12/29/14

ச்சீப்பா போன சி.பா. பேரன் எதுடா எக்ஸ்குளுயுசிவ்..?

ச்சீப்பா போன சி.பா. பேரன்

எதுடா எக்ஸ்குளுயுசிவ்..?

இன்னைக்கு ராத்திரி 8.00 மணிக்கு – தந்திடிவியில் ராஜபக்சேவின் நேரடி பேட்டி ஒளிபரப்புராங்களாம். இந்த பேட்டி ஊடகபுரட்சினு 5நிமிடத்திற்கு ஒரு முறை விளம்பர வேற. இதை பார்த்து கொதித்து போய் கண்டனம் தெரிவித்த தமிழர் அமைப்புகளும் தலைவர்களும் ஊடக சுதந்திரத்தில் தலையிடுவதா ஊதி பெரிசாக்குறாங்க.


எங்க கேள்வி இது தான்.

யாருக்குமே தெரியாத யாராளுமே நெருங்கமுடியாத ஒரு செய்தியை தனிப்பட்ட ஊடகம் வெளிப்படுத்தினால் அது எக்ஸ்குளுயுசிவ்..

திருடனே வரசொல்லி, வாகனமும் ஏற்பாடு பண்ணி, வசதியா வேற வேற ஏற்பாடுகளையும் பண்ணிக்கொடுத்து திருடன் கிட்ட, அவன பாராட்டி அவனுடைய பராக்கிரமத்தை சொல்லி இவுங்களே கதை, திரைக்கதை வசனமும் எழுதிக்கொடுத்து கேமரா முன்னாடி நடிக்க வச்சு அதை எக்ஸ்குளுயுசிவ்.. 8.00 மணிக்கு ஊடகபுரட்சி என்று விளம்பரபடுத்திக்கொள்வதற்கு பதில் வேற நல்ல தொழிலை பார்க்கலாம்.

சி.பா. ஆதித்தனார் தமிழர்களை படிக்க வைத்தார். அவர் பேரனோ தமிழர்களை கொன்றவனை நடிக்க வைத்து உண்மையான தமிழர்களை துடிக்க வைக்கிறார்.

பண கட்டுக்களாலேயே பங்களா கட்டும் அளவிற்கு வசதி வந்தும் கூட பாழாப்போன இந்த பாலுவுக்கு ஏன் இந்த பணவெறி….

தமிழர்களின் புத்தியை மழுங்கடிக்க நடக்கும் சர்வேதேச சதியில் தந்திடீவியும் விழுந்துவிட்டது.






12/28/14

திருச்சி கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி - மக்கள் வளர்ச்சி பணிக்கு முக்கியத்துவம்

மக்கள் வளர்ச்சி பணிக்கு முக்கியத்துவம்
திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் கூட்டுறவு சங்கப் பதிவாளராக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து புதிய கலெக்டராக கே.எஸ்.பழனிச்சாமி இன்று காலை 9 மணிக்கு பொறுப்பேற்றார். டிஆர்ஓ தர்ப்பகராஜ் மாவட்ட பணிகளை ஒப்படைத்தார். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர்(கணக்குள்) இந்திராணி, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை )ராம சாமி, நேர்முக உதவியாளர் (பொது) ஜெயஸ்ரீ ஆகியோர் உடனிருந்தனர்.
அதன்பின்னர் கலெக்டர் அளித்த பேட்டி:
அரசு திட்டங்களை சிறப்பாக மக்களுக்கு கொண்டு சென்று அவர் களது குறைகளை தீர்க்க பாடுபாடுவேன். பொதுமக்கள் தங்களது குறைகளை எந்த நேரத்திலும் நேரில் சந்தித்து தெரிவிக்கலாம். மக்கள் வளர்ச்சி பணிகளு க்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் செம்மையாக நடைபெற்று வருவதால் அதன் வழியில் என் பணியும் தொடரும் என்றார்.
கலெக்டர் பழனிச்சாமி எம்விஎஸ்சி(கால்நடை மருத்துவம்) படித்துள்ளார். 1997ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருந்துள்ளார். பின்னர் பெரம்பலூர் மாவட்ட ஆர்டிஓ, சிவகங்கை மாவ ட்ட டிஆர்ஓ, சென்னை மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளராகவும், 2007ம் ஆண்டு வேலூர் மாநகராட்சியின் கமிஷனராகவும், 2011ம் ஆண்டு அதிமுக அரசு பதவி ஏற்றவுடன் தேனி மாவட்ட கலெக்டராக இருந்துவந்துள்ளார்.


