9/23/14

முகநூலில் பணம் பறிக்கும் போலி பத்திரிக்கையாளர் எச்சரிக்கை ரிப்போர்ட்

பேஸ்புக் பணம் பறிக்கும் கும்பலும் பத்திரிக்கையாளர் போர்வையில் வலம்கிறார்கள் என்பதை எச்சரிக்கும் கட்டுரைதான் இது.

அருண் பாலாஜி ஐடி 
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் அருண் பாலாஜி. இவர் பேஸ்புக்கில் தனக்கு நண்பர்களாக இருப்பவர்களிடம், தனது உறவினர் இறந்துவிட்டதாகவும், அவரது இறுதி சடங்குக்கு பணம் தேவைப்படுவதாகவும், விரைவில் அந்தப் பணத்தை திருப்பித் தந்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய சென்னையைச் சேர்ந்த சிவா என்பவர், தன்னிடம் பணம் இல்லை என்று அருண் பாலாஜியை சந்தித்து, தனது திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை கொடுத்துள்ளார். பின்னர் ஒரு சில மணி நேரங்களில் அருண் பாலாஜியின் செல்போன் சுட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ஒரு வாரம் கழித்து அருண் பாலாஜியை தொடர்புகொண்ட சிவா, செல்போன் சுட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது பற்றியும், உறவினர் இறுதி சடங்கு பிரச்சனையில்லாமல் நடந்ததா என்றும் விசாரித்துள்ளார். மேலும், தனக்கு அந்த மோதிரத்தை திருப்பித் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

அருண் பாலாஜி
அதற்கு அவர், மோதிரத்தை அடகு கடையில் இருந்து மீட்க ரூபாய் 3 ஆயிரம் குறைவதாகவும், அதனை தந்தால் மோதிரத்தை மீட்டு விடலாம் என்றும் கூறியுள்ளார். இதற்கு சம்மதித்த சிவா, அவரை நேரில் சந்தித்து பணம் கொடுப்பதாக கூறி வரசொல்லியுள்ளார். நேரில் சந்தித்ததும், அருண் பாலாஜி மீது சந்தேகம் அடைந்த சிவா, தனது நண்பரிடம் பணம் வாங்கித் தருவதாக கூறி, கொரட்டூர் காவல்நிலையம் அருகே அழைத்துச் சென்றுள்ளார்.

இதற்கிடையே அருண் பாலாஜி செயல்கள் குறித்து சந்தேகம் அடைவதாக போலீசாரிடம் செல்போனில் ஆலோசனை செய்தார் சிவா. இதனால் கொரட்டூர் காவல்நிலையம் அருகே தயாராக இருந்த போலீசார் அருண் பாலாஜியை மடக்கி பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரிடம் விசாரணை நடத்தியதில், இதேபோன்று பலரிடம் பணம் வசூல் செய்திருப்பதாகவும், பேஸ்புக்கில் நண்பராக வந்த ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி, அப்பெண்ணிடம் பணம் பெற்றுக்கொண்டு பின்னர் அப்பெண்ணின் பேஸ்புக் அக்கவுண்டை பிளாக் செய்துவிட்டதும் தெரியவந்துள்ளது. மேலும், அவரிடம் மூன்று விதமான அடையாள அட்டைகள் வெவ்வேறு பெயரில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இவரிடம் மத்திய அரசின் முத்திரையுடன் பத்திரிக்கையாளர் அடையாள அட்டை இருந்ததுள்ளது.
பாதிக்கப்பட்ட சிவா கூறுகையில், பேஸ்புக்கில் நண்பர்கள் என்கிற போர்வையில் காதலிப்பதாக வருபவர்கள், பணத்தேவை என வருபவர்களை நம்பாதீங்க. பேஸ்புக்கில் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
பேஸ்புக் பணம் பறிக்கும் கும்பலும் பத்திரிக்கையாளர் போர்வையில் வலம்கிறார்கள் யார் தண்டிப்பது. 

பட்டிமன்ற படப்பிடிப்புக்காக 3000 மாணவர்கள் பட்டபாடு வேந்தர் டிவி வேதனை

வேந்தர் டி.வி.யில் விஜயதசமி அன்று ஒளிபரப்புவதற்காக ஒரு பட்டிமன்றம் ஏற்பாடு செய்தனர்.

மனித மேம்பாட்டுக்கு தேவை கல்வியா செல்வமா என்பது தலைப்பு. காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் கட்டியிருக்கும் பிரமாண்டமான ஆடிட்டோரியத்தில் நிகழ்ச்சி இன்று ஒளிப்பதிவு செய்யப்பட்டது. வளாகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளின் மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக ஆஜராக உத்தரவு பிறப்பித்தது நிர்வாகம். ஒன்றரை மணிக்கு ஆரம்பமான நிகழ்ச்சி ஐந்து மணிக்கு மேல் முடிந்திருக்கிறது.

போலி பார்வையாளர்களாக கூண்டுகுள் அடைக்கப்பட்ட மூவாயிரம் பேருக்கும் அவ்வளவு நேரமும் குடிக்க தண்ணீர் கூட வழங்கவில்லை. சிறுநீர் கழிக்க அவசரமாக எழுந்தவர்களைக்கூட மிரட்டி உட்கார வைத்தனர். முன்வரிசையில் அமர்ந்திருந்த வேந்தரின் குடும்பத்தினருக்கு மட்டும் விசேஷ கவனிப்பு. மேடையில் இருந்த பட்டிமன்ற பேச்சாளர்களும் நடுவரும் தங்கள் தமிழ் அறிவையும் பேச்சாற்றலையும் நொடிக்கு நொடி வெளிக்காட்டி புளகாங்கிதம் அடைந்தனர். கைதட்டல் அரங்கத்தை அதிரவைத்தது.

பாவம், பார்வையாள மாணவ மாணவிகளில் பதினான்கு பேரை தவிர எவருக்கும் தமிழே தெரியாது என்பதுதான் கொடுமை. அவர்கள் தாங்க முடியாத தவிப்பில் கூச்சல் போட்டுக் கொண்டே இருந்தனர். அக்வாஸ்டிக்ஸ் நுட்பத்தில் அதையெல்லாம் பாராட்டுகளாகவும் ஆரவாரமாகவும் மாற்றிவிடலாம் என்று சேனல் டெக்னீஷியன்கள் கூறி இருந்ததால் வேந்தர் குடும்பம் அலட்டிக் கொள்ளவே இல்லை. வழக்கமாக மூன்று மணிக்கு புறப்பட வேண்டிய கல்லூரி பேருந்துகள் ஐந்து மணிக்கு கிளம்பும்; அதுவரை நீங்கள் என்ன சத்தம் போட்டாலும் பலன் இருக்காது என எச்சரிக்கை விடப்பட்டது.

