திருச்சி தனலெட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மோதிக்கொண்ட மாணவர்கள்.... ஒரு நேரடி லைவ்.. ரிப்போர்ட்.....

Posted by Unknown on 6:00 PM with No comments
திருச்சி தனலெட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மோதிக்கொண்ட மாணவர்கள். அடித்து விரட்டிய ஆசிரியர்கள்.. பதற்றம் நிலவிய கல்லூரி வளாகம் குறித்த  ஒரு நேரடி ரிப்போர்ட் இதோ.....

சமயபுரம் தனலெட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் முன்றாம் ஆண்டு பயோமெடிக்கல் இன்ஜினரிங்க் படிக்கும் மாணவர் அப்துல்அஜீஸ் 10.09.2014 காலை 10.35 தேனீர் இடைவேளையில் கழிவறைக்கு சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த இரண்டாமாண்டு மாணவர் மெக்கானிக்கல் டிபார்ட்மெண்டை சேர்ந்த அஜித், ஜான்ரீகன், தீபக்குமார் கிண்டல் செய்து சீனியரை ராகிங் செய்கிறார்கள்.

அந்த நேரம் கழிவறைக்கு வந்த 3ம்ஆண்டு மெக்கானிக்கல் துறையை சேர்ந்த ஹாவர்தன், சக்திமுருகன் ஆகியோர் இரண்டாம் ஆண்டு மாணவர்களிடம் சீனியரையே ராகிங் பண்ணுறியா என கேட்க அது சீனியர் ஜீனியர் பிரச்சினையாக மாறி இரண்டு குரூப்புக்கும் இடையே கழிவறை தகராறு கைகலப்பு ஆனது.

ஏதேச்சையாக அங்கே வந்த மேலாண்மைதுறை பேராசிரியர் அனைவரையும் கண்டித்து கல்லூரி முதல்வர் வி.சேகர் முன்பு ஆஜர்படுத்தியுள்ளார்.

டென்ஷன் ஆன முதல்வர் ஐந்து பேருக்கும் 10 நாட்கள் தற்காலிக்க நீக்கம் செய்கிறார்.

அன்று இரவு இரண்டாம் ஆண்டு துறையை சேர்ந்த மாணவர்கள் சிலர் சமயபுரத்தில் இயங்கிவரும் 3ம்ஆண்டு மாணவர்களுக்கான விடுதிக்கு சென்று மாணவன் அங்குசாமி, கவிரசன் இருவரையும் அசிங்கமாக பேசி கிண்டல் செய்ததோடு சவால் விட்டுள்ளதாக தெரிகிறது.

அடுத்து விடுதிக்கு சென்ற 2ம் ஆண்டு மாணவர்கள் முகநூலில் நடிகர் ஜீவா நடித்த சிங்கம் புலியில் அண்ணன் தம்பி சண்டையை சித்தரிக்கும் படத்தை முகநூலில் பதிவிட்டு அதன் கீழே 3ம் ஆண்டு மாணவர்களின் குடும்பத்தை பற்றி அசிங்கமான கமண்டுகளை கீழே பதிவிடுகிறார்கள்.

இந்த முகநூல் விசயம் அனைத்து மாணவர்களுக்கும் பரவ, விசயம்  விஸ்வரூபமாகியுள்ளது. அடுத்தநாள் 11.09.2014 காலை 8.50க்கு மாணவர்கள் அனைவரும் பரபரப்பாக கல்லூரியின் போர்டிக்கோ முன்பு கூடி சமதான பேச்சுவார்த்தை நடந்து கொண்டுயிருக்கிறது

அப்போது 3ம் ஆண்டு கெளதம் என்கிற மாணவனை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் குரூப்பா சேர்ந்து தாக்க 3ம் ஆண்டு மாணவர்கள் பதிலுக்கு தாக்க அந்த கல்லூரி வளாகமே போர்களமாகிறது.