செல்போனில் வீடியோ விளையாடிய போது வெடித்து சிதறி சிறுவன்

குழந்தைகளிடம் செல்போன் கொடுத்து வீடியோ கேம் விளையாட சொல்லி கொடுக்கும் பெற்றோர்களா நீங்கள்
அப்படி என்னறால் இதை கவனமாக படியுங்கள். 
பெரம்பலூர் அருகே சார்ஜ் செய்யப்பட்டிருந்த நிலையிலிருந்த செல்போனில் கேம் விளையாடிய போது அது வெடித்து கை விரல்கள் சிதறி காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெரம்பலூர் அருகே ஆத்தூர் சாலையில் உள்ள எசனை கிராமத்தை சேர்ந்த பூங்காவனம்&அருள்நாயகி தம்பதியினரின் மகன் ஆதிகேசவன்(11). இவர் எசனை கிராமத்திலுள்ள அரசுப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அரையாண்டு தேர்வு விடு முறை என்பதால் பெரம்பலூர் அருகே திருச்சி& சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எறையூர் கிராமத்திலுள்ள பெரிய ம்மா லட்சுமி வீட்டி ற்கு ஆதிகேசவன் தனது தாயார் அருள்நாயகியுடன் நேற்று முன்தினம் சென்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து வீட்டில் சார்ஜ் செய்யப்பட்டிருந்த நிலையிலிருந்த சைனா செல்போனில் சிறுவன் ஆதிகேசவன் கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென செல்பொன் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இந்த விபத்தில் ஆதிகேசவனின் முகத்தில் தாவாய் பகுதியிலும் வலது உள்ளங்கை மற்றும் விரல்கள் சிதறியும் காயமுற்றார். செல்போன்வெடித்ததில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட, சொட்ட கதறிய சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது தாயார் மற்றும் உறவினர்கள் அவரை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தனலட்சுமி சீனிவாசன் பள்ளி மாணவன் மர்ம மரணங்கள் இந்த வருடத்தில் மட்டும் 14

RamKumar
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளி
மூடி மறைக்க முயன்ற பள்ளி நிர்வாகம்-துணைபோகும் காவல்துறை!
4 நாட்களாக உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டத்தின் காரணமாக ஆசிரியர் கைது!
தற்கொலை உண்மையா?
ஒப்புக்கு செய்தி வெளியிட்டு பத்திரிகைகள் மவுனம் ஏன்?
=============================
இந்த விடுதியில் இந்த ஆண்டில் நிகழும் நான்காவது மர்ம மரணம் என்றும், இதுவரையில் நாற்பதுக்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு வந்த பெரம்பலூர் வாசிகள் கூறுகின்றனர்.
உண்மை என்ன?
ஓர் உண்மை கண்டறியும் குழு விசாரணை அவசியம் என்று எண்ணுகிறேன்.
தங்களின் ஆலோசனை கூறவும்,
இப்படிக்கு,
அ.கமருதீன்,
வழக்கறிஞர் / ஒருங்கிணைப்பாளர்
குடிமக்கள் உரிமைகள் பொதுமன்றம்,
திருச்சி.
9894267688
===================================
விரிவான பத்திரிகை செய்திகளுக்கு.....
பெரம்பலூர், டிச.27–
கடலூர் மாவட்டம் நெய்வேலி ‘பி’ பிளாக் கேபிள் தெருவை சேர்ந்தவர் ராமநாதன். இவருடைய மகன் ராம்குமார் (வயது 17). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ்1 படித்து வந்தார். கடந்த 22ந் தேதி ராம்குமார் பள்ளி விடுதியில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ராம்குமாரின் பெற்றோர் தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார்கள்.

இதையடுத்து ராம்குமாரின் உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு மாணவரின் உடலை பிரேத பரிசோதனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்ய மூன்று நிபந்தனைகளை விதித்தனர்.



மாணவன் மர்ம மரணம்.
பிரேத பரிசோதனையை மருத்துவக்குழுவினர் தான் மேற்கொள்ள வேண்டும். அந்த மருத்துவக்குழுவுடன் எங்கள் தரப்பிலான மருத்துவர் ஒருவர் உடன் இருக்க வேண்டும். பிரேத பரிசோதனையை வீடியோவில் முழுமையாக பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். ஆனால் பிரேத பரிசோதனை செய்ய உள்ள மருத்துவக்குழுவுடன் அவர்கள் தரப்பிலான மருத்துவர் ஒருவர் உடன் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் ஏற்க முடியாது என்று திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ராம்குமாரின் உடலை வாங்க மறுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததால் தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் ராம்குமாரின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையிலேயே உள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பள்ளியின் கணித ஆசிரியர் குன்னத்தை சேர்ந்த ஆசைத்தம்பி (வயது 32), மாணவர் ராம்குமார் விசில் அடித்ததால் பல மாணவர்கள் முன்னிலையில் பிரம்பால் அடித்து, கண்டித்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து ஆசிரியர் ஆசைத்தம்பியை பெரம்பலூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.


தகவல் உதவி 

12/27/14

Welcome Sir

தென்தமிழக வேளான்மை பெருமக்களின் வாழ்வாதார பிரச்சனையான முல்லைபெரியார் பிரச்சனை சுமூகமாக முடியும் காலகட்டத்தில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவராக திறம்பட செயலாற்றி ஆட்சியாளர்களுக்கும், அவர்களை ஆட்சிகட்டிலில் அமர வைத்த மக்களுக்கும் மிகச்சிறப்பாக பல நல்ல திட்டங்களை வகுத்து சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவராக செயல்பட்டு இன்று எங்கள் திருச்சி மாவட்ட மக்களுக்கு புத்தாண்டு பரிசாக 2015ல் பொறுப்பேற்கும் மரியாதைக்குரிய டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி ..எஸ். அவர்களை நியூதிருச்சி பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறோம்Welcome Sir.


12/26/14

இவன ஜோட்டால அடிச்சா என்ன ?