தலா 45,000 பேருந்து கட்டணம் வசூலித்துதான் அத்தனை பேருக்கும் அட்மிஷன் போட்டிருந்தது நிர்வாகம் என்பது தனிக்கதை. பேருந்துகள் புறப்படும் நேரத்தை ஒலிபெருக்கியில் அறிவித்தவர் மரியாதைக்குரிய பட்டிமன்ற நடுவர். நீண்ட தீர்ப்பை தொடர விடாமல் மாணவர்கள் கைதட்டியதால் ஒருவழியாக முடித்தார் நடுவர். செல்வத்தை விட கல்வியே முக்கியம் என்பது தீர்ப்பின் கடைசி வரி. அதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட சன்மானம் மூன்று லட்ச ரூபாய் என்பது டி.வி. தரப்பு தகவல்.

நடுவர் யார் என்பதை சொல்லவே இல்லையே என்கிறீர்களா? வெட்கக்கேடு. தமிழருவி மணியனை கையெடுத்து கும்பிடலாம் என்ற அளவுக்கு தனது மரியாதையை ஒரே நிகழ்ச்சியில் தரைமட்டமாக்கி விட்ட அந்த தமிழறிஞர் பெயரை எஸ்.ஆர்.எம். மாணவர்களிடம் கேளுங்கள். அல்லது வேந்தர் டி.வி. சேனல் முன்னறிவிப்புகளில் பாருங்கள்.

முத்தமிழ் பேரவை ஐந்தமிழ் நாறவை என்று பல பேனர்களை மாட்டி ஊரறிந்த அறிஞர்கள், நிபுணர்களை வரவழைத்து மாணவர்கள், ஆசிரியர்களை அடிமைகளாக அமரவைத்து விழா நடத்தி கைநிறைய டாலர் அல்லது ரூபாய் கட்டுகளை கொடுத்து மூளைச்சலவை செய்து அவர்கள் போகுமிடம் எல்லாம் நிறுவனத்தை புகழ் பாட வைக்கும் தந்திரத்தை வேறு எந்த கல்வி முதலாளியைவிடவும் வேந்தரின் கூட்டம் சிறப்பாகவே கையாள்கிறது.

அந்த வலையில் விழுந்துள்ள சமீபத்திய இரையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. இந்த விமர்சனத்தை நேர்மையற்ற முறையில் எதிர்கொள்ளவும் அவர் தனது தமிழறிவையே துணைகொள்வார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

9/19/14

திருச்சியில் 14நாட்கள் விதவித கெட்டப்பில் போராட்டம் நடத்திய விவசாயி சங்க தலைவர் அய்யாகண்ணுவின் உண்மை முகம்

ஏய், போ, உட்காரு, நில்லு, மயிராண்டி, பல்லஉடைச்சுடுவேன், சோறுதிங்கிறியா?, அறிவில்லையா?, மூடு, உனக்குகென்ன மயிரா தெரியும்?, இத படிக்கும் போதே உங்களுக்கு கோபம் வரும்கொஞ்சம் ழுழுசா படிங்க……………

