவர் பீகாரை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி, அம்மாநில முதல் மந்திரியின் அலுவலகத்திற்கு வெளியே கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார். அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததை அடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் தினேஷ் குமார் அதனை நிராகரித்து விட்டார். இதனையடுத்து போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அங்கும் தினேஷ் குமார் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். "பீகார் மாநில பொருளாதாரம் விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ளது. மழை பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறேன். மழை இல்லாததால் விவசாயிகள் மிகுந்த வறுமையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், அரசு அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை." என்று தினேஷ் குமார் கூறியுள்ளார். மேலும், வரும் வியாழன் கிழமை (இன்று) பீகார் மாநிலத்தை வறட்சி மிகுந்த மாநிலமாக அறிவிக்காவிட்டால், அதற்கு அடுத்த நாளான சுதந்திரத் தினத்தன்று தீக்குளிப்பேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

8/13/14

கணிதத்தில் நோபல் பரிசை வென்ற இந்திய வம்சாவளி பேராசிரியர்



இந்திய வம்சாவளி பேராசிரியரான மஞ்சுள் பார்கவா உள்பட 4 பேருக்கு இந்த ஆண்டுக்கான கணித நோபல் என்று அழைக்கப்படும் பீல்ட்ஸ் மெடல் வழங்கப்படுகிறது. பீல்ட்ஸ் மெடல், 1936-ம் ஆண்டு சர்வதேச கணித சங்கத்தால் ஸ்தாபிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

15 ஆயிரம் கனடா டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 லட்சம்) ரொக்கப்பரிசும், பதக்கமும் கொண்டது இந்த விருது. ஆண்டுதோறும் கணிதத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை செய்கிற 40 வயதுக்கு மேற்படாதவர்களுக்கு இந்த பீல்ட்ஸ் மெடல் வழங்கப்படுகிறது. இது கணித நோபல் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று இந்தாண்டுக்கான விருது பெறுபவர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மஞ்சுள் பார்கவா, மரியம் மிர்ஜாகனி, ஆர்தர் அவிலா மற்றும் மார்ட்டின் ஹேரர் என நான்கு பேருக்கு இந்தாண்டு பீல்ட்ஸ் மெடல் வழங்கப்பட உள்ளது. இவர்களில் மஞ்சுள் பார்கவா இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா அமெரிக்கர். மரியம் மிர்ஜாகனி ஈரானைச் சேர்ந்த பெண்மணி. ஆர்தர் அவிலா பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். மார்ட்டின் ஹேரர் ஆஸ்திரியாக்காரர். தற்போது 40 வயதான மஞ்சுள் பார்கவா, 1974-ம் ஆண்டு, ஆகஸ்ட் 8-ந் தேதி கனடாவின் ஹேமில்டனில் பிறந்தவர். நியூயார்க்கில் வளர்ந்தவர்.

14 வயதிலே பள்ளிக்கல்வி, கம்ப்யூட்டர் கல்வி முடித்தவர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற மஞ்சுள் பார்கவா, தற்போது அமெரிக்காவில் நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இன்னொரு இந்தியருக்கு ரோல்ப் விருது அதேபோல், மற்றொரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுபாஷ் என்ற கணித பேராசிரியர் ரோல்ப் நேவான்லின்னா விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியானார் பிரேமானந்தா சாமியாருக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி


தமிழகத்திலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக, முதல் பெண் நீதிபதி பானுமதி இன்று பதவியேற்கிறார். உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகள் ஒதுக்கீடு 31. தற்போது 27 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் ஒரு நீதிபதி மட்டும் பெண் நீதிபதியாவார். தற்போது, உச்ச நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

 இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மூத்த வக்கீல் உதய் உமேஷ் லலித், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரபுல்ல சந்த் பாண்டே, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் மனோகர் சபேரே, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.பானுமதி ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கவுள்ள நீதிபதி ஆர்.பானுமதி தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர்.  தனது 33வது வயதில் 1988ல் மாவட்ட நீதிபதியாக நேரடியாக தேர்வு செய்யப்பட்டார். திருச்சியில் நீதிபதியாக பணியாற்றியபோது நாட்டையே உலுக்கிய பிரேமானந்தா சாமியார் வழக்கை விசாரித்தார். அந்த வழக் கில் சாட்சி விசாரணை முடிவடைந்த நிலையில் பாலியல் பலாத்காரம் செய்த பிரிவுகளில் சாமியார் பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியும் ரூ.67 லட்சம் அபராதம் விதித்தும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி மிகவும் பிரபலமானவர்.