 இவன ஜோட்டால அடிச்சா என்ன ?
உள்ளுர் தமிழர்களை உலக பணக்காரர் ஆக்குகிறேன் என்று லட்ச லட்சமாய் பணத்தை வாங்கி, கோடி கணக்கில் செக் கொடுத்து,  வருட கணக்கில் வாய்தா கொடுத்தும் மந்திரித்துவிட்ட கோழி மாதிரி தலையாட்டிக்கொண்டு இருக்கும் இழிச்சவாயர்களாகவே வாழ பிறவி எடுத்து இருக்கும் திருச்சிமாவட்டத்தை சுற்றி உள்ள பள்ளிக்கூட ஆசிரியர் பெருமக்களே !
உங்களுக்கு உழைத்த உழைப்பிற்கு அதிகமான சம்பளத்தை ( மக்கள் வரிப்பணம் ) அரசாங்கம் கொடுத்ததால் தான் ஆத்துல வந்தது மணல்ல சொருகுதுனு அசட்டையா இருக்கீங்களா…. 
போங்கையா… போங்க நீங்க அவங்கிட்ட லட்சம் குடுத்த கோடி குடுப்பான்னு நம்பி கொட்டி குடுத்த பணம் இப்ப அவன்கிட்ட பணம் வந்துருச்சு….
கண்டெய்னர்ல வந்த பணத்தை வச்சு கீரனூரில் கண்ட கண்ட இடத்தை எல்லாம் விலைக்கு வாங்குகிறான்.
அப்பீட்டு ஆவுறதுக்குள்ள ஜீட்டிஸ் ஆயிடுங்க.
ஒரு க்ளு திருச்சி சிவாஜி சிலைக்கு பக்கத்துல தான் இவன் சார்பா ராமர் தம்பி பட்டுவாடா பண்றானாம்.














பதில் சொல்வாரா ரஜினி ?

திரு. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நாங்கள் சம்பாதித்த கொடுத்த
கோடிக்கணக்கான பணத்தை என்ன செய்தீர்கள் ???? 
எங்களுக்கு என்ன செய்தீர்கள் ???

இன்னும் எத்தனை முறை தான் நாங்கள் ஏமாறுவது..... 

சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு,

வணக்கம். உங்கள் ரசிகன் ஒருவன் எழுதும் கடிதம் இது. உங்களை பற்றி பேசினாலும் ஹிட். ஏசினாலும் ஹிட் என்ற கணக்கில் இந்த கடிதத்தை
நான் நிச்சியமாக எழுதவில்லை.

உங்கள் படங்களை பற்றி நான் இங்கே விமர்சிக்கபோவதும் இல்லை. ஏனென்றால், ஓவர் ஆக்டிங் இல்லாமல், கதைக்கு தேவையான எதார்த்த நடிப்பை தருவதில் தமிழில் உங்களுக்கு நிகர் வேறு யாருமில்லை என்பது என் கருத்து. "ஆறிலிருந்து அறுபது வரை", "ஜானி" போன்ற படங்களில் உங்களது நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன் இல்லை இன்னமும் வியந்து கொண்டே இருக்கும் உங்கள் ரசிகன் நான். "எந்திரன்" னிலும் உங்கள் நடிப்பு அருமை.

உங்கள் அரசியல் பிரவேச அறிவிப்புகள், ஜெயலலிதா தொடங்கி ஒக்கேனக்கல் வரை நீங்கள் தந்த மாறுபட்ட அறிக்கைகள் ஆகியவற்றை பற்றியும் நான் இங்கே குறை கூற போவதில்லை. அரசியலுக்கு நீங்கள் வருவதும், வராமல் போவதும், வருவதாக கூறிக்கொண்டே இருப்பதும் உங்கள் தனிப்பட்ட முடிவு.

நான் உங்களுக்கு இந்த கடிதம் எழுவதற்க்கான மையப்புள்ளியாய் இருப்பது வேறு விஷயம். அது நான் உட்பட, தமிழ்நாட்டு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட விஷயம்.

ரஜினிகாந்த், இன்று தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாது உலக அளவிலும் உங்களின் இந்த பெயர் பிரபலம். இன்று இந்திய சினிமாவில், ஒரு படத்துக்கு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் நீங்கள்.

ஆசியாவில், ஜாக்கிசானுக்கு அடுத்த இடத்தில் சம்பளம் வாங்கும் நடிகரும் நீங்கள்தான். தெரிந்த கணக்குபடி, உங்கள் சம்பளம் சுமார் இருபத்தி ஐந்து கோடியை தாண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி.

திரையுலகமும், ரசிகர்களும் உங்களுக்கு தந்திருக்கும் இந்த இடத்திற்கு மிகபொருத்தமானவர்தான் நீங்கள். "சூப்பர் ஸ்டார்" என்று உங்கள் இடத்தில் இன்னொருவரை வைத்து நினைத்து பார்க்ககூட எங்களால் முடியவில்லை.

என்னுடைய கேள்வி இதுதான்....நீங்கள் சினிமாவில் சம்பாதிக்கும் கோடிக்கணக்கான ருபாய் பணத்தை என்ன செய்கிறீர்கள்? சமுகத்திற்கு, தமிழ்நாட்டிற்கு உங்கள் பங்களிப்பு என்ன?

நமது நாட்டில் பிரதமரை விமர்சிக்கலாம். ஏன், கோவில் வாசல்முன்பு கூட்டம்போட்டு, 'பகுத்தறிவாளர்கள்' என்ற பெயரில் கடவுளை கூட கன்னாபின்னாவென்று பேசலாம். நான், எனக்கு பிடித்த சினிமா நடிகரான உங்களிடம் எனது கேள்வியை, சந்தேகத்தை கேட்க கூடாதா?

ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளை போல, நான் உங்களை இப்படி கேள்வி கேட்க காரணமே ...சாட்சாத் நீங்கள்தான்.

"அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா" என்று எங்களை நோக்கி கை நீட்டியவர் நீங்கள்தான்.

நீங்களே கதை,வசனம் எழுதிய "பாபா" படத்தின் இறுதிகாட்சியில்,கடவுளை விட பெரியது மக்கள்சேவைதான் என்று எங்களுக்கு அறிவுரை
சொன்னது நீங்கள்தான்.