கடந்த 15 நாட்களாக திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே பாரதிய கிசான் சங்கத்தின் சார்பில் விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரியும், தள்ளுபடி செய்யவே முடியாத வங்கிகடன்களை தள்ளுபடி செய்தே ஆக வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை கேட்டும், உண்ணாவிரதம் என்கிற பெயரில் அது என்ன கணக்கோ தெரியவில்லை காலை 10 மணியிலிருந்து மாலை 6மணி வரை ( காவேரி நீர் கேட்டு கருணாநிதியும் ஜெயலலிதாவும் உண்ணாவிரதம் இருந்ததை போல) தினக்கூத்து நடைபெற்றுவந்தது.
என்ன கட்டாயத்தினாலோ தெரியவில்லை தினமும் குறைந்தபட்சம் 30 முதல் 40 வரை ( கடைசிநாள் மட்டும் 200 பேர் ) விவசாயிகளாவது அமர்ந்திருந்தனர். இது ஒரு சாதனை தான். ஒரு சராசரி அரசியல்கட்சியாக இருந்தால் வருபவருக்கே குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ரூபாய் 500 செலவு செய்ய வேண்டும்.
ஆச்சரியமாக இருந்தது.
இந்த இலட்சணத்தில் தினந்தோறும் சட்டையின்றியும், உடலில் பட்டை நாமம் இட்டு கையில் மண் சட்டி ஏந்தியும், சட்டை அணியாமல் உடல் முழுவதும் விபூதிபட்டை இட்டு,
ருத்ராட்ச மாலை அணிந்தும்,
சட்டை அணியாமல் குல்லா அணிந்தும்,
வாயில் கருப்பு துணி கட்டியும்,
படுத்தவாறும், நாடா கயிறால் ( கடைசிநாள் தூக்குகயிராம்! ) கைகள் மற்றும் கால்களை கட்டியும்,
மொட்டை அடித்தும்,
கை மற்றும் கால்களில் பேண்டேஜ் கட்டியும்,
இலை, தழைகளை உடலில் கட்டி,
சடலம் போல் சித்தரித்து சங்கு ஊதி,
ஒப்பாரி வைத்தும், முக்காடு போட்டும். கண்களை கட்டிக் கொண்டு,
கையில் குச்சிகளுடன் திருஓடு ஏந்தியும்
கடைசி நாள் கழுத்தில் கயிரை மாட்டிக் கொண்டு தூக்கில் தொங்கும் போராட்டம் நடத்தி ( உண்ணாவிரதம் ? ) இருந்தனர். அப்பா முடிஞ்சுது.
இவைகளை எல்லாம் இவர்களை எல்லாம் ஏற்பாடு செய்த வக்கீல அய்யாக்கண்ணு ஜெயலலிதா போலவே 10 நிமிடத்திற்கு ஒரு முறை விவசாயிகளை பார்த்து கடனை கட்ட முடியுமா? என்று கேட்பார். கோரசாக விவசாயிகளும் இரண்டு கைகளையும் தூக்கி கொண்டு முடியாது முடியாது முடியவே முடியாது என்று கோஷம் எழுப்புவார்கள். பஸ்ஸில் இந்த வேடிக்கையை பார்த்துக் கொண்டு செல்லும் பயணிகளுக்கு ஜெயலலிதா தேர்தல் காலத்தில் செய்வீங்களா? செய்வீங்களா? என்று கேட்டது நினைவிற்கு வந்தது. அது போகட்டும்.
விவசாயிகள் பிரச்சனைக்கு வருவோம் அய்யாக்கண்ணு சொல்லும் கோரிக்கைகள் எதையுமே எந்த அரசாலுமே நிறைவேற்றி தரவே முடியாது. இது அவருக்கும் நன்றாக தெரியும்.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை விவசாயசங்கங்களின் தலைவர்கள் ஆளுக்கு ஒரு திசையில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ஆக மாறி விசாயிகளிடமும் முடிந்தால் பொதுமக்களிடமும் வியாபார பிரமுகர்களிடமும் முடிந்த வரை அதிகாரிகளிடமும் கூட வசூல் செய்து வளமாக வாழ்கிறார்கள். இதில் அய்யக்கண்ணுவுக்கும் விஸ்வநாதன் என்பவருக்கும் தான் பலத்த போட்டி நடைபெற்றுவருகிறது.
விஸ்வநாதன் முதலில் லால்குடி பகுதி தலைவராக இருந்தார். பிறகு திருச்சி மாவட்ட ஏரி ஆற்றுபாச விவசாயிகள் சங்கம் என்று லெட்டர் பேடு அடித்தார். தன்னுடைய ஜாதி கோதாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்களுக்கு நெருக்கமாகி இன்றைக்கு ஏரி ஆற்றுபாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் என்று லெட்டர் பேடு அடித்துக்கொண்டு பரவலாக திருச்சி அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் பா.ம.க துணையோடு தன் சங்கத்தை வலுபடுத்திக்கொண்டு வருகிறார்.
ஒவ்வொரு முறையும் திருச்சி கலெக்டர் ஆபிஸில் நடக்கும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் இந்த இருவரையும் சமாளிப்பதே திருச்சிக்கு வரும் கலெக்டர்களுக்கு தீராத தலைவலியாகிவிடும். இன்னும் ஓரு ஏழுஎட்டு தலைவர்கள் இருக்கிறார்கள். கூட்டம் நடக்கும்பொழுது முன்வரிசையில் அமர்வதற்கு அடித்துக்கொள்வதோடு அவர்கள் பணி முடிந்துவிடும். ( அடுத்த நாள் தினசரி பேப்பரில் போட்டோ வரும் என்கிற அற்ப மகிழ்ச்சி ) விஸ்வநாதனுக்கும் அய்யாக்கண்ணுவுக்குமான போட்டியில் இந்த இன்னிங்சில் அய்யாக்கண்ணு 15 நாள் மேட்ச் ஆடியிருக்கிறார்.
இந்த 15 நாளில் செப்டம்பர் 15ம் தேதி அண்ணாசிலைக்கு மாலை போட வந்த ஆண்ட கட்சி, ஆளுகின்ற கட்சி, ஆளுவோம் என்று சொல்லும் கட்சி இன்னபிற சின்ன கட்சிகளின் நிர்வாகிகள் கூட சோறு போடும் விவசாயிகளை பார்த்து ஆறுதலுக்காகவாவது சில வார்த்தைகள் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அவர்கள் ஏன் பார்க்கவில்லை என்றால் எப்போதும் தினசரிகளுக்கும் டிவிக்களுக்கு மட்டுமே
அரை உடம்போடு மலைக்கோட்டையிலிருந்து குதிக்கிறேன்
ரயிலில் தலைவைக்கிறேன் தூக்கு போட்டு சாகிறோம்,
சென்னைக்கு சென்று மெரினா பீட்சில் கடலை நோக்கி நடந்து சென்று தற்கொலை செய்து சாகபோகிறோம்.
டெல்லிக்கு சென்று விசம்குடித்து சாகபோகிறோம்
என்றெல்லாம் நோட்டிஸ்சும் போஸ்டரும் அடித்து ( நான்கு முறை டெல்லிக்கு 100 பேருடன் சென்று விட்டு வந்துவிட்டார் ) விளம்பரம் மட்டுமே செய்து ஒரு முறை கூட சாகாத அய்யாக்கண்ணுவின் வார்த்தையை நம்பி வந்த விவசாயிகளை பார்த்து ஆறுதல் கூறுவதால் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்ததால் தான் எந்த அரசியல்வாதிகளும் இவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
கடைசிநாள் அய்யாக்கண்ணு அடித்த கூத்தை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்து பெண்கள் பார்த்திருந்தால் அடுத்த ஐந்து தலைமுறைக்கு அய்யாக்கண்ணு என்கிற பெயரே சாத்தானை அவர்களுக்கு நினைவுபடுத்தும்.
ஏய்,போ, உட்காரு, நில்லு, மயிராண்டி, பல்உடைச்சுடுவேன், சோறுதிங்கிறியா, அறிவில்லையா, மூடு, உனக்குகென்ன மயிரா தெரியும், இது எல்லாமே அய்யாக்கண்ணு வயதுவித்தியாசம் இல்லாம விவசாயிகளை பார்த்து சொன்ன வார்த்தைகள்.
ஒரு விசயம் மட்டும் நன்றாக புரிகிறது உலகத்திலேயே மிக ஈசியாக ஏமாற்றமுடியும் என்றால் அது விவசாயிகளை மட்டும் தான். மண்ணோடும் பயிரோடும் உறவாடி வாழும் அந்த நல்ல ஜென்மங்களை வழிநடுத்துகிறேன் பேர்வழி என்று சொல்லி பிச்சைகாரர்கள் போல் நடத்த அய்யாக்கண்ணு மட்டும் அல்ல விவசாயிகளின் தலைவர்கள் என்று சொல்லிக்கொல்லுகின்ற எல்லா கண்ணுகளும் உணர்ந்து திருந்த வேண்டும் என்பது தான் மனசாட்சி உள்ள மனிதர்களின் கோரிக்கை.
ஊதுற சங்க ஊதிட்டோம், உணர வேண்டியவுங்க உணர்ந்தா சரி!

9/16/14

அப்பா ஸ்தானத்தில் இருந்த திருச்சி செய்தி ஆசிரியர் தப்பா நடந்த கதை

அப்பா ஸ்தானத்தில் இருந்த திருச்சி செய்தி ஆசிரியர் தப்பா நடந்த கதை

திருச்சியின் பாரம்பரிய ஆங்கில பத்திரிக்கையின் எல்லாமுமாக இருந்த ஒருவர் சேலத்திற்கு டம்மியாக அனுப்பப்பட்ட கதையை கேட்டால் தலைச் சுற்றுகிறது.

