உள்ளே.. போ - பாட்ஷா ரஜினி சொன்னது. - வெளியே.... போ - எம்.ஏ.எம் சாதிக் தம்பிகள் சொல்வது - பாகம் 1
Posted by Unknown on 4:30 PM with No comments
உள்ளே.. போ - பாட்ஷா ரஜினி சொன்னது. -
வெளியே.... போ - எம்.ஏ.எம் சாதிக் தம்பிகள் சொல்வது
செப்டம்பர் மாதம் ஆரம்பத்தில் 40 பேராசியர்களை எந்தவித பேச்சும் இன்றி வேலையை விட்டு வெளியேற்றியது.
அக்டோபர் மாதம் ஆரம்பத்தில் 15 பேர் வேலையிலிருந்து நீக்கியது.
மீண்டும் நவம்பர் மாதம் 05.011.2014 நேற்று 16 பேர் நீக்கமாம் -
இவர்கள் அத்தனை பேரும் 1998ல் கல்லூரி ஆரம்பிக்கும் போது செங்கல்சுமந்து கல்லூரி கட்டுவதற்கு காரணமாக இருந்தவர்கள்.
என்ன கொடுமை சார்.. இது..
யார் இந்த எம்.ஏ.எம். ( MAM )
திருச்சி பாய்லர் தொழிற்சாலையில் மேலாளராக இருந்தவர் எம்.அப்துல்மஜித் அந்த வேலை செய்து கொண்டிருக்கும் போதே எல்லோரையும் போல இவரும் ரியல் எஸ்டேட் தொழிலையும் சேர்த்தே பார்க்கிறார்.
அப்போது அவருடைய அண்ணன் சாதிக் சென்னை பல்கலைகழக்கத்தின் துணைவேந்தராக இருக்கிறார்.
பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக கல்லூரி ஆரம்பித்து காசு பார்க்க . கனவு காண்கிறார்கள் சகோதர்கள்.
அப்துல்மஜித்தின் இரண்டாவது மகன் கணிப்பொறிதுறையில் முனைவர் பட்டத்திற்கு படித்துக் கொண்டுயிருப்பதால் அவரை வைத்தே கல்லூரி ஆரம்பிக்க முடிவு செய்து ரியல் எஸ்டேட் தொழிலுக்காக சென்னை பைபாஸ் சாலையில் வாங்கி போட்டுயிருந்த 44 ஏக்கர் நிலத்தில் 1998ம் ஆண்டு 76 மாணவர்களை கொண்டு எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கிறார்கள்.
சிறப்பாக ஆள்பிடிக்க சிந்தனை செம்மல் சண்முகநாதனை அவர் அப்போது முன்னாள் அமைச்சர் பொன்னுசாமியின் கல்லூரியில் பணியாற்றுவதையும் பொருட்படுத்தாமல் எல்லா பொறியியல் கல்லூரிகளுக்கும் பொறுப்பாக புரோக்கர் வேலை பார்த்த சிவானி செல்வராஜ்க்கும் பொன்னுசாமிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை பயன்படுத்திக்கொண்டு சண்முகநாதனை தன்னுடைய எம்.ஏ.எம் கல்லூரியில் இயக்குநராக அமர்த்தினார்கள்.
அவருடைய அறிவை அனுணையை அனுபவத்தை பயன்படுத்தி அரசின் அதிகாரிகளின் உதவியோடு,
கல்லூரிகளுக்கு தேவையான வசதிகள் எதுவும் இல்லாமல் இருந்தும் கூட அனுமதி பெற்று தருவது என சகலவிதத்திலும் அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி ஒற்றை கல்லூரியாக இருந்த அந்த வாளாகத்தில் எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரிக்கு எம்.ஏ. மாலுக்கு பொறுப்பாளராகவும், எம்.ஏ.எம். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிக்கு மூத்தமகன் செயலாளர் எம்.ஏ. முகமதுநிஜாம், எம்.ஏ.எம். ஸ்கூல் ஆப் இஞ்சினரிங்க்கு மூன்றாவது மகன் எம்.ஏ.பீர்முகமது செயளாராகவும் பலிடெக்னிக் நர்சிங் கல்லூரி அனுமதி எல்லாம் வாங்கி கொடுத்தார். வதவதன்னு சாதிக் வம்சத்தின் எல்லா குழந்தைகளுக்கும் ஆளுக்கு ஒரு காலேஜ் அல்வா மாதிரி கிடைத்தது.
அதன் பிறகு சண்முகநாதன் தன்னுடன் வெளி கல்லூரிகளில் பணியாற்றிய தற்போது கஷ்டப்பட்டுயிருக்கும் ஊழியர்கள் பலபேருக்கு எம்.ஏ.எம். கல்விநிருவனத்தில் வாய்ப்பு கொடுக்கிறார்..
அவர் மூலமாக நியமிக்கபட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாவதை கருத்தில் கொண்டு இதை இப்படியே விட்டால் ஆபத்து என்று எண்ணிய மஜித்தின் குழந்தைகள் சாம்ராட் அசோகன் வாழ்ந்த சண்முகநாதனை 23ம் புலிகேசி வடிவேலு போல் டம்பியாக்கிவிட்டா்கள்.
புள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக நல்லது நினைத்த சண்முகநாதனுக்கு பிடரியில் விழுந்தது பிரம்ம அடி எாந்த வேகத்தோடு உள்ளே வந்தாரோ அதே வேகத்தோடு அவமானபடுத்தபட்டு அனுப்பப்பட்டார்.
இலட்சகணக்கான மாணவர்களின் ஆதர்ஷபுருஷராக இருந்த சண்முகநாதன் தான் கற்ற கல்வி வீணாகிவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தோடு மீண்டும் ஜெ.ஜெ.வென பொன்னுசாமியிடமே சரணடைந்துள்ளார்.
அவர் வெளியேறிய நேரத்தில் திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தின் துணைவேந்தராக இருந்த பொன்னவைக்கோ கல்லூரி நிர்வாகத்திற்கு அரங்காவலராகவும், ஆலோசகராகவும் வருகிறார்.
பொன்னவைக்கோவையும் மண்ணைக் கவ்வவைத்த மஜித் சகோதர்களின் தில்லாலங்கடி .....
திருவிளையாடல்கள் தொடரும்……
Categories: திருச்சி
0 comments:
Post a Comment