பட்டிமன்ற படப்பிடிப்புக்காக 3000 மாணவர்கள் பட்டபாடு வேந்தர் டிவி வேதனை
Posted by Unknown on 8:30 AM with No comments
வேந்தர் டி.வி.யில்
விஜயதசமி அன்று ஒளிபரப்புவதற்காக ஒரு பட்டிமன்றம் ஏற்பாடு செய்தனர்.
மனித மேம்பாட்டுக்கு தேவை
கல்வியா செல்வமா என்பது தலைப்பு. காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்.
பல்கலைக்கழகத்தில் கட்டியிருக்கும் பிரமாண்டமான ஆடிட்டோரியத்தில் நிகழ்ச்சி இன்று
ஒளிப்பதிவு செய்யப்பட்டது. வளாகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளின் மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக ஆஜராக உத்தரவு பிறப்பித்தது
நிர்வாகம். ஒன்றரை மணிக்கு ஆரம்பமான நிகழ்ச்சி ஐந்து மணிக்கு மேல்
முடிந்திருக்கிறது.
போலி பார்வையாளர்களாக
கூண்டுகுள் அடைக்கப்பட்ட மூவாயிரம் பேருக்கும் அவ்வளவு நேரமும் குடிக்க தண்ணீர்
கூட வழங்கவில்லை. சிறுநீர் கழிக்க அவசரமாக எழுந்தவர்களைக்கூட மிரட்டி உட்கார
வைத்தனர். முன்வரிசையில் அமர்ந்திருந்த வேந்தரின் குடும்பத்தினருக்கு மட்டும்
விசேஷ கவனிப்பு. மேடையில் இருந்த பட்டிமன்ற பேச்சாளர்களும் நடுவரும் தங்கள் தமிழ்
அறிவையும் பேச்சாற்றலையும் நொடிக்கு நொடி வெளிக்காட்டி புளகாங்கிதம் அடைந்தனர்.
கைதட்டல் அரங்கத்தை அதிரவைத்தது.
பாவம், பார்வையாள மாணவ மாணவிகளில் பதினான்கு பேரை தவிர எவருக்கும்
தமிழே தெரியாது என்பதுதான் கொடுமை. அவர்கள் தாங்க முடியாத தவிப்பில் கூச்சல்
போட்டுக் கொண்டே இருந்தனர். அக்வாஸ்டிக்ஸ் நுட்பத்தில் அதையெல்லாம்
பாராட்டுகளாகவும் ஆரவாரமாகவும் மாற்றிவிடலாம் என்று சேனல் டெக்னீஷியன்கள் கூறி
இருந்ததால் வேந்தர் குடும்பம் அலட்டிக் கொள்ளவே இல்லை. வழக்கமாக மூன்று மணிக்கு
புறப்பட வேண்டிய கல்லூரி பேருந்துகள் ஐந்து மணிக்கு கிளம்பும்; அதுவரை நீங்கள் என்ன சத்தம் போட்டாலும் பலன் இருக்காது என
எச்சரிக்கை விடப்பட்டது.
தலா 45,000 பேருந்து கட்டணம் வசூலித்துதான் அத்தனை பேருக்கும்
அட்மிஷன் போட்டிருந்தது நிர்வாகம் என்பது தனிக்கதை. பேருந்துகள் புறப்படும்
நேரத்தை ஒலிபெருக்கியில் அறிவித்தவர் மரியாதைக்குரிய பட்டிமன்ற நடுவர். நீண்ட
தீர்ப்பை தொடர விடாமல் மாணவர்கள் கைதட்டியதால் ஒருவழியாக முடித்தார் நடுவர்.
செல்வத்தை விட கல்வியே முக்கியம் என்பது தீர்ப்பின் கடைசி வரி. அதற்காக அவருக்கு
கொடுக்கப்பட்ட சன்மானம் மூன்று லட்ச ரூபாய் என்பது டி.வி. தரப்பு தகவல்.
நடுவர் யார் என்பதை
சொல்லவே இல்லையே என்கிறீர்களா? வெட்கக்கேடு.
தமிழருவி மணியனை கையெடுத்து கும்பிடலாம் என்ற அளவுக்கு தனது மரியாதையை ஒரே
நிகழ்ச்சியில் தரைமட்டமாக்கி விட்ட அந்த தமிழறிஞர் பெயரை எஸ்.ஆர்.எம்.
மாணவர்களிடம் கேளுங்கள். அல்லது வேந்தர் டி.வி. சேனல் முன்னறிவிப்புகளில்
பாருங்கள்.
முத்தமிழ் பேரவை ஐந்தமிழ்
நாறவை என்று பல பேனர்களை மாட்டி ஊரறிந்த அறிஞர்கள், நிபுணர்களை வரவழைத்து மாணவர்கள், ஆசிரியர்களை அடிமைகளாக அமரவைத்து விழா நடத்தி கைநிறைய டாலர்
அல்லது ரூபாய் கட்டுகளை கொடுத்து மூளைச்சலவை செய்து அவர்கள் போகுமிடம் எல்லாம்
நிறுவனத்தை புகழ் பாட வைக்கும் தந்திரத்தை வேறு எந்த கல்வி முதலாளியைவிடவும்
வேந்தரின் கூட்டம் சிறப்பாகவே கையாள்கிறது.
அந்த வலையில் விழுந்துள்ள
சமீபத்திய இரையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. இந்த விமர்சனத்தை நேர்மையற்ற
முறையில் எதிர்கொள்ளவும் அவர் தனது தமிழறிவையே துணைகொள்வார் என்பது உள்ளங்கை
நெல்லிக்கனி.
Categories: அரசியல்
0 comments:
Post a Comment