பாட்டிகளுக்கும் பாதுகாப்பில்லை பாட்டிகளின் சங்கிலிகளை பறித்த பலே கும்பல்
![]() |
பாட்டி படம் மாடலே |
பாட்டிகளின் சங்கிலிகளை பறித்த பலே கும்பல் கைது.
பெண்கள் பாதுகாப்பாக வாழும் மாநிலம்னு முதல்வரம்மா சட்டசபையில சொன்னாங்க ஆனால் திருச்சி மாவட்டத்தில் பாட்டிங்களுக்கு கூட பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டிருக்குன்னு புலம்புறாங்க குளித்தலைக்காரங்க.
குளித்தலை, பணிக்கம்பட்டி, வலையப்பட்டி, நச்சலூர், சிவாயம், தோகைமலை, லாலாப்பேட்டை உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள 50-60 வயதுள்ள மூதாட்டிகளிடம் அவர்களது கவனத்தை திசை திருப்பி அவர்கள் அணிந்துள்ள சங்கிலிகளை பறித்து கொண்டு கொள்ளையடிப்பதை தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து திருச்சி சரக டி.ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் உத்தரவின் போில் கரூர் மாவட்ட எஸ்.பி. ஜோஷி நிர்மல் குமார் அவர்களின் ஆலோசனைப்படி குளித்தலை காவல்துறை ஆய்வாளர் பிச்சைபாண்டியன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர்.
பாட்டி தொங்கட்டாணுக்கான மாதிரி படமே
இந்நிலையில் நேற்று பெட்டவாய்த்தலை அண்ணாநகரை சேர்ந்த வாலன்டைம் என்பவரது மகன் ஜேம்ஸ்வின்சென்ட்(47) என்பவரை பெட்டவாய்த்தலை ரயில்நிலையம் அருகே இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் கைது செய்தார். அவாிடம் விசாரணை செய்தபோது ஜேம்ஸ்வின்சென்ட் தனது நண்பர் முருகானந்தம் என்பவருடன் சேர்ந்து தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும், அவர் இறந்த பின்பு அவரது தம்பி குளித்தலையை அடுத்த பொய்யாமணி திருச்சாப்பூரைச் சேர்ந்த கருப்பையா மகன் சிவா (எ) சிவக்குமார்(32) என்பவருடன் சேர்ந்து கிராமத்தில் தனியாக இருக்கும் மூதாட்டிகளிடம் வழி கேட்பது போல் அவர்களது கவனத்தை திசை திருப்பி சங்கிலிகளை பறித்து கொண்டு தப்பி ஓடி விடுவோம் என கூறினான். ஜேம்ஸ்வின்சென்ட் கொடுத்த தகவலின் படி சிவக்குமார் என்பவனும் கைது செய்யப்பட்டான். இவர்களது நெருங்கிய கூட்டாளி ஒருவன் தலைமறைவாகி விட்டான். அவனையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் இவர்களிடமிருந்து 5.50 லட்சம் மதிப்புள்ள 24 அரை பவுன் தங்க சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றவாளிகள் இருவரையும் குளித்தலை குற்றவியல் நடுவர் எண்.2 ல் ஆஜர்படுத்தப்ப்டனர். வழக்கை விசாாித்த நீதிபதி லதா இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவி்ட்டார்.
தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடித்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
நன்றி: குளித்தலை செய்திகள்
பெண்கள் பாதுகாப்பாக வாழும் மாநிலம்னு முதல்வரம்மா சட்டசபையில சொன்னாங்க ஆனால் திருச்சி மாவட்டத்தில் பாட்டிங்களுக்கு கூட பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டிருக்குன்னு புலம்புறாங்க குளித்தலைக்காரங்க.
குளித்தலை, பணிக்கம்பட்டி, வலையப்பட்டி, நச்சலூர், சிவாயம், தோகைமலை, லாலாப்பேட்டை உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள 50-60 வயதுள்ள மூதாட்டிகளிடம் அவர்களது கவனத்தை திசை திருப்பி அவர்கள் அணிந்துள்ள சங்கிலிகளை பறித்து கொண்டு கொள்ளையடிப்பதை தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து திருச்சி சரக டி.ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் உத்தரவின் போில் கரூர் மாவட்ட எஸ்.பி. ஜோஷி நிர்மல் குமார் அவர்களின் ஆலோசனைப்படி குளித்தலை காவல்துறை ஆய்வாளர் பிச்சைபாண்டியன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர்.
பாட்டி தொங்கட்டாணுக்கான மாதிரி படமே
இந்நிலையில் நேற்று பெட்டவாய்த்தலை அண்ணாநகரை சேர்ந்த வாலன்டைம் என்பவரது மகன் ஜேம்ஸ்வின்சென்ட்(47) என்பவரை பெட்டவாய்த்தலை ரயில்நிலையம் அருகே இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் கைது செய்தார். அவாிடம் விசாரணை செய்தபோது ஜேம்ஸ்வின்சென்ட் தனது நண்பர் முருகானந்தம் என்பவருடன் சேர்ந்து தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும், அவர் இறந்த பின்பு அவரது தம்பி குளித்தலையை அடுத்த பொய்யாமணி திருச்சாப்பூரைச் சேர்ந்த கருப்பையா மகன் சிவா (எ) சிவக்குமார்(32) என்பவருடன் சேர்ந்து கிராமத்தில் தனியாக இருக்கும் மூதாட்டிகளிடம் வழி கேட்பது போல் அவர்களது கவனத்தை திசை திருப்பி சங்கிலிகளை பறித்து கொண்டு தப்பி ஓடி விடுவோம் என கூறினான். ஜேம்ஸ்வின்சென்ட் கொடுத்த தகவலின் படி சிவக்குமார் என்பவனும் கைது செய்யப்பட்டான். இவர்களது நெருங்கிய கூட்டாளி ஒருவன் தலைமறைவாகி விட்டான். அவனையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் இவர்களிடமிருந்து 5.50 லட்சம் மதிப்புள்ள 24 அரை பவுன் தங்க சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றவாளிகள் இருவரையும் குளித்தலை குற்றவியல் நடுவர் எண்.2 ல் ஆஜர்படுத்தப்ப்டனர். வழக்கை விசாாித்த நீதிபதி லதா இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவி்ட்டார்.
தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடித்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
நன்றி: குளித்தலை செய்திகள்