ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த பாதிரியார்
Posted by Unknown on 7:30 AM with No comments
திருச்சி
கருமண்டபம் அசோக் நகர் தெற்கு விஸ்தரிப்பு பகுதியில் தண்ட வாளம் அருகே நேற்று
காலை 35 வயது மதிக்கத்தக்க
ஆண்பிணம் கிடந்தது. இது குறித்து அந்த வழியாக சென்றவர் திருச்சி ஜங்ஷன் ரெயில்வே
போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சப்இன்ஸ்பெக்டர்
ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். இறந்தவர் உடலில் 10 ரூபாய் பணமும் வீட்டின் சாவியும் இருந்தது.
சாவில் உள்ள கீ செயினில் புத்தூரில் உள்ள பிரபல பர்னிச்சர் நிறுவனத்தின் பெயர்
அச்சிடப்பட்டிருந்தது.
எனவே இறந்தவர்
திருச்சி மாநகர் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால்
அவர் யார்? எப்படி இறந்தார்.
ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தாரா? அல்லது அவரை யாராவது கொலை செய்து தண்டவாளத்தில் வீசி தற்கொலை போல்
நாடகமாடினார்களா? என்று விசாரணை
நடத்தினர்.
இது குறித்து
பத்திரிக்கைகளிலும் செய்தி வெளியானது. மேலும் போலீசார் திருச்சியில் கடந்த 2 நாட்களில் காணாமல் போனவர்கள் யார் என்ற
விபரத்தையும் திரட்டி விசாரணை நடத்தினர்.
இந்நிலையில்
இன்று காலை இறந்தவர் தங்கள் உறவினர்களாக இருக்கலாம் என்று கூறி புத்தூரைச் சேர்ந்த
4 பேர் வந்தனர். உடல்
வைக்கப்பட்டிருந்த திருச்சி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்தில் பிணத்தை
பார்த்தனர்.
அப்போது அவர்
தங்கள் உறவினர் ஜான் ராஜா (வயது 53) என்பது தெரிய வந்தது. இவர் பாதிரியாக இருந்து வந்துள்ளார்.
பாதிரியார்
ஜான்ராஜா உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். ஜான் ராஜா குடும்ப
பிரச்சனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் அவர் கருமண்டபம்
அருகே ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்துள்ளார். அவர் எப்படி இறந்தார் என்பது
மர்மமாக உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு ஜான்ராஜா உடல் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்படுகிறது. திருச்சி பாதிரியார் மர்மமாக இறந்த சம்பவம் திருச்சியில்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment