வக்கீல்கள் அக்கறை காட்ட வேண்டும் சமூக பிரச்னைகள் குறித்து நீதிபதி சந்துரு பேச்சு
Posted by Unknown on 7:58 PM with No comments
வக்கீல்கள் அக்கறை காட்ட வேண்டும் சமூக பிரச்னைகள் குறித்து நீதிபதி சந்துரு பேச்சு
காரைக்கால் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஓய்வு பெற்ற சென்னை உயர்நீமன்ற நீதிபதி சந்துரு பேசியது:
நிலம் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்கள் மக்களை சுற்றி வளைத்துள்ளது. இவை ஐந்தும் கலந்ததுதான் உலகம் என திருமூலர் கூறியுள்ளார். ஆனால், இந்த ஐந்தையும் பாழ்படுத்தி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் செயல்பாடுகள் தற்போது அதிகரித்து வருகிறது. வளர்ச்சி என்ற பெயரில் ஐம்பூதங்களை பாதுகாக்காமல் அழிக்கும் செயலில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, மாலத்தீவு கடலில் உள்ளது. இந்தத்தீவு நிலத்தில், கூடுதல் மண் கொண்டு நிரப்பினால், கடல் தண்ணீர் தீவில் புகுந்துவிடாமல் தடுக்கலாம் என யாரோ சொன்னதை தவறாக புரிந்துகொண்டு, தமிழகத்திலிருந்து ஏராளமான மணலை மாலத்தீவுக்கு கொண்டு சென்றனர்.
போபாலில் நடந்த விஷ வாயு தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிழந்தனர். உறுப்புகளை இழந்தனர். ஆனால், இவர் களுக்கு இன்னும் முழுமை யான நிவாரணம் சென்று சேரவில்லை. நாம் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் கழிவுநீரை தேக்கி, சுற்றுசூழலை பாதிக்க செய்கி றோம். அதேபோல், விளைநிலங்களை வீணடித்து, மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் பகல் கொள்ளை குறித்து மக்களிடையே சரியான புரிதல் இல்லாமல் போய்விட்டது.
சமூகத்தில் நடைபெறும் பிரச்னைகள் குறித்து, வழக்கறிஞர்கள் அக்கறை செலுத்தவேண்டும். நம்மை தேடிவரும் வழக்குகளோடு, மக்களுக்கு பிரச்னைகள் ஏற்படுத்தும் வழக்குகளை நாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து தீர்வு காண பாடுபடவேண்டும். இவ்வாறு சந்துரு பேசினார்.
Categories: தமிழகம்
0 comments:
Post a Comment