கமல், தான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை, அதே சினிமாவில் முதலீடு செய்கிறார். விஜயகாந்த், தான் சொன்னபடி அரசியலுக்கு வந்து செலவு செய்கிறார்.

நேற்று வந்த நடிகர் சூர்யா கூட "அகரம் அறக்கட்டளை" தொடங்கி, ஏராளமான ஏழை மாணவர்களின் கல்விசெலவுகளை எற்றுவருகிறார். அரசியல் நோக்கமாக இருந்தாலும் நடிகர் விஜய், நிறைய கம்ப்யூட்டர் சென்டர்களை தொடங்கி, இலவச பயிற்சி தருகிறார். ஏன், த்ரிஷா கூட புற்றுநோய் மருத்துவமனை, அநாதை இல்லம் என்று அவ்வபோது வலம் வருகிறார்.

ஆனால், இவர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக இருக்கவேண்டிய நீங்கள் செய்த சமுக பங்களிப்புகள் என்ன?

"நான் ஆன்மிகவாதி", "தாமரை இலை தண்ணீர் போல வாழ்பவன்", "இமயமலையை விரும்பும் பற்றில்லாதவன்" என்றும், குட்டி தத்துவ கதைகள், ரமண மகரிஷியின் எளிமை என்றெல்லாம் நீங்கள் பேசுவதற்கும், வெளிக்காட்டி கொள்வதற்கும் , யாதார்த்ததில் நீங்கள் செய்யும் காரியங்களுக்கும் இடையே அந்த 'இமயமலை' அளவுக்கு முரண் இருக்கிறேதே, அய்யா.

"இமயமலை"யை விரும்புகிறவர், வசதி அற்றவருக்கும் தரமான சேவை தரும் மருத்துவமனையோ அல்லது கல்விநிலையமோ அல்லவா நடத்தவேண்டும்?

இப்படி நான் எழுதியதிற்கு மன்னிக்கவும். அரசியலை போலவே ஆன்மிகமும் உங்கள் சொந்த விஷயம்.

ஆன்மிகத்தையே தொழிலாக வைத்திருக்கும் சாமியார்கள் எல்லாம் உத்தமர்களா என்ன?

நான், உங்களுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதியதின் காரணத்திற்கு வருகிறேன்.

நீங்கள் கட்டிய ஸ்ரீ ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் ஒரு நாள் வாடகை...கிட்டத்தட்ட ஒரு லட்ச ருபாய். இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் சுமார் மூன்று கோடி ருபாய்.

1991 - இல் நீங்கள், உங்கள் மனைவி லதா அவர்களின் மூலம் "ஆசிரமம்" என்று ஒரு பள்ளியை சென்னையில் தொடங்கியபோது மிகவும் சந்தோஷம் அடைந்தேன். பெயரை பார்த்துவிட்டு,அது ஏதோ ஏழை குழந்தைகளுக்கான இலவச கல்வி நிலையம் என்று நினைத்தேன்.

அப்புறம்தான், புரிந்தது, அது, நுனி நாக்கில் I am studying in Ashram என்று பேசும் மேல்தட்டு, மேல்நடுத்தர வர்க்க பிள்ளைகள் மட்டுமே படிக்ககூடிய அல்லது படிக்க முடிந்த ஒரு பள்ளி என்று.

சென்னைவாசிகளை கேட்டால் அவர்களே சொல்வார்கள்.இன்று, சென்னையில், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில்...உங்களது ஆசிரமமும் மன்னிக்க ஆஸ்ரமும் ஒன்று.

TASSC (The Ashram School Specialised Curriculum) என்று மார்க்கெட்டிங் செய்து, கொள்ளைலாபம் பார்க்கும் உங்கள் பள்ளியை பற்றி இரண்டு உதாரணங்களை இங்கே உங்கள் முன்வைக்கிறேன்.

"அங்கு படித்து கொண்டுஇருந்த என் மகனை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டேன். வெளியில் தெரிவதைபோல, சிறந்த கல்வி தரப்படுவதில்லை. அதே சமயம், ஆண்டுக்கு 5000 ருபாய் தொடங்கி கட்டணத்தை ஒவ்வொரு வகுப்பிலும் ஏற்றிகொண்டே செல்கிறார்கள்" என்று தெரிவித்தார் ஒரு பெண்மணி.

சென்ற வருடம் ஜூன் மாதம், complaints.india இணையதளத்தில் உங்கள் பள்ளியில் பணிபுரிந்த ஒரு ஆசிரியை "ஆஸ்ரம் பள்ளி நிர்வாகம் எங்களுக்கு ஒழுங்காகவே சம்பளம் தருவது இல்லை. திருமதி.லதா ரஜினியிடம் புகார் அளித்தும் பயனில்லை. உடனடி நடவடிக்கை எடுங்கள்" என்று வெளிப்படையாகவே புகார் தெரிவித்தது உங்களுக்கு தெரியுமா?

தலைவா என்று உங்களை அன்புடன் அழைத்து, உங்கள் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ஒரு ஏழை ரசிகன், தனது வீட்டு குழந்தையை உங்கள் பள்ளியில் சேர்க்கவந்தால், நீங்கள் உருவாக்கி இருக்கும் "பிம்பங்கள்" எல்லாம் உடைந்து சுக்குநூறாக சிதறிவிடுமே சார்.

