சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களை அடிக்கடி இடமாற்றம் செய்வது ஏன் சாட்டையை சுழற்றிய சென்னை உயர்நீதிமன்றம் கிரானைட் தாது மணல்கொள்ளை குறித்து விசாரணை நடத்த சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களை தலைவராக்கியது.

Posted by Unknown on 9:00 AM with 1 comment
சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களை அடிக்கடி இடமாற்றம் செய்வது ஏன் சாட்டையை சுழற்றிய சென்னை உயர்நீதிமன்றம் கிரானைட் தாது மணல்கொள்ளை குறித்து விசாரணை நடத்த சகாயம் ஐ.ஏ.எஸ்  அவர்களை தலைவராக்கியது.
ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை அடிக்கடி இடமாற்றம் செய்வது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
கிரானைட் மற்றும் மணல்குவாரி குறித்து விசாரணை குழு அமைக்கக்கோரி, டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது, இது குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை குழு ஒன்றை அமைக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இக்குழு இன்னும் 2 மாதங்களில் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை அடிக்கடி இடமாற்றம் செய்வது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அடிக்கடி பல்வேறு துறைகளுக்கு பந்தாடப்பட்டாலும் நீதிமன்றமே சகாயம் ஐஏஎஸ் அவர்களை அங்கீகரித்துள்ளது ஆறுதலாகவே உள்ளது. 
Categories: