பொய் வழக்கு போடுவதாக மிரட்டும் போலீஸ் உயர்நீதிமன்றத்தில் அதிர்ச்சி வழக்கு
Posted by Unknown on 12:56 PM with No comments
தமீம் அன்சாரி வழக்கில் பொய் சாட்சியளிக்க சாட்சிகள் போலிசாரால் மிரட்டல் - உயர்நீதி மன்றத்தில் வழக்கு:
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக பொய் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 16.09.2012 அன்று திருச்சி விமான நிலையத்தில் அதிரை தமீம் அன்சாரி கைது செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. இவ்வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்று அப்போது பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு அறிக்கை அளித்திருந்தது.

(தஞ்சை முஸ்லிம் இளைஞர் இராணுவ இரகசியம் கடத்தியதாக வழக்கு; உண்மை அறியும் குழு அறிக்கை முழு அறிக்கைக்கு கிளிக் செய்யவும்:
http://amarx.org/?p=618
பின்னிட்டு தமீம் அன்சாரியின் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து அவர் ஜாமீனில் விடுதலையாகி இன்று வரையில் தினசரி தஞ்சை கியூ பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
(தமீம் அன்சாரி மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டது சரிதானா?- அ.மார்க்ஸ்
முழு அறிக்கைக்கு கிளிக் செய்யவும்:
http://amarx.org/?p=682
வழக்கு தற்போது கியூ பிரிவு போலிசாரிடமிருந்து தேசிய புலனாய்வு அமைப்புக்கு NIA மாற்றப்பட்டு விசாரணையில் இருந்துவருகிறது.
(உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கியூ பிரிவும், தமிழக அரசும் வழக்கே தன்னிடம் இல்லாத நிலையில் மத்திய அரசின் அனுமதி இன்றி, NIA க்கே தெரியாமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு ஒன்றே இல்லாத நிலையில் சிறப்பு அனுமதி கேட்டு முறையீடு செய்துள்ளது தனிக்கதை.)
இந்நிலையில் நீதிபதியிடம் பொய்யாக சாட்சியம் அளிக்க மிரட்டி, மறுத்ததால் கியூ பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் NIA DSP பிரபாகரன் ஆகியோர் தன்னை மிரட்டிவருவதாக கூறி மில்லர் பிரபு என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.இதன்மூலம் வழக்கு பொய்யானது என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.பொய் வழக்கு போட்ட கியூ பிரிவினர், உடந்தையாக, தூண்டுதலாக இருந்த உளவுத்துறையினர், தற்போது சாட்சிகளை மிரட்டிவரும் தேசிய பாதுகாப்பு அமைப்பினர் அனைவர் மீதும் குற்றவியல் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, தண்டனைக்குள்ளாக்கப் படவேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே நல்லோர்கள், நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.
நன்றி: தீக்கதிர் நாளிதழ் (03.09.2014)
http://epaper.theekkathir.org/
தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்து விடுவோம்: தஞ்சாவூர் பொம்மை வியாபாரிக்கு மிரட்டல் கியூ பிராஞ்ச், என்ஐஏ பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, செப். 2-தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்து விடுவோம் என மிரட்டுகிறார்கள் என தஞ்சாவூரைச் சேர்ந்த பொம்மை வியாபாரி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் கியூ பிராஞ்ச் காவல்துறை ஆய்வாளர், தேசிய புலனாய்வு அமைப்பு உதவி கண்காணிப்பாளர் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் கொண்டி ராஜபாளையத்தைச் சேர்ந்த எஸ்.மில்லர் பிரபு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:நான் தஞ்சாவூர் பெரிய கோவிலில் 12 ஆண்டுகளாக பொம்மைக்கடை நடத்தி வருகின்றேன். இந்த நிலையில் ராஜன் என்ற நண்பர், இலங்கையிலும், மகாராஷ்டிராவிலும் வெங்காயம், உருளைக்கிழங்கு வியாபாரம் செய்வதாக தமீம் அன்சாரி என்பவரை தொழில்ரீதியாக அறிமுகம் செய்து வைத்தார்.
அவரிடம் நீங்களும், உங்கள் நண்பர் கானாராம் என்பவரும் இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யுங்கள் என்று கேட்டார். இதை நம்பி 2 இலட்ச ரூபாயை நானும், 5 இலட்ச ரூபாயை நண்பர் கானாராமும் தந்தோம். கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டும் லாபத்திற்கான தொகையை அவர் திருப்பித் தரவில்லை. இதுகுறித்து தமீம் அன்சாரியிடம் கேட்டதற்கு, இலங்கைக்கு அனுப்பிய வெங்காயம் அழுகி விட்டதாகக் கூறினார். வேண்டுமானால் நீங்களே அங்கு வந்து பாருங்கள் என்றார்.