முழுவதும் இலவச கல்வி தராவிட்டாலும் பரவாயில்லை. ஒரு பத்து பணக்கார வீட்டு பிள்ளைகளை சேர்த்துகொள்ளும் உங்கள் பள்ளி நிர்வாகம், குறைந்தபட்சம் நாலு ஏழை,நடுத்தர வகுப்பு பிள்ளைகளையாவது கட்டணம் இல்லாமல் சேர்த்துகொண்டால் என்ன?

சமிபத்தில் அரசு பள்ளி கட்டண முறைகளை முறைபடுத்திய பின்புதான், புகார்களுக்கு பயந்து உங்களின் ஆஸ்ரம் போன்ற பள்ளிகளில் கட்டணம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வந்து இருக்கிறது.

அடுத்தது, உங்கள் துறைக்கு வருகிறேன்.

நீங்கள் சார்ந்த சினிமாதுறை பிரச்சினைளை எப்போதாவது முன் நின்று தீர்த்து இருக்கீர்களா? அரசின் தயவை எதற்கு எடுத்தாலும் அவர்கள் நாடுவதை தடுத்து,உங்கள் சொந்த செலவில் அவர்களின் தேவைகளை எப்போதாவது நிறைவேற்றி உள்ளீர்களா?

சினிமா உங்களுக்கு தொழில். அதில் நீங்கள் பணமும், புகழும் குவிப்பது நியாயமானதே..

அதுதான், சினிமாவில் கோடிகோடியாய் சம்பாதித்து வருகிறீர்களே, பள்ளி போன்ற இன்ன பிற விஷயங்களில், சேவை மனப்பான்மையோடு செயல்பட ஏன் சார் உங்களுக்கு மனம் வரவில்லை?

"என் உடல், பொருள், ஆவியை தமிழுக்கும், தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா". - படையப்பா படத்தின் பாடல் வரிகள் நினைவில் இருக்கிறதா?

சொல்லுங்கள் சார், நீங்கள் இதுவரை தமிழுக்கு, தமிழக மக்களுக்கு என்ன கொடுத்தீர்கள் அல்லது கொடுக்க போகிறீர்கள்?

எல்லா தொழிலிலும் உங்களுக்கு சுயநல நோக்கும், லாபமும்தான் பிரதானமா?

"பாட்ஷா" படத்தில் சொன்னதுபோல, உங்கள் இதயத்தை தொட்டு பதில் சொல்லுங்கள்.

உங்கள் பதில் "ஆம்" என்றால்,

அது ஒன்றும் தவறு இல்லை. நீங்கள் அரசியல்வாதிகளை போன்று ஊழல் செய்தோ, அதிகாரிகளை போன்று லஞ்சம் வாங்கியோ சம்பாதிக்கவில்லை. இந்த வயதிலும், எந்திரன் படத்துக்கான உங்கள் உழைப்பை கண்டு வியந்தவர்கள் நாங்கள்.

ஆனால், எனது இரண்டு கோரிக்கைகளை மட்டும் உங்கள் முன்வைக்கிறேன்.

எதோ "எந்திரன்" விஞ்ஞானபடம் என்பதால் தப்பிவிட்டது. கண்டிப்பாக அடுத்துவரும் உங்கள் "ராணா" படத்தில், டைட்டில் பாடலில் தமிழ் மக்களுக்கு நீங்கள் என்னவேண்டுமானாலும் தருவீர்கள் போன்ற வரிகள் இருக்கும்.

இனி,இதுபோன்ற ,வழக்கமாக உங்கள் படங்களின் "டைட்டில்" பாடல்களில் வரும் 'வாழ வச்சது தமிழ்ப்பால்', 'அண்ணன் வந்தால் தமிழ்நாடு அமெரிக்கா' போன்ற அர்த்தமற்ற, அனாவசிய வார்த்தைகளை தவிருங்கள். வசனங்களிலும் அவ்வாறே.

மேடைகளில், வார்த்தைக்கு வார்த்தை "என்னை வாழ வைத்த தமிழ் மக்களே" என்று முழங்குவதை நிறுத்துங்கள். வேண்டுமானால்,
"என்னை வாழ வைத்த ரசிக பெருமக்களே" என்று சொல்லிக்கொள்ளுங்கள்.

தமிழ், தமிழ்நாடு, தமிழ் மக்கள் போன்ற உணர்வுபூர்வமான வார்த்தைகளை, அரசியல்வாதிகளை போலவே, உங்கள் சொந்த 'பிசினஸ்''க்கு தயவுசெய்து பயன்படுத்தாதீங்க, ரஜினி சார்.

இப்படிக்கு,
தமிழ்நாட்டு பொதுமக்கள் சார்பாக,
உங்கள் ரசிகர்களில் ஒருவன்.

குறிப்பு - இந்த கடிதம் 2011 ஆண்டு எழுதப்பட்டது.

12/24/14

இயக்குனர் சிகரத்துக்கு அவமானம்...... இறுதிசடங்கு ...

இயக்குனர் சிகரத்துக்கு அவமானம்...... இறுதிசடங்கு ... 

கே.பாலச்சந்தர் இறுதி சடங்குகள் எல்லாம் முடிந்து நடிகர்கள் எல்லாம் மயானத்தை விட்டு வெளியே வருகிறார்கள்.

அதுவரை ஒரு வகை சோகத்தில் இருந்த கூட்டம் ரஜினி வெளியே வரும்போது ஒரே ஆர்ப்பாட்டம். அந்த மானங்கெட்ட ரசிகர்கள் அவரை நகர விடவில்லை. அவரை தொட ஒவ்வொருவனும் முந்தி ரஜினியை சூழ்ந்து கத்தி கூச்சலிடுகின்றனர்.