அப்பா வயதுடைய அந்த எடிட்டர், தனக்கு கீழ் வேலைசெய்யும் மகள் வயதுடைய பெண் ஊழியர்களுக்கு கொடுத்த செக்ஸ் ஜொள் டார்ச்சர் அந்தளவுக்கு உள்ளது.
மார்க்க விதிகளை அப்படியே பின்பற்றுகிறேன் என எப்பொழுதும் சொல்லிக்கொள்ளும் முக்தானவர், தனக்கு கீழ் வேலை செய்த பெண் நிரூபர்களுக்கு கொடுத்த டார்ச்சரில் கொதித்த அந்த சகோதரிகளில் திருச்சிக்காரர் தீப்பிழம்பாகியும், நாகையில் கவிமொழி பேசியவரும் தனக்கு அந்த எடிட்டரின் டார்ச்சர், கர்நாடகா திறந்துவிட்ட காவிரி நீரைவிட ஜொள் அதிகமாகிப்போனதால், பொறுமையிழந்து பொங்கி எழுந்ததோடு, தலைமைக்கு அப்படியே ஆதாரத்துடன் தபால் அனுப்பினார்களாம் விளைவு ?

முல்லா கதைகளை கூறி முன்னுக்கு வந்த முக்தானவர் செல்லாக்காசாகி சேலத்திற்கு செய்தியளராக அனுப்பப்பட்டுள்ளார்.
விளைவு

அங்கு போயும் கூட அடங்காமல், திருச்சியில் அரபு நாட்டிலிருந்து அவரால் விரும்பி வரவழைக்கப்பட்டு மெட்ரோ பிளஸில் மெட்டுப்போட சேர்த்துவிடப்பட்டுள்ள நகல்போல் இருக்கும் அசலையும் சேலத்திற்கு மாறுதல் வாங்கி வரச்சொல்லி மன்றாடுகிறாராம்.

செய்வதை திருத்தமாக செஞ்சிருக்கலாம் 55வயதாகும் செய்யது.

