திருச்சியில் 14நாட்கள் விதவித கெட்டப்பில் போராட்டம் நடத்திய விவசாயி சங்க தலைவர் அய்யாகண்ணுவின் உண்மை முகம்

Posted by Unknown on 8:00 AM with No comments
ஏய், போ, உட்காரு, நில்லு, மயிராண்டி, பல்லஉடைச்சுடுவேன், சோறுதிங்கிறியா?, அறிவில்லையா?, மூடு, உனக்குகென்ன மயிரா தெரியும்?, இத படிக்கும் போதே உங்களுக்கு கோபம் வரும்கொஞ்சம் ழுழுசா படிங்க……………

கடந்த 15 நாட்களாக திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே பாரதிய கிசான் சங்கத்தின் சார்பில் விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரியும், தள்ளுபடி செய்யவே முடியாத வங்கிகடன்களை தள்ளுபடி செய்தே ஆக வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை கேட்டும், உண்ணாவிரதம் என்கிற பெயரில் அது என்ன கணக்கோ தெரியவில்லை காலை 10 மணியிலிருந்து மாலை 6மணி வரை ( காவேரி நீர் கேட்டு கருணாநிதியும் ஜெயலலிதாவும் உண்ணாவிரதம் இருந்ததை போல) தினக்கூத்து நடைபெற்றுவந்தது.
என்ன கட்டாயத்தினாலோ தெரியவில்லை தினமும் குறைந்தபட்சம் 30 முதல் 40 வரை ( கடைசிநாள் மட்டும் 200 பேர் ) விவசாயிகளாவது அமர்ந்திருந்தனர். இது ஒரு சாதனை தான். ஒரு சராசரி அரசியல்கட்சியாக இருந்தால் வருபவருக்கே குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ரூபாய் 500 செலவு செய்ய வேண்டும்.
ஆச்சரியமாக இருந்தது.
இந்த இலட்சணத்தில் தினந்தோறும் சட்டையின்றியும், உடலில் பட்டை நாமம் இட்டு கையில் மண் சட்டி ஏந்தியும், சட்டை அணியாமல் உடல் முழுவதும் விபூதிபட்டை இட்டு,
ருத்ராட்ச மாலை அணிந்தும்,
சட்டை அணியாமல் குல்லா அணிந்தும்,
வாயில் கருப்பு துணி கட்டியும்,
படுத்தவாறும், நாடா கயிறால் ( கடைசிநாள் தூக்குகயிராம்! ) கைகள் மற்றும் கால்களை கட்டியும்,
மொட்டை அடித்தும்,
கை மற்றும் கால்களில் பேண்டேஜ் கட்டியும்,
இலை, தழைகளை உடலில் கட்டி,
சடலம் போல் சித்தரித்து சங்கு ஊதி,
ஒப்பாரி வைத்தும், முக்காடு போட்டும். கண்களை கட்டிக் கொண்டு,
கையில் குச்சிகளுடன் திருஓடு ஏந்தியும்
கடைசி நாள் கழுத்தில் கயிரை மாட்டிக் கொண்டு தூக்கில் தொங்கும் போராட்டம் நடத்தி ( உண்ணாவிரதம் ? ) இருந்தனர். அப்பா முடிஞ்சுது.
இவைகளை எல்லாம் இவர்களை எல்லாம் ஏற்பாடு செய்த வக்கீல அய்யாக்கண்ணு ஜெயலலிதா போலவே 10 நிமிடத்திற்கு ஒரு முறை விவசாயிகளை பார்த்து கடனை கட்ட முடியுமா? என்று கேட்பார். கோரசாக விவசாயிகளும் இரண்டு கைகளையும் தூக்கி கொண்டு முடியாது முடியாது முடியவே முடியாது என்று கோஷம் எழுப்புவார்கள். பஸ்ஸில் இந்த வேடிக்கையை பார்த்துக் கொண்டு செல்லும் பயணிகளுக்கு ஜெயலலிதா தேர்தல் காலத்தில் செய்வீங்களா? செய்வீங்களா? என்று கேட்டது நினைவிற்கு வந்தது. அது போகட்டும்.
விவசாயிகள் பிரச்சனைக்கு வருவோம் அய்யாக்கண்ணு சொல்லும் கோரிக்கைகள் எதையுமே எந்த அரசாலுமே நிறைவேற்றி தரவே முடியாது. இது அவருக்கும் நன்றாக தெரியும்.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை விவசாயசங்கங்களின் தலைவர்கள் ஆளுக்கு ஒரு திசையில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ஆக மாறி விசாயிகளிடமும் முடிந்தால் பொதுமக்களிடமும் வியாபார பிரமுகர்களிடமும் முடிந்த வரை அதிகாரிகளிடமும் கூட வசூல் செய்து வளமாக வாழ்கிறார்கள். இதில் அய்யக்கண்ணுவுக்கும் விஸ்வநாதன் என்பவருக்கும் தான் பலத்த போட்டி நடைபெற்றுவருகிறது.