அவரை காரை நெருங்க விடாமல் பயங்கர முட்டல்...மோதல்..கடைசியில் அவர் காரில் ஏறியதும் மொத்த சாக்கடையை தின்னும் ரசிகர்கள் அந்த காரை பின் தொடர்ந்து ஓடுகின்றனர். அந்த கார் டிரைவர் எப்படியாவது கூட்டத்தை விலகி சென்று விட வேண்டுமென்று லாவகமாக ஓட்டினாலும் அந்த இன்னோவா கார் ஒரு சிறு வளைவில் சுவற்றில் முட்டி விடுகிறது.

அப்போதும் பின்னால் வந்த அந்த அறிவிழந்த கூட்டம் ரஜினியின் காரை தொட்டு தொட்டு தனது ஆசையை தீர்த்து கத்தி கூச்சல் போடுகின்றனர்.

அனைவரும் 'தலைவா...தலைவா' என உரக்க கத்தி, தான் எங்கே வந்திருக்கிறோம் எந்த காரியத்தில் பங்கெடுத்திருக்கிறோம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல், 'நாங்கள் காலம் உள்ள வரை அறிவு இல்லாத காட்டுமிராண்டிகளாக தான் இருப்போம்' என மீண்டும் நிரூபித்து விட்டனர்.

ஒரு பொது விழாவில் உங்கள் தலைவனிடம் இந்த பைத்தியக்கார தனத்தை காட்டியிருந்தால் கூட, இது வழக்கமான ஒரு மூடத்தனமென விட்டுருக்கலாம்.




ஆனால், ஒருவரின் ஈமச்சடங்கு நிகழ்வுக்கு வந்த இடத்தில் இப்படி மானம், ரோஷம், சூடு, சுரனை இல்லாமல் நடந்துக்கொண்ட இந்த ரசிகர்கள் உண்மையிலேயே காட்டுமிராண்டிகள் தான்.

அப்போது வரை கே.பாலசந்தர் அவர்களுக்கு இவ்வளவு கூட்டம் மரியாதை செலுத்த வந்துள்ளனர் என பெருமிதம் கொண்டேன். ஆனா, ரஜினி வந்ததும் தான் தெரிந்தது இந்த வெங்காய ரசிக கூட்டமெல்லாம் நடிகர்களை தான் பார்க்க வந்துள்ளனர் என புரிந்துக்கொண்டேன்.

ரஜினி சென்றதும் மொத்த கூட்டமும் வெளியேறுவது காண முடிந்தது.

இது இயக்குனர் சிகரத்துக்கு அவமானம் தானே.
ஒவ்வொரு நாட்டிலும், வட மாநிலங்களிலும் தமிழனை கிள்ளு கீரையாக நினைக்க காரணம்,

இந்த மாதிரி மானங்கெட்ட ரசிகர்களின் முட்டாள் தனத்தால் தான். ச்சே...இந்த கூட்டம் ஒழிந்தால் தான் நாடும் முன்னேறும்..தமிழனை மதிப்பான் !!!

வெற்றிவேந்தன்.

12/22/14

திருச்சி வக்கீல் – போலிஸ் மோதல் – இயக்குநர் யார்….?

திருச்சி வக்கீல் – போலிஸ் மோதல் – இயக்குநர் யார்….?
இன்று திருச்சி கோர்டில் நடந்த வக்கீல் போலிஸ் பங்காளி டிராமாவில் இன்றைய சேர் மார்க்கெட் நிலவரப்படி 5 வக்கீல்கள் பொன்முருகேசன், தினகரன், சரவணன், முத்துகுமார், ஜெயக்குமார்  என கண்டன கூட்டத்தில் முதலில் பேசிய 5 பேர் மீதும் தற்போது 323, 324, 294(b), 353, 147, 341 and 506 (1) of IPC..  நீதிமன்ற காவல்நிலையத்தில் கேஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெல்டால் போலீஸை தாக்கும் வக்கீல்கள்
 ஏன் 5 பேர் இவர்கள் இல்லாமல் இன்னும் ஏகப்பட்ட பேர் மீது காவல்துறையினர் அதிரடி பாய்ச்சல் பாய செய்ய வேண்டிய வேலையை செய்து கொண்டுயிருக்கிறார்கள். இந்த உண்ணாவிரத பந்தலில் பேசிய 20க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் அச்சில் ஏற்றப்பட முடியாத வார்த்தைகளால் மாநகர கமிஷனரை பற்றி அவர் தென்னூர் ஷான்ஸ் ஓட்டலில் தனியறை (107) எதுக்கு, சுகர்பேஷசன்ட்டு, புரோக்கர். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்றெல்லாம் ஒவ்வொரு லிமிட் இன்ஸ்பெக்டர்கள் பற்றி போலிசுடன் கொடுக்கல் வாங்கல் வைத்திருந்த வக்கீல்கள் தொழில் ரகசியத்தை ஒப்புதல் வாக்குமூலமாக பொதுமக்களிடம் ஒப்புவித்தார்கள்.
ஒரு சாதரண மனிதனுக்கு இருக்கும் குறைந்த பட்ச அளவு ரோசம் கூட இல்லாமல் போலிஸ் உடையணிந்த காவல்துறையினர் அட்வகேட்களை பேசவிட்டு அழகு பார்த்தது. எங்கள் அப்பன் குதிர்குள் இல்லை என்பதை இவர்களே ஒத்துக்கொண்டது போலவே இருந்தது.
சரி… இப்போது கதைக்கு வருவோம்.
எதற்காக இந்த கலாட்டா …
யார் இந்த குணா !
திருச்சி குணா

திருச்சி குணா. மண்ணச்சநல்லூர் குணா, உறையூர் குணா , குணா என்கிற குணசீலன்.