தி பிளை ஆங்கிலப்படம் சங்கரின் ஐ படமான கதை.... ஐயோ ஐய்யோ

யக்குனர் ஷங்கர் தஞ்சை மாவட்டத்தின் வயற்சூழலில் வளர்ந்திருக்கா விட்டாலும், கலைச்சூழலில் வளர்ந்தவர். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக இருந்த தஞ்சை, ஷங்கர் பிறந்து வளர்ந்த நேரமோ தெரியவில்லை, தமிழ்நாட்டின் பாலைவனமாக மாற ஆரம்பித்திருந்தது. தஞ்சை நாட்டுப்புறக் கலைகளும், இயக்குனர் ஷங்கர் வந்து ஆளான சினிமா துறையால் இதே காலத்தில் சீரழிக்கப்பட்டது . மக்களின் மண்சார்ந்த உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் பேசிய நாட்டுப்புறக் கலைகள் சினிமா ராகத்திலும், மோகத்திலும் அடையாளங்களை இழந்தன.animal-i
தமிழ் சினிமா மிகவும் மரியாதை செலுத்துகிற கர்நாடக இசை கூட என்.ஆர்.ஐ அம்பிகளாலும், எம்.என்.சி ஸ்பான்சர்களாலும், கையில் பெப்சி, வாயில் பர்கர், விராட் கோலி படம் போட்ட டி ஷர்ட் சகிதம், கலைஞர்கள் எந்தரோ மகானுபாவலு பாடுவதாக மாறி விட்டது. சென்னை சபாக்களில் நடக்கும் டிசம்பர் கச்சேரிகளில் கூட இடைவேளை கேண்டினின் கிச்சடி, பங்குச் சந்தை பரிவர்த்தனைகளே பேசு பொருளாக இருந்தன. யாரும் ராகங்களின் ஆலாபனை குறித்தோ, கலாச்சாரத்தில் அவுரோகணம் குறித்தோ கதைப்பதில்லை.
தமிழகத்திலேயே கோயில்கள் அதிகம் உள்ள ஊர் கும்பகோணம்தான். கும்பகோணத்துக்கு அதிகாலையில் போனால் ராமா, சோமா, காமா என்று பல வகை கடவுள் நாமங்கள் பாடப்படுவது கேட்கக் கிடைக்கும். கும்பகோணத்தில் கோயில்கள் மட்டுமில்லை, தெருநாய்களும் அதிகம். கோயிலில் வீசப்படும் பிரசாதங்களை தின்னும் டாபர்மேன் முதல் ராஜபாளையம் ஹன்டர் வரை எல்லா வகை நாய்களும் அலைந்து கொண்டிருக்கின்றன. இதனாலேயே நாய்க்கடி பட்டு மக்கள் மருத்துவமனைக்கு போவதும், மருந்து தட்டுப்பாடாக இருப்பதும் கும்பகோணத்தின் சிறப்பு. இதன்றி மகாமகம் வந்து ‘அம்மா’ வந்து குளித்தால் மரணமடையும் பக்தர்களின் கதை தனி.
இப்படிப்பட்ட கும்பகோணத்தில் படித்த ஷங்கரின் உலகம், ஃபேன்டசி எல்லாம் எப்படி இருக்கும் என்று வாசகர்களே யோசித்து படம் எடுக்கலாம்.
அருணாச்சலம் படத்தில் ரஜினிக்கு 3,000 கோடி ரூபாய் சொத்து கிடைக்க 30 கோடி ரூபாய் ஒரு மாதத்துக்குள் செலவிட வேண்டும் என்றால், ஹோட்டலில் ரூம் எடுக்கிறார், சினிமா எடுக்கிறார், தேர்தலில் நிற்கிறார். இதற்கு மேல் தமிழ் சினிமா டைரக்டருக்கு யோசிக்கத் தெரியவில்லை. தனியார்மய சொர்க்கத்தில் ஹார்ட் அட்டாக் என்று அப்பலோவுக்கு போயிருந்தால் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர், அமெரிக்கா என்று அனுப்பி செலவு செய்திருக்கலாம். இல்லை பத்து பேருக்கு பச்சமுத்து கல்லூரியில் டாக்டர் சீட்டு வாங்கித் தந்தால் கூட அம்சமாக செலவழித்திருக்கலாம்.
தமிழ்நாட்டில் வட்டிக்கடை வைத்திருக்கும் செட்டியாரின் தொலைதூரத்து விஷனே இந்த மாசம் 10 தாலி வரும், 20 அண்டா வரும், 30 குண்டா வரும் என்பதைத் தாண்டி போகாது. இதைத் தாண்டி மெரில் லிஞ்ச், லேமன் பிரதர்ஸ் போல ஆண்டுக்கு நமக்கு இத்தனை கோடி டாலர் வரும் என்றெல்லாம் செட்டியார்கள் யோசிக்க மாட்டார்கள்.  இதில் ப.சிதம்பரம் செட்டியாரை சேர்க்க கூடாது. அவரெல்லாம் இன்டர்னேஷனல் பிசினெஸ் மென். அவரையெல்லாம் காரைக்குடி அரண்மனை வீடுகளில் மட்டும் கட்டிவிட முடியாது.
ஐ படம்
சவுகார்பேட்டையைச் சேர்ந்த ராஜஸ்தான் சேட்டு நகரத்தில் எந்த பகுதியில் வட்டிக்கடை வைத்திருந்தாலும், 10 திருட்டு வாட்ச் வரும், 10 திருட்டு லேப்டாப் வரும், வளையல், தொங்கட்டான், மூக்குத்தி எத்தனை வரும் என்றுதான் பட்ஜெட் போடுவார்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வேலை செய்யும் பார்ப்பன, முதலியார், கவுண்டர் அதிகாரிகள் இந்த மாசம் எத்தனை காண்டிராக்ட் கமிஷன், மணல் லாரி கும்பலிடமிருந்து 1 லட்சம் தேறுமா என்று கணக்கு போடுவார்கள். மிகப்பெரும் தரகு முதலாளிகளின் தொழில்களில் இருப்போர் மட்டும்தான் கோடி, மில்லியன், பில்லியனில் கணக்கு போடுவார்கள். பெரும்பான்மை தமிழக சமுதாயத்தில் இது சாத்தியமில்லை.
ஒட்டு மொத்த தமிழகத்தின் பட்ஜெட்டே இப்படி இடுக்குகளில் சிக்கிக் கொண்டிருக்கும் போது தமிழ் சினிமாவில் மட்டும் ஷங்கரின் பெரிய பட்ஜெட் கிரியேட்டிவிட்டி, எப்படி இருக்கும்?
கும்பகோணத்தில் மோட்டுவளையை பார்த்து ராமா ராமா என்று கத்திய தியாகையரையும், அதைக் கேட்டு பதறி ஓடிய காக்கையையும் பார்த்து வளர்ந்த கலைகளின் ஊரில் ஷங்கர் எனும் கலைஞரின் சிந்தனை வரம்பு எவ்வளவு தள்ளுபடி கொடுத்தாலும் பிரம்மாண்டமாக வர வாய்ப்பே இல்லை.
இதற்குத்தான் எஞ்சினியரிங் படித்த, நானோ டெக்னாலஜி தெரிஞ்ச, மரைன் எஞ்சினியரிங் படித்த ஆட்களை தேடி உதவியாளராக சேர்த்துக் கொள்கிறார். கூடவே இவர்களுக்கு நான்கைந்து மொழி, ஐந்தாறு டெக்னாலஜி எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.
அவர்களிடம் ஏதாவது ஹாலிவுட் படத்தை பார்த்து, எப்படி குரங்கு நாய்க்குட்டியா மாறுது, முதலை தண்ணிக்குள் சண்டை போடுது என்று கேட்கிறார். “அண்ணே இது கிராபிக்ஸ், கேமரூன், ஜார்ஜ் லூகாஸ் நம்ம ஸ்டூடியோவிலேயே பண்ணிரலாம்ணே. அதுக்கு மேட்சிங் ஒர்க் எல்லாம் பண்ணலாம்” என்கிறார்கள். இத்தனை கோடி செலவாகும் என்று பட்ஜெட் போடுகிறார்கள்.
இவர்கள் எல்லாம் சேர்ந்து படம் எடுக்க, தமிழ்நாட்டு முதலாளிகள், பத்திரிகைகள், நட்சத்திரங்கள் எல்லாரும் சேர்ந்து கும்பகோணம் சுண்டல் பார்ட்டியின் அந்தப் படத்தை அமெரிக்காவின் ரூ 3 லட்சம் மதிப்பிலான ‘மெகா’  ஃப்ளூயர் பர்கர் எனும் தின்பண்டமாக (fluer burger) ஜாக்கி கொடுத்து உயர்த்தி காட்டுகிறார்கள்.