இவர் கடந்த 2003 ஏப்ரல் 3ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2013 நவம்பர் 12ல் ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்ற தலை மை நீதிபதியாக பொறுப்பேற்றார். தற்போது, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கவுள்ள நீதிபதி பானுமதி தமிழகத்திலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் முதல் தமிழ் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார். இவர் உச்ச நீதிமன்றத்தில் 7 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றவுள்ளார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நீதிபதி பானுமதிக்கு இன்று காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இணையங்களில் கருத்து வெளியிட்டால் கைதாவீர்கள் எச்சரிக்கை எதிர்க்கும் வைகோ



இணையங்களில் கருத்து வெளியிட்டால் கைதாவீர்கள் எச்சரிக்கை
எதிர்க்கும் வைகோ

இணையங்களில் வெளியிடப்படும் கருத்துரிமையைப் பறிக்கும் விதமான சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

"தமிழ்நாடு சட்டமன்றத்தில் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், ஆகஸ்டு 11-ஆம் தேதி ஒரு சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார்.

தமிழ்நாடு அபாயகரமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (Tamilnadu Prevention of Dangerous Activities Act (TPDA) சில திருத்தங்கள் செய்வதற்கு இம்மசோதா வகை செய்கிறது. 'குண்டர் சட்டம்' என்று அழைக்கப்படும் இச்சட்டத்தின் கீழ் கள்ளச்சாராயக்காரர்கள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தும் குற்றவாளிகள், குடிசை நில அபகரிப்பாளர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது இவற்றோடு தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவோர், பாலியல் குற்றவாளிகள் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரையில் குண்டர் சட்டம் என்பது, தொடர் குற்றங்களில் ஈடுபடும் வழக்கமான குற்றவாளிகள் மீது மட்டும்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்தின் மூலம், முதல் முறையாக குற்றச்செயலில் ஈடுபடுவோருக்குக்கூட ஒரு ஆண்டு காலம் விசாரணை இன்றியே சிறையில் அடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தகவல் தொழில் நுட்பத்துறையில் வியத்தகு வளர்ச்சி பெற்று கோடிக்கணக்கானோர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். அரசின் மீது கருத்து மாறுபாடு கொண்டோர், அரசு நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்தோர் கருத்துக்களை பகிர்ந்தால், தற்போது கொண்டுவந்துள்ள சட்டத்திருத்த மசோதாவின்படி நடவடிக்கை எடுத்து சிறையில் தள்ள முடியும். தகவல் தொழில்நுட்பக் குற்றங்களை தடுப்பதற்காக கொண்டுவரப்படுவதாக அமைச்சர் தெரிவித்து இருந்தாலும், இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.

இச்சட்டத் திருத்தங்கள் அரசியல் சட்டப்பிரிவு 22-க்கு எதிரானது என்று ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும் அரசியல் சாசனம் பிரிவு 21 இன் கீழ் வழங்கப்பட்டுள்ள தனி மனித சுதந்திர உரிமையையும் தட்டிப்பறிப்பதாக சட்டத் திருத்தம் அமைந்துள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவோர் மீது மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கொண்டுவரப்பட்ட தடா, பொடா போன்ற கொடூர சட்டங்கள், தவறாக பயன்படுத்தப்பட்டதற்கு ஏராளமான முன்னுதாரணங்கள் இருக்கின்றன. அதைப்போலவே குண்டர் சட்டத் திருத்த மசோதா நிறைவேறினால் பெரும்பாலும் அரசின் பழிவாங்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும், பொய் வழக்குகள் புனைவதற்கும் வழிவகுக்கும்.

கொடிய பாலியல் குற்றங்களை தடுப்பது மட்டுமல்ல அச்செயலில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித கருத்து மாறுபாடும் கிடையாது.

ஆனால், அதே நேரத்தில் நோய் தீர வேண்டுமானால் அதற்காக மூலக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கும், குற்றச் செயல்களுக்கும் அடிப்படை காரணமாக இருப்பது மதுப்பழக்கம்தான்; குடிவெறியர்களின் கூடா செயல்களுக்கு திரும்புகின்ற திசையெல்லாம் மதுக்கடைகளை அரசே திறந்து வைத்து நடத்துவதுதான் மூலக்காரணம் ஆகும்.

தமிழக அரசு நடத்துகின்ற மதுக்கடைகளை மூட முடியாது என்று சட்டமன்றத்தில் அறிவித்துவிட்டு, பாலியல் குற்றங்களைத் தடுக்கிறோம் என்று சட்டங்களை கொண்டு வருவதால் மட்டும் சமுதாயத்தை திருத்த முடியாது.

தமிழகத்தின் பண்பாட்டு சீரழிவுக்கும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கும் முதன்மை காரணமாக இருக்கின்ற மதுப்பழக்கத்தை அடியோடு ஒழித்துகட்ட மதுக்கடைகளை நிரந்தரமாக இழுத்து மூடுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்;

ஜனநாயகத்தின் பெயரால் அச்சுறுத்தலுக்கும், பழிவாங்குதலுக்கும், கருத்துரிமை பறிப்பதற்கும், வகை செய்கின்ற சட்டத் திருத்தங்கள் கொண்டு வருவதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.