 டெல்டா மாவட்டங் களை சாதி ரீதியில் எதிரும் புதிருமாய் நின்று கதிகலங்க

வைத்த மணல்மேடு சங்கரும், முட்டை ரவியும் இப்போது இல்லை.


முதலில் போலீஸ் டீம், முட்டை ரவியை 2006-ல் என்கவுண்ட்டரில் போட்டுத்

தள்ளியது. இதைக்கண்டு தன்னையும் போலீஸ் சுடலாம் என பதறிய மணல்மேடு
சங்கர்... தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பலவகைகளிலும் முயன்றான்.



எனினும்... அவ னது உயிரையும் உருவியெடுத்தது காக்கிகளின் துப்பாக்கி.

இதற் கிடையே முட்டை ரவி இறந்தபிறகு... ரவியின் டீமுக்கு தலைமை
ஏற்றவன்தான் இந்தத் திருச்சி குணா.



 இவன் டெல்டா லிமிட்டையும் தாண்டி.. ஆத்தூர் சுமன், செங்கல்பட்டு

ரவிபிரகாஷ், சீர்காழி சத்யா, செல்லதுரை, சுந்தரபாண்டி, சின்ன ஆனந்த்,
பல்லு குமார், விக்டர், ஒத்தக்கை வினோத் , பாலக்கரை கண்ணாடிஆனந்த்,
பாலக்கரை ஸ்டீபன், லால்குடி மயில்வாகணன், ஆகிய தன் சிஷ்யகோடிகள் மூலம்...
தமிழகம் முழுக்க தன் ரவுடி சாம்ராஜ்யத்தை விஸ்தரித்திருக்கிறான். இந்த
குணாவின் ரவுடி ஜாதகத்தை மேலும் துருவியபோது மேலும்பல அதிரடித் தகவல்கள்
கிடைத்தன.



திருச்சி குணாவுக்குப் பூர்வீகம் இலங்கை. சின்ன வயதில் குடும்பத்தோடு

அகதியாய் தமிழகம் வந்தான் குணா. திருச்சி பெரிய கடைவீதி சந்துக்கடை
மார்க்கெட் பகுதியில் அவன்குடும்பம் அடைக்கலமானது.



அம்மா நர்ஸாக இருக்க... குணாவோ... சேர்வார் தோஷத்தால் ரவுடியாக வளர ஆரம்பித்தான்.



 இவனது க்ரைம் அதிரடிகளைக்கண்ட அப்போதைய திருச்சியின் பிரபல தாதாவான

பிச்சைமுத்து... ’"நீ என்னோடு இருக்கவேண்டியவன்டா... வாடா'’என இவனைத் தன்
சிஷ்யனாக சேர்த்துக்கொண்டான். அவனால் மனித ரத்த வாசனையை அறிந்துகொண்ட
குணா... பிச்சை முத்துவின் என்கவுண்ட்டருக்குப் பின்தான் முட்டை ரவி
டீமில் ஐக்கியமானான்.




முட்டை ரவிக்காக... தலித் சமூகத்தைச் சேர்ந்த சேட்டு, டிங்கி, சுரேஷ்

ஆகிய மூவரையும் மணிகண்டம் பைபாஸ் பகுதியில்.. பட்டப்பகலில் படு
பயங்கரமாகக் கொன்று... குணா திருச்சியையே பரபரக்க வைத்தான். அதேபோல்
செங்கல்பட்டு தாதாவான குரங்கு குமாரை... அவனது எதிரிகளுக்காகத்
தீர்த்துக்கட்டியும் பதட்டத் தகிப்பை ஏற்படுத்தினான்.



இதன் பிறகு இவனுடைய மார்கெட் வேல்யூ அதிகமாகிபோனதால் திருச்சியில் உள்ள

முக்கியமான வியாபர பிரமுகர்களை எல்லாம் பணம் கேட்டு மிரட்ட ஆரம்பித்தான்.


இதற்கு இடையில் முட்டைரவியின் குரூப்பில் உள்ள சாமிரவி என்கிறவர்

வாண்டையர் குரூபில் சேர்ந்து பெரிய இடத்து பஞ்சாயத்துகளை மட்டும் அவர் இனத்தை சேர்ந்த போலிஸ் துணையோடு செய்து வருகின்றார். இந்த நிலையில் குணாவுக்கும், சாமிரவிக்கு
தொழில்முனை போட்டி ஏற்படுகிறது.



சாமிரவி வெளியே தெரியாத ரவுடி தாதாவாகவும்,அரசியல்வாதியாவும்,  குணா வெளிஉலகிற்கு அறிமுகமான தன் வாயாலேயே தன்னை கெடுத்து கொண்ட தாதாவாகும் வளர்கிறார்கள்.

இப்போது குணாவின் செல்பாடுகளில்  உடல்நிலை

சரியில்லை, மஞ்சள் காமாலை, கண்கள் இருட்டாகி கொண்டே செல்கிறது என்று

போலிசுக்கு தன்  இன்பார் வழக்கறிஞர்கள் மூலம் தகவல் சொல்லிக்கொண்டே இருக்கே இருக்கிறார்.
போலிஸ்சோ குணா செல்வது உண்மையா என்பதை கண்டறிய ஆவல் கொண்டு அவனை பிடித்தே ஆக வேண்டும் என்கிற முயற்சியில் தான் மார்ச் மாதம் தேர்தல் சமயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று பிடித்து சிறையில் தள்ளினார்கள்.
ஆனால்   குணா முன்பை விட இப்போது மிகவும் பலமானவனாகவும் அறிவாளியாகவும்

இருப்பதை கண்டு வெகுண்ட போலிஸ் குணாவை நையபுடைத்து குண்டர் சட்டத்தில் அடைத்தது. இதை அனைத்தையும் உடைத்தது. குணாவின் வக்கீல் படை.