ஃப்ளை, ஐ
இன்ன பத்திரிகையிலிருந்து இன்ன பத்திரிகையாளரை கூப்பிடு, இத்தனை பேருக்கு கவர் போடு, பத்திரிகையில் மூணு காலம் விமர்சனம் போட முடியாதவன்னு தெரிஞ்சவனை உள்ள விடாதேன்னு பத்திரிகைகளை கவர் பண்ணுகிறார்கள். இதுதான் ஷங்கர் படத்தின் பிரம்மாண்டம் பற்றி பத்திரிகைகளில் வரும் ஆகோ, ஓகோ செய்திகள், விமர்சனங்களின் மூலம்.
தமிழ்நாட்டில் சங்கரராமனை கொலை செய்த ஜெயந்திரன் கைது செய்யப்பட்ட அன்றே, என்ன இருந்தாலும் அவாதான் எங்களுக்கு லோககுரு என்று பூணூல் தெரிய டிவியில்பேட்டி கொடுக்கும் எஸ்விசேகரின் அறம்தான் ஷங்கர் படங்கள் பேசும் அரசியலின் அடிப்படை. பிறகு கும்பகோணம் பார்ட்டி புரட்சி பற்றியா பேசும் ?
முதல் படம் ஜென்டில்மேனிலேயே நல்ல மார்க் வாங்கிய பார்ப்பன மாணவருக்கு எம்பிபிஎஸ் சீட்டு கிடைக்கவில்லை என்பதாலேயே பணக்காரர்களிடம் கொள்ளை அடித்து பணம் கட்டி அவரை தனியார் கல்லூரியில் படிக்க அனுப்புகிறார். ஐஐஎம் ஐஐடி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள தூண்டப்படும் காலத்தில் ஒரு பார்ப்பன இளைஞருக்கு எம்பிபிஎஸ் சீட் இல்லை என்றதும், தனி ஒரு பார்ப்பானுக்கு உணவு இல்லை என்றால் உலகத்தையே அழித்து விடுவதாக அர்ஜுனை வைத்து கொலை செய்யச் சொன்னவர் இந்த இயக்குநர்.
1996-ல் ஜெயா-சசி கும்பல் ஊழலால் தமிழகத்தையே மொட்டையடித்து கொண்டிருக்கும் போது, ஊழல், ஆணவம், அராஜகம் கொடி கட்டி பறந்த காலத்தில் கும்பகோணம் கருப்பு பிராமணன் ஷங்கர் ஆர்.டி.ஓ ஆபிசில் துட்டு வாங்கும் புரோக்கரை வில்லனாக்கி படம் எடுக்கிறார். கிராஃபிக் வொர்க்குக்காக அமெரிக்காவுக்கு போனவர், ஊழல் என்பதை காட்ட ஆர்.டி.ஓ ஆஃபிசில் நிறுத்தி விட்டார், செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு போகவில்லை, போயஸ் கார்டனுக்கும் போகவில்லை.
முதல்வன் படம் எடுக்கும் போது, முதல்வராக இருந்த கருணாநிதியை கிண்டல் செய்து படம் எடுத்ததால் தென் மாவட்டம் முழுக்க மகன் அழகிரியே கேபிள் டிவியில் ஓட்டி ரிலீஸ் செய்து விட்டார். ஜெயலலிதாவுக்கு பம்மியிருந்த சங்கர் கருணாநிதி முன் வீரம் காட்டினார். பையனின் அடாவடியின் முன்பு சங்கர் அண்ணன் பயந்து விட்டார். அதைக் கண்டித்துக் கூட வெளிப்படையாக பேசவில்லை.
சென்ற ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி கொடூரமாக பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டது நாடு முழுவதும் கண்டனத்தை எதிர்கொண்டது. 2000-ம் ஆண்டுக்கு பிறகு இத்தகைய பாலியல் வன்முறை குற்றங்கள் பல மடங்கு அதிகரிக்க ஆரம்பித்தன. அந்த காலகட்டத்தில், இத்தகைய செயல்களுக்கு எதிராக ஆண்கள், இளைஞர் மத்தியில் குற்றவுணர்வையும் பரிசீலனையையும் ஏற்படுத்தாமல், பெண்கள் மீது ஆசிட் அடித்தால்தான் தப்பு, கூட்டத்தில் கையைப் போடுவது இயல்புதான் என்று படம் எடுத்தவர் ஷங்கர். அதுதான் ‘பாய்ஸ்’.
ஆனந்த விகடனில் சீ என்று விமர்சனம் எழுதினார்கள். விளையாட்டா சொன்னதை சீரியசா எடுத்திருக்கிறார்கள் என்று இத்தகைய எதிர்ப்புகளுக்கு பதில் கூறினார் ஷங்கர். இந்த படத்திற்கு முன்னாடி விளையாட்டாக பேசியதை சீரியசா எடுத்துக் கொண்டீர்கள், இப்போது கொஞ்சம் விளையாட்டாக பார்க்கலாமில்லையா என்பது அவரது உட்கிடை.
ஜீன்ஸ் படத்தில் உலக அதிசயம் எல்லாம் வருகிறது என்று சொன்னார்கள். ஆனால், உலக அதிசயத்தை பிரசாந்தை ஆடவிட்டு டூயட் பாடல் எடுக்கத்தான் பயன்படுத்தியிருக்கிறார். அதில் ஐஸ்வர்யாதான் எட்டாவது அதிசயம் என்று ஏனைய அதிசயங்களை என்கவுண்டர் செய்தார்.
அன்னியன் படத்தில் ரயில்வே கேன்டீனில் தரக்குறைவான உணவு கொடுத்த காண்டிராக்டரை எண்ணெயில் வறுத்து கொல்கிறார். அன்னியன் படம் வெளியான 2005-ல் தயிர் சாதம் சாப்பிட்டு விட்டு கையில் ஒட்டியிருக்கிற குருணை சாதத்தை நக்கி சாப்பிடுகிற அம்பிக்களுக்குக் கூட மாட்டுக்கறி சாப்பிட்டவரை போல நாமும் சமூக அநீதிகளுக்காக பயங்கரமாக போராடுகிறோம் என்ற ஃபீலிங்கை அந்த படம் கொடுத்தது என்றால் அது மிகையில்லை.  அந்த காலகட்டத்தில்தான் மகாராஷ்டிராவின் கயர்லாஞ்சியில் போட்மாங்கே குடும்பம் கொடூரமாக பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டது. ஜெயலலிதா தாமிரபரணி ஆற்றை கோக் நிறுவனத்துக்கு தாரை வார்த்திருந்தார்.
பொருநை நீரை அமெரிக்க கோக்குக்கு தாரை வார்த்த ஜெயலலிதாவுக்கு தண்டனையாக சகாரா பாலைவன மணற்பரப்பில் உழுது பயிரிட்டு நெல் விளைவிக்க வேண்டும் என்று தண்டனை கொடுப்பதாக படம் எடுக்கவில்லை. கயர்லாஞ்சி இருக்கும் மகாராஷ்டிராவில் ஆதிக்க சாதியினரை திரட்டி, மதவெறி சாதிவெறி அரசியல் செய்யும் பால் தாக்கரேயின் ஆண் உறுப்பில்  ஸ்ரீகிருஷ்ணா இனிப்பைத் தடவி பெருச்சாளியை கட்டி வைத்து அனகோண்டாவை விட்டு கடித்து கொல்வது போல படம் எடுத்திருந்தால் ஷங்கரை செல்லூலாயிட் போராளி என்றாவது ஒத்துக் கொண்டிருந்திருக்கலாம். சாலையில் துப்பியவனையெல்லாம் கொல்லும் வெறி ஏன் வருகிறது என்றால் ஒரு அக்மார்க் ஆதிக்கசாதி மேட்டுக்குடியினருக்கு இவைதான் பிரச்சினைகள். பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை முறை அதில் உள்ள அநாகரீகங்கள் என்று இவர்கள் கருதிக் கொள்பவைதான் பெரும் தலைவலிகள். ஷங்கர் அதில் முனைவர் பட்டம் செய்தவர்.