இதன் காரணமாக இலங்கை சென்று வெங்காய ஏஜெண்ட் ஹாஜி என்பவரை சந்தித்துப் பேசிய போது வெங்காயம் அழுகியிருந்தது தெரியவந்தது. ஆனாலும் முதலீடு செய்த பணத்தைத் திருப்பித் தரவேண்டும் என்று அன்சாரியிடம் கேட்டதால் எனக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது.இந்த நிலையில் பத்திரிகைகளில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தமீம் அன்சாரிக்குத் தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
இதற்கிடையில் என்னை விசாரணை என்ற பெயரில் தஞ்சாவூர் கியூ பிராஞ்ச் காவல்துறையும், தேசிய புலனாய்வு அமைப்பும் அழைக்க ஆரம்பித்தனர். இதுவரை 20 முறை அவர்கள் அழைத்த போதும் அவர்களின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன்.
எனக்கும், தமீம் அன்சாரிக்கும் தொடர்பில்லையென்று மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலமும் அளித்துள்ளேன்.
ஆனால், தமீம் அன்சாரி, இலங்கையில் உள்ள இரண்டு பேருடன் சேர்ந்து பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக நான் சொல்ல வேண்டும் என்று கியூ பிராஞ்ச் காவல்துறை சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் என்னை மிரட்டினார்.
இல்லாவிட்டால் உன்னையும் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்து விடுவேன் என்றும் மிரட்டினார். இதே போல தேசிய புலனாய்வு அமைப்பின் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபாகரும் என்னை மிரட்டினார். நான் அவர்கள் கூறியபடி சொல்ல மறுத்தேன். இதனால், நான் செவ்வாயன்று ஆஜராக வேண்டும் என்று எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஆகவே, இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் மனுவில் கூறியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், கியூ பிராஞ்ச் காவல்துறை ஆய்வாளர், தேசிய புலனாய்வு அமைப்பு உதவி கண்காணிப்பாளர் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் என்.முத்து அமுதநாதன், எல்.ஷாஜி செல்லன், டி.சீனிவாசராகவன், டி.ஜெயகுமார், கே.வாமனன், பி.கிறிஸ்டோபர் ஆகியோர் ஆஜரானார்கள்.
தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், மத்திய அரசு சார்பில் ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் ஆஜரானார்கள்
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக பொய் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 16.09.2012 அன்று திருச்சி விமான நிலையத்தில் அதிரை தமீம் அன்சாரி கைது செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. இவ்வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்று அப்போது பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு அறிக்கை அளித்திருந்தது.

(தஞ்சை முஸ்லிம் இளைஞர் இராணுவ இரகசியம் கடத்தியதாக வழக்கு; உண்மை அறியும் குழு அறிக்கை முழு அறிக்கைக்கு கிளிக் செய்யவும்:
http://amarx.org/?p=618
பின்னிட்டு தமீம் அன்சாரியின் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து அவர் ஜாமீனில் விடுதலையாகி இன்று வரையில் தினசரி தஞ்சை கியூ பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
(தமீம் அன்சாரி மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டது சரிதானா?- அ.மார்க்ஸ்
முழு அறிக்கைக்கு கிளிக் செய்யவும்:
http://amarx.org/?p=682
வழக்கு தற்போது கியூ பிரிவு போலிசாரிடமிருந்து தேசிய புலனாய்வு அமைப்புக்கு NIA மாற்றப்பட்டு விசாரணையில் இருந்துவருகிறது.
(உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கியூ பிரிவும், தமிழக அரசும் வழக்கே தன்னிடம் இல்லாத நிலையில் மத்திய அரசின் அனுமதி இன்றி, NIA க்கே தெரியாமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு ஒன்றே இல்லாத நிலையில் சிறப்பு அனுமதி கேட்டு முறையீடு செய்துள்ளது தனிக்கதை.)
இந்நிலையில் நீதிபதியிடம் பொய்யாக சாட்சியம் அளிக்க மிரட்டி, மறுத்ததால் கியூ பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் NIA DSP பிரபாகரன் ஆகியோர் தன்னை மிரட்டிவருவதாக கூறி மில்லர் பிரபு என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.இதன்மூலம் வழக்கு பொய்யானது என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.பொய் வழக்கு போட்ட கியூ பிரிவினர், உடந்தையாக, தூண்டுதலாக இருந்த உளவுத்துறையினர், தற்போது சாட்சிகளை மிரட்டிவரும் தேசிய பாதுகாப்பு அமைப்பினர் அனைவர் மீதும் குற்றவியல் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, தண்டனைக்குள்ளாக்கப் படவேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே நல்லோர்கள், நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.