வழக்கம் போல் கல்லூரி முதல்வர் சேகர் தன் மனைவியுடன் 9.00 மணிக்கு கல்லூரிக்குள் நுழைய சண்டையை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்து சமாதானம்படுத்த முயற்சி செய்து பலனில்லாமல் ஆத்தரத்தில் என்னை அடி அடி என்று சொல்ல 3ம் ஆண்டு மாணவன் அம்பிகாபதி முதல்வரை தாக்க கையை ஓங்க

முதல்வர் மீதே தாக்குதல் நடக்க முயற்சி என்று கல்லூரிக்குள் தகவல் பரவ கல்லூரியில் இருந்து ஆசிரியர்கள், அலுவலர்கள் எல்லாம் சண்டையில் சேர்ந்துக்கொள்ள ஒரு பக்கம் கல்லூரி காவலாளிகள் இரும்பு தகடுகளை தூக்கி கொண்டு மாணவர்களை தாக்க அங்கே வீ……ர்……. வீர்…….. சத்தம் காதை பிளந்துள்ளது.
இந்த சத்தம் கேட்டு வகுப்பறையில் இருக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கே கேட்க வகுப்பிலிருந்து மெக்கானிக்கல் முதலாம் ஆண்டு மாணவர்கள் வெளியில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வெளியே ஓடி வந்துள்ளனர்.
அப்படி வந்த முதலாம் ஆண்டு மாணவன் ஹரிஹரன் பார்த்த, 3ம் ஆண்டு மாணவன் ஒருவன், நாங்களே இங்கே அடிவாங்கிட்டுயிக்கோம் எங்களையே துக்கம் விசாரிக்கிறியா என்று அடிக்க…. அடிவாங்கி ஹரிஹரன்,

தப்பிசென்று சமயபுரத்திலிருந்து தன் குடும்பத்துடன் கல்லூரி முதல்வரிடம் சந்தித்து நியாயம் கேட்டுள்ளான்
கல்லூரி முதல்வரோ, மன்னிப்பு கேட்டதோடு இனி இதுபோல் நடக்காது என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்த நேரத்தில் முன்னாள் சாரயவியபாரியும் தற்போதைய கல்வி தந்தையுமான கல்லூரியின் தாளார் சீனிவாசன், அவருடன் அவரது ஒரே மகன் கதிரவனுடன்  கல்லூரிக்குள் நுழைந்து என்னுடைய கல்லூரியில் ரவுடியிசமா பண்ணுறீங்க என ஆத்திரப்பட்டு இந்த பிரச்சனையில் சம்மந்தப்பட்ட அத்தனை பேருக்கு டிசி கொடுங்கடா என்று ஆத்திரத்தில் கத்தஅந்த இடமே அமைதியானது.

அதன் பிறகு மதிய உணவு, தேனீர் நேரம் என்று அனைத்தையும் 2ம் ஆண்டு, 3ம் ஆண்டு மாணவர்கள் என்று மாற்றிமாற்றி கொடுக்கிறார்கள்.

மாலை கல்லூரி 4.45 முடிந்தவுடன் போர்டிக்கோவின் முன்பு கல்லூரி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் வந்து நின்று அமைதியான முறையில் அனைவரையும் பேருந்தில் அனுப்பி வைக்கிறார்கள்.

காலையில் அடி வாங்கிய முதலாம் ஆண்டு மாணவன் ஹரிஹரன் தன்னுடைய பெரியப்பா பையனை அழைத்துக் கொண்டு 3ம் ஆண்டு தங்கியிருக்கும் விடுதிக்கு முன்பாக கத்தியை காட்டி மிரட்டி சிலம்பியிருக்கிறார். விடுதியின் காப்பாளர் பிரச்சினை விரீதம் ஆவதை அறிந்து கல்லூரிக்கு தகவல் கொடுக்க மீண்டும் விடுதி டென்ஷன் நிறைந்த பகுதியாக மாறுகிறது.

பேச்சு வார்த்தைக்கு வந்த கல்லூரி பேராசியர்கள் 3ம் ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் விடுமுறை அறிவித்து உடனே அங்கிருந்து ஊருக்கு கிளம்ப சொல்கிறார்கள்.

வழக்கம் போல் சமயபுரம் போலீஸ் பிரச்சினை எதுவும் இல்லையே என்று கேட்டுவிட்டு வாங்குவதை வாங்கிக்கொண்டு சத்தம் போடாமல் கிளம்பினார்கள்.


தற்போதைக்கு தனலெட்சுமி கல்லூரி வளாகத்தில் அமைதி திரும்பியது.