நீதிமன்றத்தில் அதிகவேகமாக பணக்காரர்களாக ஆசைப்படும் இளம் வக்கீல்கள் கூட்டத்திற்கு        ( உறையூர் வக்கீல் மதியழன் போல் ) தலைவர் தான் வக்கீல் ராஜேந்திரகுமார். இந்த படை தான் தளபதி போல் இருந்து ரவுடி குணாவை பாதுகாத்து வந்தார்கள்.
இவர்கள் இருக்கும் தைரியத்தில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள திருச்சி டவுன்ஹால் அரபி குளத்தெருவில் 10 அடி அகலம் உள்ள அந்த சந்தில் தன்னை போலிசில் பிடித்து கொடுத்த பொதுமக்களை அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்களோடு பட்டபகலில் ஊர்வலம் போல மிரட்டியது… போலிஸ்கே வெட்ககேடானது.
அந்த பகுதி இன்ஸ்பெக்டர் ஞானவேலை தவிர வேறு எந்த காக்கிசட்டைகாரர்கள் வராதாது மக்கள் மத்தியில் உயிர்பயத்தை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் தன்னை பிடித்து கொடுத்தவர்களுல் ஒருவர் என்று சந்தேகித்து 24மனை தெலுங்கு செட்டியார் சங்கத்தின் மாநிலதலைவராக இருந்து முசிறிபுத்தனை அடையாளம் காட்டி திருச்சி 1வது தொகுதியில் ஜெயிக்க வைத்த பி.எம். பழனியப்ப செட்டியாரின் பேரனான ஆறுமுகத்தின் வீட்டிற்குள் நுழைந்து அவர் மனைவி சரஸ்வதியை உம் புருஷன் 3 இலட்ச ரூபாய் பணம் கொண்டுவந்து குடுக்கலனா நாளைக்கு உன் கழுத்தில் தாலி தொங்காது இந்த குணாவை போலிசிடம் பிடிச்சு கொடுத்ததுக்கு நான் போடுற அபராதம் என்று மிரட்டி சென்றார்கள்.
மறுநாள் காலை சொல்லி வைத்தார் போல் இதே வார்த்தையை சொல்லி குணாவை பகைத்து கொள்ள வேண்டாம் அவன் கேட்கும் பணத்தை கொடுத்துவிடுங்கள் அது தான் உங்கள் குடும்பத்திற்கு நல்லது என்று அக்கறைபோடு வக்கீல் ரஜேந்திரகுமாரும் பேசுகிறார். பயந்து போன ஆறுமுகம் கோட்டைகாவல்நிலைய இன்ஸ்பெக்டரிடம் சென்று நடந்ததை குடும்பத்தோடு ஒப்பிக்க அதுவே புகாராக மாறி குணா மீதும் வக்கீல் ராஜேந்திரகுமார் மீது இன்னும் அவரோடு வந்த சிலர் மீது FIR  போட காரணமானது.
கஞ்சா விற்பவனை, போலி லாட்டரி சீட்டு விற்பவனை,  திருட்டு சிடி விற்பவனை,  செயின் பறிப்பவனை, பிட்பாக்கெட் அடிப்பவனை, கொள்ளையடிப்பவனை, வழிப்பறிசெய்பவனை, கொலை செய்பவனை, காப்பாற்றுவதற்காக நீதிமன்றத்து வெளியே போலிஸ் ஸ்டேஷனிலேயே வைத்து பேச்சு வார்த்தை நடத்தி பார்மாலிடிஸ் என்ற போர்வையில் பரிவர்த்தனை செய்வதை மட்டுமே செய்து கொண்டு இருக்கும் வக்கீல்களால், இன்று நல்ல நியாயமான வழக்கறிஞர்களுக்கும் காசுக்கு ஆசைப்பட்டு  கைநீட்டி காசுவாங்கி இன்றைக்கு வக்கீல்களால் கேவலபடுத்தப்பட்டதை நினைத்து உண்மையான நேர்மையாக காவல்துறையில் இருக்கும் ஒரு சிலருக்கும் நிச்சயம் இன்று இரவு தூக்கம் இருக்காது.
சரி…. இப்போ … முக்கியமான விசயத்தை சொல்லிடுவோம்…
வக்கீல்கள் பேசின பேச்சு அப்படியே வீடியோ சிடியாகி, இன்னைக்கு இரவே மாவட்ட தலைமைநீதிபதிக்கும், உயர்நீதிமன்ற தலைமைநீதிபதிக்கும் இரண்டு காப்பி அனுப்பியாச்சாம்… இது தெரிஞ்சு போன காலையில் கண்ட பொதுக்கூட்டத்தை ஆர்கனேஷ் பண்ணின சீனியர் வக்கீல்களான மார்டின், பால்ராஜ், சின்ன பசங்க செஞ்ச வெள்ளாமை வீடு வந்து சேராது என்று சோககீதம் பாடுகிறார்கள்.
இப்ப  கணக்கு காட்ட தான் 5 பேர்ரு  இன்னும் … பட்டியல் ரொம்ப ரொம்ப… நீநீநீநீநீநீளமாம்…