நன்றி: தீக்கதிர் நாளிதழ் (03.09.2014)
http://epaper.theekkathir.org/
தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்து விடுவோம்: தஞ்சாவூர் பொம்மை வியாபாரிக்கு மிரட்டல் கியூ பிராஞ்ச், என்ஐஏ பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, செப். 2-தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்து விடுவோம் என மிரட்டுகிறார்கள் என தஞ்சாவூரைச் சேர்ந்த பொம்மை வியாபாரி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் கியூ பிராஞ்ச் காவல்துறை ஆய்வாளர், தேசிய புலனாய்வு அமைப்பு உதவி கண்காணிப்பாளர் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் கொண்டி ராஜபாளையத்தைச் சேர்ந்த எஸ்.மில்லர் பிரபு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:நான் தஞ்சாவூர் பெரிய கோவிலில் 12 ஆண்டுகளாக பொம்மைக்கடை நடத்தி வருகின்றேன். இந்த நிலையில் ராஜன் என்ற நண்பர், இலங்கையிலும், மகாராஷ்டிராவிலும் வெங்காயம், உருளைக்கிழங்கு வியாபாரம் செய்வதாக தமீம் அன்சாரி என்பவரை தொழில்ரீதியாக அறிமுகம் செய்து வைத்தார்.
அவரிடம் நீங்களும், உங்கள் நண்பர் கானாராம் என்பவரும் இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யுங்கள் என்று கேட்டார். இதை நம்பி 2 இலட்ச ரூபாயை நானும், 5 இலட்ச ரூபாயை நண்பர் கானாராமும் தந்தோம். கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டும் லாபத்திற்கான தொகையை அவர் திருப்பித் தரவில்லை. இதுகுறித்து தமீம் அன்சாரியிடம் கேட்டதற்கு, இலங்கைக்கு அனுப்பிய வெங்காயம் அழுகி விட்டதாகக் கூறினார். வேண்டுமானால் நீங்களே அங்கு வந்து பாருங்கள் என்றார்.
இதன் காரணமாக இலங்கை சென்று வெங்காய ஏஜெண்ட் ஹாஜி என்பவரை சந்தித்துப் பேசிய போது வெங்காயம் அழுகியிருந்தது தெரியவந்தது. ஆனாலும் முதலீடு செய்த பணத்தைத் திருப்பித் தரவேண்டும் என்று அன்சாரியிடம் கேட்டதால் எனக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது.இந்த நிலையில் பத்திரிகைகளில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தமீம் அன்சாரிக்குத் தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
இதற்கிடையில் என்னை விசாரணை என்ற பெயரில் தஞ்சாவூர் கியூ பிராஞ்ச் காவல்துறையும், தேசிய புலனாய்வு அமைப்பும் அழைக்க ஆரம்பித்தனர். இதுவரை 20 முறை அவர்கள் அழைத்த போதும் அவர்களின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன்.
எனக்கும், தமீம் அன்சாரிக்கும் தொடர்பில்லையென்று மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலமும் அளித்துள்ளேன்.
ஆனால், தமீம் அன்சாரி, இலங்கையில் உள்ள இரண்டு பேருடன் சேர்ந்து பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக நான் சொல்ல வேண்டும் என்று கியூ பிராஞ்ச் காவல்துறை சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் என்னை மிரட்டினார்.
இல்லாவிட்டால் உன்னையும் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்து விடுவேன் என்றும் மிரட்டினார். இதே போல தேசிய புலனாய்வு அமைப்பின் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபாகரும் என்னை மிரட்டினார். நான் அவர்கள் கூறியபடி சொல்ல மறுத்தேன். இதனால், நான் செவ்வாயன்று ஆஜராக வேண்டும் என்று எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஆகவே, இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் மனுவில் கூறியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், கியூ பிராஞ்ச் காவல்துறை ஆய்வாளர், தேசிய புலனாய்வு அமைப்பு உதவி கண்காணிப்பாளர் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் என்.முத்து அமுதநாதன், எல்.ஷாஜி செல்லன், டி.சீனிவாசராகவன், டி.ஜெயகுமார், கே.வாமனன், பி.கிறிஸ்டோபர் ஆகியோர் ஆஜரானார்கள்.
தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், மத்திய அரசு சார்பில் ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் ஆஜரானார்கள்
Categories: தமிழகம்
0 comments:
Post a Comment