விஸ்வநாதன் முதலில் லால்குடி பகுதி தலைவராக இருந்தார். பிறகு திருச்சி மாவட்ட ஏரி ஆற்றுபாச விவசாயிகள் சங்கம் என்று லெட்டர் பேடு அடித்தார். தன்னுடைய ஜாதி கோதாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்களுக்கு நெருக்கமாகி இன்றைக்கு ஏரி ஆற்றுபாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் என்று லெட்டர் பேடு அடித்துக்கொண்டு பரவலாக திருச்சி அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் பா.ம.க துணையோடு தன் சங்கத்தை வலுபடுத்திக்கொண்டு வருகிறார்.
ஒவ்வொரு முறையும் திருச்சி கலெக்டர் ஆபிஸில் நடக்கும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் இந்த இருவரையும் சமாளிப்பதே திருச்சிக்கு வரும் கலெக்டர்களுக்கு தீராத தலைவலியாகிவிடும். இன்னும் ஓரு ஏழுஎட்டு தலைவர்கள் இருக்கிறார்கள். கூட்டம் நடக்கும்பொழுது முன்வரிசையில் அமர்வதற்கு அடித்துக்கொள்வதோடு அவர்கள் பணி முடிந்துவிடும். ( அடுத்த நாள் தினசரி பேப்பரில் போட்டோ வரும் என்கிற அற்ப மகிழ்ச்சி ) விஸ்வநாதனுக்கும் அய்யாக்கண்ணுவுக்குமான போட்டியில் இந்த இன்னிங்சில் அய்யாக்கண்ணு 15 நாள் மேட்ச் ஆடியிருக்கிறார்.
இந்த 15 நாளில் செப்டம்பர் 15ம் தேதி அண்ணாசிலைக்கு மாலை போட வந்த ஆண்ட கட்சி, ஆளுகின்ற கட்சி, ஆளுவோம் என்று சொல்லும் கட்சி இன்னபிற சின்ன கட்சிகளின் நிர்வாகிகள் கூட சோறு போடும் விவசாயிகளை பார்த்து ஆறுதலுக்காகவாவது சில வார்த்தைகள் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அவர்கள் ஏன் பார்க்கவில்லை என்றால் எப்போதும் தினசரிகளுக்கும் டிவிக்களுக்கு மட்டுமே
அரை உடம்போடு மலைக்கோட்டையிலிருந்து குதிக்கிறேன்
ரயிலில் தலைவைக்கிறேன் தூக்கு போட்டு சாகிறோம்,
சென்னைக்கு சென்று மெரினா பீட்சில் கடலை நோக்கி நடந்து சென்று தற்கொலை செய்து சாகபோகிறோம்.
டெல்லிக்கு சென்று விசம்குடித்து சாகபோகிறோம்
என்றெல்லாம் நோட்டிஸ்சும் போஸ்டரும் அடித்து ( நான்கு முறை டெல்லிக்கு 100 பேருடன் சென்று விட்டு வந்துவிட்டார் ) விளம்பரம் மட்டுமே செய்து ஒரு முறை கூட சாகாத அய்யாக்கண்ணுவின் வார்த்தையை நம்பி வந்த விவசாயிகளை பார்த்து ஆறுதல் கூறுவதால் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்ததால் தான் எந்த அரசியல்வாதிகளும் இவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
கடைசிநாள் அய்யாக்கண்ணு அடித்த கூத்தை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்து பெண்கள் பார்த்திருந்தால் அடுத்த ஐந்து தலைமுறைக்கு அய்யாக்கண்ணு என்கிற பெயரே சாத்தானை அவர்களுக்கு நினைவுபடுத்தும்.
ஏய்,போ, உட்காரு, நில்லு, மயிராண்டி, பல்உடைச்சுடுவேன், சோறுதிங்கிறியா, அறிவில்லையா, மூடு, உனக்குகென்ன மயிரா தெரியும், இது எல்லாமே அய்யாக்கண்ணு வயதுவித்தியாசம் இல்லாம விவசாயிகளை பார்த்து சொன்ன வார்த்தைகள்.
ஒரு விசயம் மட்டும் நன்றாக புரிகிறது உலகத்திலேயே மிக ஈசியாக ஏமாற்றமுடியும் என்றால் அது விவசாயிகளை மட்டும் தான். மண்ணோடும் பயிரோடும் உறவாடி வாழும் அந்த நல்ல ஜென்மங்களை வழிநடுத்துகிறேன் பேர்வழி என்று சொல்லி பிச்சைகாரர்கள் போல் நடத்த அய்யாக்கண்ணு மட்டும் அல்ல விவசாயிகளின் தலைவர்கள் என்று சொல்லிக்கொல்லுகின்ற எல்லா கண்ணுகளும் உணர்ந்து திருந்த வேண்டும் என்பது தான் மனசாட்சி உள்ள மனிதர்களின் கோரிக்கை.
ஊதுற சங்க ஊதிட்டோம், உணர வேண்டியவுங்க உணர்ந்தா சரி!