கட்டி பிடித்து முத்தம் கொடுத்த திருச்சி ஜோசப் கல்லூரியின் உதவி பேராசிரியர்

Posted by Unknown on 12:04 PM with No comments
கட்டி பிடித்து முத்தம் கொடுத்த திருச்சி ஜோசப் கல்லூரியின் உதவி பேராசிரியர் மீது 2 மாதத்துக்கு பின் வழக்கு - சஸ்பெண்ட்

திருச்சி ஜோசப் கல்லூரி மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்

திருச்சி ஜோசப் கல்லூரிரி மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கொடுத்த புகா ரில், கமிஷனர் உத்தரவின் பேரில் 2 மாதத்திற்கு பின் உதவி பேராசிரியர் மீது போலீசார் வழக்கு பதிந் துள்ளனர்.

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் தஞ்சை மாவட்டம் கும்ப கோணத்தை சேர்ந்த 23 வயது மாணவி ஒருவர், பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி யிருந்தார். இதே கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி யாற்றி வருபவர் அந்தோணி சக்தி.

கடந்த 2 மாதம் முன்பு பிரபாவதிக்கு அந்தோணி சக்தி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். வகுப்பில் தனியாக இருந்தபோது கட்டி பிடித்து முத்தம் கொடுக்க முயன்ற போது, மாணவி தடுத்து வகுப் பறையை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார்.

அந்தோணிசக்தி மீது பிரபாவதி தரப்பில் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி, மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவிடம் புகார் கொடுத் தார். கமிஷனர் உத்தரவின் பேரில் கோட்டை போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவியிடம் உதவி பேராசிரியர் தவறாக நடக்க முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து கடந்த 2 மாதத்திற்கு பின் உதவி பேராசிரியர் அந்தோணிசக்தி மீது கோட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து உள்ளனர்.