சுயநிதி கல்லூரி கொள்ளையர்கள் சாராய உடையார்கள், பச்சமுத்து, ஜேபிஆர் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் தமிழகத்தில் அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவிலிருந்து வந்த என்.ஆர்.ஐ. ரஜினி தனியார் கல்லூரி ஆரம்பிப்பதாக எடுத்த படம்தான் சிவாஜி. ரஜினி வழுக்கை, வெள்ளை, டான்ஸ் என்றுதான் மயங்கினார்களே தவிர இந்த சுயநிதி கொள்ளையர்களைப் பற்றி யாரையும் அந்தப் படம் யோசிக்க வைக்கவில்லை.
மயிலாப்பூர் கச்சேரி ரோடு பார்ப்பனர்கள் எஸ்.வி.சேகர் கடி ஜோக்கை சொல்லி காலத்தை ஓட்ட முடியாது என்று தெரிந்ததும், அப்டேட்டாக ஏதாவது அமெரிக்க நகைச்சுவைகளை அவிழ்த்து விடுவது போல, தன்னுடைய பெரிய பட்ஜெட்டுக்கு ஏத்த ரேஞ்ச் வேண்டும் என்று எந்திரன் எடுக்கிறார். அதை எங்கிருந்து சுட்டார் என்று உங்களுக்கே தெரியும்.
இவ்வாறு, எந்திரனில் 100 கோடி ரூபாய்க்கு தனது சாம்ராஜ்யம் விரிந்த பிறகு, கும்பகோணம், மயிலாப்பூரில் அவரது கால் இருந்தாலும் கண்ணும் காதும் உலகம் முழுக்க பார்க்க ஆரம்பித்து அடுத்த படத்துக்கு 200 கோடியில் பட்ஜெட் போடுகிறார்கள். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார். இன்னும் எத்தனை நாள் பான் பராக் துப்பியதற்கு தண்டனை என்று படம் எடுப்பது. தமிழ்நாட்டிலேயே வாழ்ந்தாலும் தஞ்சை விவசாயிகள் முதல், தாமிரபரணி தண்ணீர் விலை போவது, கல்வி தனியார் மயம் என்று பார்க்க பயப்படும் ஷங்கர் தனது தகுதி வாய்ந்த அசிஸ்டண்டுகளை ஏவி ஐடியாக்களை திரட்டுகிறார்.
1986-ம் ஆண்டு வெளியானது தி ஃபிளை என்ற ஹாலிவுட் திரைப்படம். பொருட்களை மின்காந்த அலைகளாக மாற்றி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்புவதற்கான அறிவியல் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார், ஹீரோ. அந்த சோதனையில் தன்னையே உட்படுத்திக் கொண்ட போது, அனுப்பும் தளத்தில் ஒரு ஈயும் சேர்ந்து விட, ஹீரோ மனிதனும், ஈயும் சேர்ந்த கலப்பினமாக மாறி விடுகிறார். அதனால் அவரது உடம்பிலும், முகத்திலும் ஏற்படும் மாற்றங்கள், மீண்டும் மனிதனாக மாறுவதற்கான போராட்டங்கள், இடையில் காதலியுடனான பிரச்சனைகள் என்று படம் போகிறது.
fly-i-2
இந்தப் படம் பற்றி ஷங்கர் கேள்விப்படுகிறார். மனிதன் ஈயாக மாறுகிறான், முகம் விசித்திரமாக, விகாரமாக மாறுகிறது. ஓடுகிறான், பாடுகிறான். இதை முழுமையாக காட்டாவிட்டாலும் படத்தின்  பட்ஜெட், புதுமைக்காக மினிமமாக இதை பயன்படுத்தலாம், இந்த கான்செப்ட் நல்லா இருக்கே, என்று யோசித்திருக்கிறார். அதையே தமிழ் சினிமா ரேஞ்சுக்கு கதை கட்டியிருக்கிறார். எத்தனை நாள் அப்பள வியாபாரத்தையே காட்டுவது, இப்போது ஐடி காலத்தில் எது சீசன் என்று ஆள் வைத்து யோசித்திருப்பார். இப்படித்தான் விக்ரம் ஒரு விளம்பர மாடலாக மாறுகிறார். சங்கரும் 2014-க்கு அப்கிரேட் ஆகிறார்.
ஐ படத்தின் டீசர் பிரிவீயு பார்த்த பத்திரிகையாளர்கள் அது ஹாலிவுட்டின் ஹல்க் படம் போல இருப்பதாக சொன்னார்களாம். அது ஹல்க் படம் இல்லை என்று சங்கர் சிரித்துக் கொண்டே சொன்னாராம். இதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு உலக நடப்புகளை கொண்டு வந்து சேர்க்கும் பத்திரிகையாளர்களின் லட்சணம். தமிழ் சினிமா தரும் கவர் மூலம் தமிழ்நாட்டை இவர்கள் தமது கவரேஜில் பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பலாம்.
ஷங்கர் இந்தப் படத்தின் கதையாக சொல்லியிருப்பது, ஆண் மாடலுக்கு வில்லன் மருந்து செலுத்தி விலங்கு மனிதனாக மாற்றுவது என்று போகிறது. அதில் கூட, குறைவு இருக்கலாம். அடிப்படையில் பல காட்சிகள் ஃபிளை படத்திலிருந்து வருகின்றன. டிரெய்லரை பாருங்கள். 
இணையத்தில் பார்க்க கிடைத்தவை படி இந்த படத்தில் நடிகர் விக்ரம் ஒரு விளம்பர மாடலாக போராடி வெற்றி பெறுகிறார். பொறுக்காத போட்டி விளம்பர வில்லன் நடிகர் வைரஸ் கிருமி மருந்தை விக்ரம் உடலில் செலுத்துகிறார். விக்ரம் உடல் மாறுகிறது. அதையே அதிகமாக காட்டினால் பெண்கள், குழந்தைகள் வரமாட்டார்கள், ஃபேமிலி சப்ஜெக்டாக மாற்ற முடியாது என்பதால் அசிங்கமான விக்ரமை வைத்து பல்வேறு ஆக்சன் காட்சிகள், கிராபிக்ஸ் பாடல்கள் என்று பேலன்ஸ் செய்து கொள்கிறார். இறுதியில் விக்ரம் தனது சிக்ஸ் பேக் உடலை திரும்பப் பெற்று வில்லனை வீழ்த்தி நாயகியை கைபிடிப்பார் என்பது இனி பிறக்கும் குழந்தை கூட அறியும் அற்ப விசயம்.
இதை ஒரு மாபெரும் படம் போலவும், புதுமை போலவும் பல்வேறு இணைய மொக்கைகள் போடும் கச்சேரிதான் இதில் உள்ள மகா மட்டமான விசயம்.
உழைப்பதற்கு ஏற்ற ஆரோக்கியத்தை கொண்டிருக்க வேண்டிய உடலை பார்ப்பதற்கு மட்டும் அழகான உடலாக மாற்றிய முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சாரத்தின் வக்கிரத்தை ஏற்றுக் கொள்ளும் உணர்ச்சிதான் ஐ-யின் மையம். மாறுபடும் மனிதர்களின் நிறம், தோற்றத்தை அவலட்சணமாக மாற்றியிருக்கும் முதலாளித்துவத்தின் அழகு சாதன முதலாளிகளை ஆராதிக்கும் படத்தின் கதையை கொண்டாடுவது என்ன விதத்தில் சரி?
fly-i-1
ஆசிட் வீச்சிலும், ஆக்கிரமிப்புப் போர்களிலும் அங்கங்களை இழக்கும் மனிதர்களை இப்படம் எப்படி பார்க்கிறது? யானைக்கால் வியாதி கொண்டோர், இதர  நோய்களால்’விகாரத்’ தோற்றம் கொண்டோரெல்லாம் ஏழைகளின் பகுதியில் இயல்பாகத்தான் வாழ்கிறார்கள். ஆனால் மயிலாப்பூர் பகுதிகளில் அந்த உணர்வு எப்படி இருக்கும்? விடை வேண்டுவோர் ஐ படம் பார்க்கலாம். ஷங்கரின் கலை உலகு பற்றி அறிந்தவர்கள் காறித்துப்பலாம்

