போட்டா எடுத்து பேஸ்புக்குல விட்டுறுவேன் காதல் ஜோடிகளை மிரட்டிய நிருபர் கைது

Posted by Unknown on 11:54 AM with No comments
போட்டா எடுத்து  பேஸ்புக்குல விட்டுறுவேன்

காதல் ஜோடிகளை மிரட்டிய நிருபர் கைது

திருச்சி அருகே உள்ள சுற்றுலா தலமான முக்கொம்பில் காதலர்களிடம் படம் பிடித்து பேஸ் புக்கில் வெளியிடுவேன் என கூறி மிரட்டி பணம் பறித்த நிருபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி அருகே உள்ள சுற்றுலா தலம் முக்கொம்பு. இங்கு பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள் அதிகம் உள்ளது. இதனால் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இங்கு சுற்றுலா வருவது வழக்கம். காதலர்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

நேற்று மதியம், பொதுமக்கள் மற்றும் காதலர்கள் கூட்டம் ஓரளவு இருந்தது. அங்குள்ள பார்க்கில் பலர் உட்கார்ந்து பொழுதை கழித்தனர். அப்போது பொதுமக்கள் உள்ள பகுதியில் தன்னை போலீஸ் எனவும், காதலர்கள் உள்ள பகுதிக்கு சென்று நிருபர் என கூறியும் மிரட்டி பணம் பறித்துள்ளார்.

இதில் உச்சக்கட்டமாக காதலர்களிடம் செல்போனில் படம் எடுத்து பேஸ் புக் மற்றும் இன்டர்நெட்டில் உலா விடுவேன் என கூறி ரூ.100 முதல் ரூ.500 வரை பணம் பறித்துள்ளார்.

 ஒரு சிலர் போலி நிருபராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஒன்று திரண்டு அவரை பிடித்து அங்குள்ள புறக்காவல் மையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஜீயபுரம் போலீசார், அந்த வாலிபரை அழைத்து கொண்டு போலீஸ் நிலையம் சென்றனர்.

விசாரணையில் திருச்சி பெரியகடைவீதி, டைமண்ட் பஜாரை சேர்ந்த ஜமால் (33) என்பதும், திருச்சியில் மாத இதழ் ஒன்றில் குற்றம் குறித்த நிருபராக பணியில் உள்ளார் என்பதும் தெரியவந்தது.

மேலும் ஜமாலிடம் இருந்து அடையாள அட்டை, செல்போன் மற்றும் பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து முக்கொம்பு உதவி பொறியாளர் தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் டிஎஸ்பி கென்னடி உத்தரவின் பேரில், ஜமால் மீது இபிகோ 387 பணம் பறித்தல், 506 (1) மிரட்டுதல் போன்ற பிரிவின் கீழ் இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி வழக்கு பதிந்து ஜமாலை கைது செய்து விசாரித்து வருகிறார்.

சமீபகாலமாக திருச்சியில் வராத பத்திரிக்கையின் நிருபர்கள் என்று சொல்லி அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் முதல் தொழில்அதிபர்கள் வரை மிரட்டி நிருபர் என்று பணம் பறிக்கும் கும்பல் .அதிகரித்து வருகிறது.

நிருபர் என்று மிரட்டுபவர்களின் அடையாளை அட்டைகளை பரிசோதனை செய்தாலே அவர்கள் டூபாக்குர் நிருபர் என்பது உண்மையாகும் ஆனால் பெருபாலனோர் இதை செய்ய தயங்குகின்றனர். காரணம் அவர்களின் தப்பு வெளியே தெரிந்துவிடுமோ என்கிற கவலையில் அவர்களிடம் பணத்தை பறிகொடுத்து விடுகின்றனர்.
Categories: