திருந்தப்போவது யாரு
Posted by Unknown on 7:00 AM with No comments
திருந்தப்போவது யாரு
திருச்சி பத்திரிகைகாரர்களுக்கு பிரஸ்மீட்,
கருத்தரங்கம் உள்ளிட்ட ஏதாவது நிகழ்ச்சி நடந்தாலே கொண்டாட்டம்தான். குறிப்பா திருச்சியில
வெள்ளி,சனி,ஞாயிறுகளில் அதிகமாக இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடக்கும். அதனால செய்தியாளர்களும்,
ஊடககாரர்களுக்கும் வீக்யெண்ட் வந்தாலே விசேசம்தான். இதில் உண்மையான பத்திரிக்கையாளர்கள்
பாதிக்கப்படுவதுதான் பாவமாக இருக்கு.
ரெண்டு நாளைக்கு முன்னால திருச்சி பெமினாவில்
தேசிய சோலார் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்துச்சி. அந்த நிகழ்ச்சியை நடத்தினவங்க
முதல்ல ஒரு பாக்ஸை கொடுத்தாங்க. அந்த பாக்ஸ் உள்ள என்ன இருக்குதுன்னு தெரியாமல். முதல்ல
வந்தவங்க ராம்ஜி நகர் திருடர்கள் கணக்கா, மாப்ள பாக்ஸ் தராங்கன்னு சொல்ல. அப்புறம்
என்ன, அப்படி இப்படின்னு பார்த்தா 50க்கும் மேல செய்தியாளர்கள் குவிஞ்சிட்டாங்க. அதன்பிறகு
நிகழ்ச்சி நடத்தினவங்க. நிருபர்களை நாயைப்போல் நடத்தியதும் நடந்தது. அடுத்தநாள் இரண்டு பேப்பரில் கூட செய்தி வரல. அதோட
இந்த நிகழ்ச்சியில் கொடுத்த பெட்டியில் காஞ்ச கருவாடு நாளு, கொத்தவரங்கா கொஞ்சம் என
இருந்துச்சாம் அதுவேற விசயம்.
இதைபோல அதே ஹோட்டலில் இன்னொரு பகுதியில் இலங்கை பெண்கள் மற்றும் இந்திய பெண்களுக்கான தொழில்
முனைவோர் பயிற்சி நடந்துச்சாம். அங்கேயும் கருப்பா கிட் தர்றாங்கன்னு சொல்ல அதுக்கு
ஆஜரானார்களாம். அங்கும் வாங்கினாங்க. அதுல பாரம்பரியமிக்க பத்திரிக்கைகளில் வேலை பாக்குறவங்க
பேரை சொல்லியும் அந்த கிட்டை வாங்கிட்டாங்களாம். இந்த பத்திரிக்கைகாரங்க இவ்வளவு மோசமா
இருக்காங்கன்னு அந்தகருத்தரங்கை ஏற்படுத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான செடி அமைப்பினர்
புலம்பினார்களாம். ஏன்னென்றால் அந்த கிட் ஒன்று 300 ரூபாய்க்கும் மேல வருமாம்.
இப்படியே வார இறுதி நாட்களில் இவர்கள்
1000க்கு குறைவில்லாமல் வீட்டுக்குபோவதில்லை என்பது தனிக்கதை.
இந்நிலையில நேற்று காங்கிரஸ் கட்சியோட செய்தி
தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன், Operation 6263 திட்டத்திற்காக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். அமெரிக்காகாரர்
பிரஸ்மீட் கொடுக்கிறார்ன்னு சொன்னதும் திருச்சி பிரஸ் கிளப்பிற்கு பத்திரிக்கையாளர்கள்
படையெடுத்தார்கள்.
அமெரிக்கை நாராயணன் மொக்கயா காங்கரஸ் பத்திபாடம்
நடத்திய கொடுமைகளை எல்லாம், பிர்ஸ் மீட் முடிஞ்சி கடைசியில கவர் கொடுப்பாருன்னு பொருத்திக்கிட்டா
மனுசன் மணிக்கணக்கா பேசிட்டு சட்டுன்னு பென்ஸ் காரில் ஏறி கிளம்பிட்டாரு. நான் பத்திரிக்கைகாரங்களுக்கு
பணம் கொடுக்கிற பலக்கமில்லாதன்னு ஹாயா சொல்லிட்டு கிளம்பிட்டாராம்.
அமெரிக்கை நாராயணன் போல நாளுபேர் திருச்சியில்
பிரஸ்மீட் நடத்தின இவனுங்களுக்கு அடிச்ச மாதிரி இருக்கும் என நிம்மதி பெருமூச்சு விட்டாங்கலாம்
நெறிப்படி வாழும் பத்திரிக்கையாளர்கள் சில.
இதுபோன்ற கவர் பார்ட்டிகள் உண்மையான பத்திரிக்கையாளர்கள்
பெயரை சொல்லியும் வெகுமதியோ, பொருட்களை வாங்குவதாக தகவல். இதற்கு மணிகட்டுவது யாருன்னுதான்
தெரியல. நிகழ்ச்சி நடத்துறவங்களும் திருந்தனும் என்கிறார்கள் அவர்கள்.
Categories: திருச்சி
0 comments:
Post a Comment