இலங்கை அதிபருக்கு எதிராக கறுப்புக் கொடி ஏற்றுங்கள்- திமுக தலைவர் கருணாநிதி

இலங்கை அதிபருக்கு எதிராக கறுப்புக் கொடி ஏற்றுங்கள்- திமுக தலைவர் கருணாநிதி

ஐக்கிய நாடுகள் சபையின் பொது உறுப்பினர் கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே கலந்துகொள்வதைக் கண்டித்து, செப்டம்பர் 25ஆம் தேதியன்று வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்ற வேண்டுமென தி.மு.க. தலைவர் கருணாநிதி கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெற்ற டெசோ கூட்டத்தில், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவையோ அந்நாட்டின் வேறு எந்தப் பிரதிநிதியையோ, ஐநா பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருந்தபோதும், இந்தக் கோரிக்கையை மத்திய அரசு வலியுறுத்தவில்லை என்றும், ஐ.நாவும் தன் அழைப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
ஆகவே, “ராஜபக்ஷே ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்துகொள்வதைக் கண்டித்து, உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் ஈழத் தமிழர் வாழ்வில் அக்கறை கொண்டுள்ள அனைவரும் செப்டம்பர் 25ஆம் தேதியன்று தமது வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றிவைப்பதோடு, கறுப்புச் சட்டை அணிதல், கறுப்புச் சின்னம் அணிதல் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தின் கடும் கண்டனத்தை எதிரொலித்திடவேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பேஸ்புக், டுவிட்டரில் போஸ்ட் போடுபவரா நீங்க நிச்சயம் இதை படிங்க.

பேஸ்புக், டுவிட்டரில் போஸ்ட் போடுபவரா நீங்க நிச்சயம் இதை படிங்க.

பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில்வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் நிறுவனங்கள், படிப்பு, அனுபவம் அடிப்படையில் மட்டும் இல்லாமல், வேலைக்கு விண்ணப்பித்துள்ளவர் சமூக  வலைதளங்களில் பதிவு செய்துள்ள விவரங்களை வைத்து, அவரை வேலைக்கு சேர்ப்பதா வேண்டாமா என முடிவு செய்கின்றன என்று ஆய்வு  ஒன்றில் தெரியவந்துள்ளது. வேலை வாய்ப்பு தொடர்பாக வெப்சைட் நடத்திவரும் நிறுவனம் சமீபத்தில் ஆய்வு நடத்தியதில் இது தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு நாடு முழுவதும் சுமார் 1,200 நிறுவனங்களில் நடத்தப்பட்டுள்ளது. 59% நிறுவனங்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி தகவல்கள்  சேகரிக்கின்றன. இவர்களில் 68% நிறுவனங்கள், தாங்கள் வேலைக்கு எடுக்கும் நபர் சமூக வலை தளங்களில் என்ன பதிவு செய்துள்ளார்  என்றெல்லாம் ஆராய்ந்து, சரியில்லாத பட்சத்தில் வேலை வழங்க மறுத்துள்ளன.

மேலும், 33% நிறுவனங்கள் எதிர்காலத்தில் இந்த முறையை பின்பற்ற முடிவு செய்துள்ளன. 75% நிறுவனங்கள் வேலைக்கு ஆள் தேட கூகுள்  போன்றவற்றை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. படிப்பு பற்றி பொய்யான தகவல்கள் கொடுத்திருப்பதன் மூலம் 50% பேருக்கு வேலை  மறுக்கப்பட்டுள்ளது. வலைதளத்தில் தகவல்களை கோர்வையாக பதிவு செய்யாததால் 50% பேருக்கு வேலை கிடைக்கவில்லை. தகவல் தொடர்பு  திறன் இல்லை என்ற காரணத்துக்காக வேலை மறுக்கப்பட்டுள்ளது. அதுபோல், கோபமூட்டும் வகையில் அல்லது பொறுத்தமற்ற வகையில்  தகவல்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்ட காரணத்துக் காக 47% பேருக்கும், முன்பு பணிபுரிந்த நிறுவனம் பற்றிய ரகசிய தகவல்களை  வெளியிட்டதற்காக 42% பேருக்கும் வேலை கிடைக்கவில்லை என்று இந்த ஆய்வு கூறுகிறது. அதுமட்டுமின்றி போதைப்பொருள், குடிப்பழக்கம் பற்றி  வெளியிட்டவர்கள் 38% பேரும், கிரிமினல் நடவடிக்கை உள்ளதாக 35% பேரும், முந்தைய நிறுவனம் பற்றி மோசமாக விமர்சித்தவர்கள் 32% பேரும்  வேலை வாய்ப்பை இழந்துள்ளனர் என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.


 ‘சமூக வலைதளத்தில் வெளியிட்ட தகவல்கள் வேலைக்கு விண்ணப்பித்தவரின் பின்னணி, தோற்றம், நிறுவன கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பாரா  என்பன போன்ற விவரங்களை அறிய உதவுகின்றனஎன பெரும்பாலான நிறுவனங்கள் ஆய்வின்போது கூறியுள்ளன. எனவே, வேலை தேடுபவராக  இருந்தாலும், வேறு நிறுவனத்துக்கு மாற முயற்சிப்பவராக இருந்தாலும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தங்களை பற்றிய  விவரங்களை பதிவு செய்யும்போது மிக கவனமாக இருக்கவேண்டும் என்று எச்சரிக்கிறது இந்த ஆய்வு நிறுவனம்.